Wednesday, July 12, 2017
தளபதி
பாமக.. அன்புமணி வகையறாக்களுக்கு..
முதலில் எதிரியின் பலமறிந்து அதோடு தன் பலமும் அறிந்து மோது என்பார்கள்.. எந்த தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியாத ..சிலதொகுதிகளில் குறிப்பிட்ட எழட்டு சதமானம் வாக்குகளும் பலவற்றில் கட்டிவச்சகாசும் (டெபாஸிட்) போகும் நிலைதான் தங்களுக்கு என்கிற போது சும்மாவாவது உள்ளேன் அய்யா சொல்வதற்காக திமுகவை விமரிசிப்பதும் ஒன்டிக்கொண்டி வரீயா என கேட்பதும் சிறுப்பிள்ளைதனமாக இருக்கிறது..
..
நீங்களும் தான் அன்புமணியை முதல்வராக ஏற்கிறவர்கள் கூட்டணிக்கு வரலாமென்று கூவி கூவி அழைத்தும் யாருமே சீந்தவில்லையே காரணம் புரியவில்லையா யாரும் தற்கொலைக்கு தயாரில்லை என்று பொருள்.. இப்போது அதிமுக பலவீனப்பட்டிருப்பதால் அதிலிருந்து ஏதாவது கிடைக்குமா என நினைத்து காத்துகிடப்பதும் மக்களிடம் வேறு ஏதாவது ரீதியில் ஆதரவு வருமா என எதிர்பார்ப்பதும் தவறில்லை.. அதிமுக இப்போது சிதறுண்டு இருந்தாலும் சில வருடங்களில் அது மெச்சபடாவிட்டாலும் சசிகலாவின் கீழ் ஒன்றாகும் அவர்களுக்கு அதைவிட்டால் வேறுவழியில்லை..
ஆனால் பாமகவிற்கு எந்தநிலையிலும் ஜாதிய வளையத்தை மீறிய வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.. காரணம் எளிது நீங்கள் உங்கள் ஜாதியை உயர்த்தி பிடிக்கிறபோது மற்றவர்கள் அவர்கள் தங்கள் ஜாதியை/பிரிவை உயர்த்திப்பிடிப்பது இயல்புதானே.. மற்றொரு விடயம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தான் கொண்டுவந்ததாக பேசிவருகிறீர் முதல் முதலில் ஆந்திர சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தேசம் முழுவதும் ஒரே எண்ணில் விளிக்கும் சேவை வேண்டுமென வழக்கே தொடர்ந்திருந்தால் அது நடப்பில் ஆக்கிய போது பதவியில் இருந்தீர் அவ்வளவுதான்..
அது கூட திமுக தயவில் கலைஞர் போட்டது என்பதை மறந்து பேசுகிறீர்.. அந்த எண் 108 வழங்கியது ராசா என்பதால் அவர் மார்த்தட்டிக்கொள்ளவில்லை இதெல்லாம் அரசு செய்யவேண்டியவை..
..
மற்ற கட்சிகளின் தயவில்லாமல் செல்வாக்குள்ள தொகுதிகள் என நம்பியவற்றில் கூட திண்டிவனத்திலிருந்து தர்மபுரி சென்று நின்றும் கட்டிவச்ச காசை பிடிங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார்கள். மற்றவர்கள் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட சீலம் அதை மாற்ற முடியாது ..
திமுகவோடு மோதுவதற்கு முன் பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள் கடைசியில் இருக்குமிடம் தெரியாமல் மதிமுகவை போல மெல்ல கரைய வேண்டிவரும்
..
இது பாமகவிற்கு மட்டுமல்ல முதல்வர் கனவோடு அரசியல் வண்டி ஏறும் அனைவருக்குமானது.. திரு.ஸ்டாலின் அரசியலுக்கு வந்தவுடனே முதல்வர் பதவியை குறிவைக்கவில்லை எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் அவர் மீதான மக்களின் அரசியல்பார்வை கனிவானதாக இருந்தது.. வாய்ப்பை எளிதில் தட்டி பறிக்கலாமென்ற நிலையிலும் மக்கள் தரவேண்டுமென காத்திருக்கிற அதுவரை பணிசெய்துகிடப்போம் என்கிற பெருமைமிகு செயல் அவரை உயர்த்திற்கு கொண்டுபோகிகிறது.. கலைஞர் மகன் என்பதால் தான் காலதாமதம் ஆனதே தவிர அது அவருக்கு மிகப்பெரிய அணுசரனையான நிலை கொண்டுவரவில்லை.. ஆலமர நிழலில் எவுதும் வளரமுடியாது என்கிற நிலைதான் இருந்தது.. காலம் செதுக்கி செதுக்கி பண்பட்ட தவைவராக .. வரும்கால வரலாற்றில் நிலைபெறுகிறவராக தயார்படுத்தி தந்திருக்கிறது..
..
அவசரபடுவோரே கேளுங்கள்.. பதவி தேடி வரவேண்டும் மக்கள் தரவேண்டும் தவிர நான் தான் அழகானவன் அன்பானவன் என கூவி திரிவதில் பலனில்லை...
மக்கள் தீர்மானிக்கவேண்டும்..
யார் அழகான அமைதியான அன்பான.. திறமையான தகுதியானரென்று..
புரிகிறதா..
..
#தளபதி_தமிழர்களின்_மகுடம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment