Wednesday, July 12, 2017

சேரிக்குணம்

நான் பகுத்தறிவளனாக இருப்பதால் குறிவைக்கப்படுகிறேன் கமல்ஹாசன் .. கலாச்சார சீரழிவென்பதை ஏற்க முடியாது என்பதும் இப்படி உடையணியலாமா என்ற கேள்விக்கும் சரியான பதிலை தந்தவர் சேரி பிகேவியர் (சேரிக்குணம்) என்ற ஆட்டக்காரி காய்திரியின் பேச்சுக்கு ஸ்ரிப்ட் திரைக்கதை என்னுடையதல்ல என சொல்லி போய்விட்டார் Mr.Big boss பிக்பாஸ் இதுதான் பதிலா.. சினிமாவோ சின்னத்திரையோ தமிழக மக்களின் வாழ்வில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்திருக்கென்றாலும் எங்கள் பண்பாட்டை சிதைத்துவிடவில்லையென இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதால் இது பற்றியெல்லாம் கவலையில்லை எத்தனையோ மாற்றங்களென்ற பெயரில் தாக்குதல் நடத்திய போதும் இன்னமும் நிலைத்துநிற்கிற பண்பாடு எங்களுடையது.. .. உடை விடயத்தில் யார் எதை உடுத்தவேண்டும் என்று நிர்பந்திப்பது அவரவரின் உரிமை என்பதை அறிவோம் யாரும் யாரையும் இதை உடுத்தவேண்டும் இப்படிதான் நடக்கவேண்டும் கட்டாயப்படுத்துவதில் உடன்பாடில்லை.. எனினும் பேச்சில் செயலில் அடுத்தவரை தாழ்வாக எண்ணும் பாசிச திமிர் போக்கை எதிர்க்க கேள்வியெழுப்ப உரிமை உண்டு .. அதென்ன சேரிக்குணம் .. சேரி என்றால் சேர்ந்துவாழும் வாழ்விடயத்தை குறிக்கும் அவ்வளவுதான் அக்ரஹாரத்தை பார்ப்பனச்சேரி என்றழைத்திருக்கவேண்டும்.. சேரி என்றாலே யாரோடும் சேராத தீண்டாதகவர்களின் உறைவிடம் போல் சினிமாக்களும் நாடகங்களும் மக்களிடம் மிகப்பெரியளவில் எடுத்துச்சென்றதும்.. அதை தொடர்ந்து அரசும் அதே மனப்பான்மையை கொண்டிருப்பதும் உண்மையில் வெட்ககேடானது.. .. உண்மையில் சேர்க்குணம்.. யாரையும் தீண்டதகாதவர் என பறையாத யாரையும் உதாசீனம் படுத்த்தாத அடுத்தவர் உழைப்பில் வாழாத யாரையும் ஏமாற்றி பிழைக்காத.. உயர்ந்த குணமுடையோர்.. பகட்டான வாழ்க்கை என்ற பெயரில் ஏமாற்றி வஞ்சித்து கூடஇருந்தே குழிப்பறித்து சகமனிதனை இழிவாக பேசாத உன்னதர்கள் குணம் #சேரிக்குணம். .. #கமல்_கறுப்புச்சட்டை..? .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment