Sunday, July 16, 2017

நிழல் நிஜமாகாது

"கமலஹாசன் ஊழல்பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். கமலஹாசன் தனது திரைப்படங்களுக்கு முறையாக வரி செலுத்தனாரா என ஆய்வு செய்யட்டுமா?" அமைச்சர் வேலுமணி.. .. சினிமாதுறையினர் வரிஏய்ப்பு செய்வதென்பது காலங்காலமாக பேசப்பட்டு வரும் விடயம்தான் வெளிப்படையான ஊதியமோ வெளிப்படையான செலவினங்களோ வரையறுக்கப்படாத ஒரு துறையாக/தொழிலாக இருப்பதாலும் அதன் கேளிக்கைவரி என்பது டிக்கட்டில் அச்சிடப்பட்ட தொகைக்கே செலுத்தபடுவதாலும் இதன் கணக்குவழக்குகளை நிறைய குருமூர்த்திகளே கவனித்து வருவதாலும் அவ்வளவு எளிதில் சிக்கவைத்திட முடியாது.. .. முன்பெல்லாம் இவ்வளவுதான் வசூலிக்கவேண்டுமென்று வரையறை இருந்தது இப்போதெல்லாம் முதல் மூன்று நாட்களிலேயே மொத்த பணத்தையும் வசூல் செய்துவிடவேண்டும் என்கிற வேகம் எவ்வளவு வேண்டுமானாலும் டிக்கட் விலையை நிர்யணத்துக்கொள்ள தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதும் கணக்கில்லா கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது.. .. சிலர் சினிமாவில் தோல்வியடைந்தவர்கள் சோற்றுக்கே கஷ்டபடுவதாக சொல்கிறார்கள் ஆனால் திரைப்படங்கள் புதிது புதிதாய் வராமல் இல்லை அரசாங்கம் இதை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்ளாததும் கிடைக்கிறவரை பறித்துவிடவேண்டுமென்ற ஒரே நோக்கோடு செயல்படுகிறார்கள்.. மலையாளம் படங்களில் எல்லாம் செலவினங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு திரைப்படம் தயாராகிறது முழு ஸ்கிரிப்ட் முழுவடிவமும் தயாரித்தபின்பே படப்பிடிப்பு செல்வதும் திட்டமிட்டு செயல்படுவதும் நாயகன் நாயகிமார் சம்பளங்கள் வரையறுக்கபடுவதும் கச்சிதமாக நடக்கிறது.. ஆனால் தமிழ்த்திரை உலகில் இதெல்லாம் இல்லை கதை இல்லாமலே படப்பிடிப்பு செல்வதும் நாயகன் கால்ஷீட் கிடைத்தால் போதுமென்பதும் வரையறுக்கப்படாத செயல்களும் வீண்விரயங்களும் மக்கள்/ரசிகர்கள் தலையில் விழுகிறது.. .. சரி விடயத்திற்கு வருவோம்.. கமல் முறையாக வரிசெலுத்துவதாக தொடர்ந்து சொல்லிவருகிறார் அதை வருமானவரித்துறை ஏற்றுக்கொண்டிருக்கிறது .. அவர் தவறு செய்தாரென்றால் தாராளமாக விசாரணையை மேற்கொள்ளலாம்.. அதே போல் அமைச்சரும் தன் சொத்து கணக்குகளை வெளிப்படையாக அறிவித்து விசாரிக்க சொல்லலாம்.. .. அதுசரி கதாநாயகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களென உண்மையை சொல்வார்களா அல்லது இவ்வளவு கொடுத்தேன் என சினிமா முதலாளிகள் சொல்வார்களா.. இரண்டுமே நடக்காத போது விசாரித்து என்ன பயன் .. சினிமா நிழல் வியாபாரம்.. நிழலோடு மல்லுக்கட்டி ஒரு பயனுமில்லை. .. #நிழல்_நிஜமாகாது… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment