Monday, July 10, 2017
கோமாளிகள்
சைவ உணவு சாப்பிட்டும் கோபம் ஏன்..
கஞ்சா கருப்பு இடம் கமல்ஹாசன் கேள்வி..
அடிக்கடி கமலிடம் தலைகாட்டும் திமிர் இது..
அவரை சொல்லி குறையில்லை .. இவரைப்போல
நிறைய பேரை நாங்கள் கண்டிருக்கிறோம்.. பகுத்தறிவு பேசும் பழைமைகள்
அசைவம் தின்கிறவன் மிருகமென சொல்லவருகிறாரா.. அல்லது சைவ உணவை உட்கொள்கிறவன் சாது என நம்பவைக்க முயல்கிறாரா..
..
அசைவ உணவில் புரத சத்து அதிகம் வல்லமையை தரும் உடல் தினையளவை அதிகரிக்கும் உடல் உழைப்பு செய்வோருக்கு அதிக புரதம் தேவைப்படும் இவை சைவ உணவில் அதிகம் கிடைப்பதில்லை அதே நேரம் உணவு பழக்கமென்பது சிறு வயது முதலே பழக்கப்படுகிற .. நம்மை சார்ந்தவர்களின் உணவுமுறைகளை பின்பற்றி வருவது.. சைவம் சாப்பிடுகிறவனை உயர்ந்தவனாகவும் அசைவம் சாப்பிடுகிறவன் முரடனாக தான்தோன்றியாக அதிகம் உணர்ச்சிவயப்படுவனாக .. முட்டாளாக காட்ட நினைக்கும் பாசிசக்தின் குரலை .. அதே வழியில் வந்த கமல் சொல்வதில் எங்களுக்கு வியப்பொன்றும் இல்லை..
..
தோழர் மதிமாறன் அடிக்கடி சொல்வார் கமல் பெரியாரை முகமூடியாக கொண்டு நடக்கிறாரென்று ஆம் அவரது படங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள் புரியும்.. தசாவதாரத்தில் கூட பிராமணனை உயிரோடு கடலில் இறக்கியதால் தான் சுனாமி வந்ததைப்போல காட்சி இருக்கும் சுனாமி சிலையை கொண்டுவந்து கரைசேர்த்ததைப்போல காட்சி அமைந்திருக்கும்..
ஆனால் வெளியில் வேசம் கட்டுவதில் கைதேர்ந்தவரென்பதால் நாமும் கவனித்து சிரித்துவிட்டு நகர்ந்து செல்கிறோம்..
நிறைய முறை நான் பதிவிட்டிருக்கிறேன் கமல் சிறந்த நடிகர் திரையில் மட்டுமல்ல..
..
மற்றுமொரு திரை நட்சத்திரம் விசு ..
நான் ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்பேன் என்கிறார்.. யார் அவரை தடுத்தது..
அவரின் மணல்கயிறு படத்திலேயே 1967 க்கு பிறகு பேண்ட் சட்டை போடுறதையே விட்டுட்டேன் என்பார்.. நாமெல்லாம் பேண்ட் சட்டை போடுவதால் எரிச்சல் வந்தால் நாம் போடதான் செய்வோம்..
எப்போதுமே நன்றி கெட்டவராக தான் விசு இருந்திருக்கிறார்... அரட்டை அரங்கத்திலிருந்து TRP குறைந்ததால் கலாநிதிமாறன் அவரை நீக்கம் செய்தார் உடனே கலைஞரை சந்தித்து எனது இரண்டாவது பெண் திருமணத்தை வைத்திருக்கிறேன் இந்த நேரத்தில் என்னை நீக்கினால் பொருளாதார ரீதியாகவும் கஷ்டம் வருமென்ற போது கலைஞர்தான் அவருக்கு மேலும் ஒரு வருடம் வாய்ப்பை தரும்படி கூறினார்.. ஒரு வருடம் முடிவதற்குள் ஜெயலலிதா சந்தித்து ஜெயா டிவியில் ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.. அன்றைக்கு சசிகலா உதவி செய்யாமல் இருந்திருந்தால் இருக்குமிடமே தெரியாமல் போயிருக்கும்... ஆனால் சசிகலாவிற்கு எதிராக கம்பு சுத்தினார்.. காரியம் நடக்கிறவரை காலைப்பிடிக்கிற ரகம்..
..
நிறைய கோமாளிகள் வருவார்கள்
கண்டு ரசிப்போம்
அரிதாரம் கலைந்தால் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதை உணர்வோம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment