Friday, July 14, 2017

கமல்

கமலோடு நமக்கு கருத்துவேறுபாடுண்டு.. சிலவற்றில் அவர் நடத்தும் நாடக அரசியல் நமக்கு பிடிக்காமல் போனதுண்டு ஆனால் அவரை நாம் தரகுறைவாக விமர்சனம் செய்ததில்லை ஒருமையில் அழைத்ததில்லை.. ஆனால் உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன் அவனெல்லாம் ஒரு ஆளே இல்லை அவனுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்கிறார்.. மாண்பிமை மந்திரி மதிக்கெட்ட மந்திரியாக தெரிகிறார் இதுதான் இவர்கள் தகுதி.. .. இந்துமுன்னணியினர் கலாச்சார சீரழிவென போராட்டம் செய்கின்றனர்.. உண்மையில் நகைப்பிற்குரியதாக இருக்கிறது.. போராட்ட செய்கிறவனில் கொடி பிடித்து கோசம் போடுகிறவனில் பார்பன் இல்லை பாவம் சூத்திரபயல்கள் வழக்கம் போல் கம்பு சுத்துகிறார்கள்.. உன்னையும் சேர்த்து மிக கேவலமாக சேரிக்குணம் என பேசிய காய்த்ரிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை வீடு முற்றுகையிடவில்லை.. ஆனால் கமல் குறிவைக்கப்படுகிறார்.. அவரது படங்கள் வெளியாகும் தியேட்டர்களை முன் போராட்டம் நடத்துவோம் என்கிறார்கள் விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் செய்த அலப்பறையை போல இதுவும் கண்டிக்கதக்கது.. கருத்தை கருத்தை சந்திக்கவேண்டுமே தவிர அவரது வீடு அலுவலகத்தை தாக்க எண்ணுவதும் முயல்வதும் கையாலாகாத கோழைத்தனம் அறிவின் குறைபாடு.. .. எல்லா அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என கமல் சொன்னதில் என்ன தவறிருக்கிறது அதுதானே அச்சுறுத்தும் நிஜமும் கூட மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே அமைச்சர்களின் ஊழல்களும் பேசப்படுகிறது ஒவ்வொரு துறையிலும் மேல்மட்டம் தொடங்கி கீழ்மட்டம் வரை வெளிப்படையான கையூட்டு பகிரங்கமாக நடக்கிறது.. பத்திரிக்கைகள் வார சஞ்சிகைகள் தினம் தினம் தோலுரித்து காட்டுகிறது அப்போதெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டு கமல் சொன்னவுடன் ஏன் கோபபடவேண்டும்.. இல்லையென மறுத்திருக்கலாம் அல்லது பொய் செய்தி என்றோ அரசிற்கு களங்கம் ஏற்படுத்துகிறாரென்று தங்கள் தலைவியைப்போல அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கலாம் அதைவிடுத்து சினிமா வில்லனைப்போல அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதென சொல்வது வகிக்கும் பதிவிற்கு அழகல்ல.. .. தகுதியானவர்களை திறமையானவர்களை தேர்வு செய்யாமல் சொற்ப காசிற்கு வாக்குகளை விற்றதால் தமிழகம் படுகிறபாடு இவ்வளவு கேவலங்களை தமிழகம் என்றைக்குமே சந்தித்ததில்லை ஆண்மையற்ற அரசு எடுப்பார்கைப்பிள்ளையாக அதிமுக அமைச்சர்கள் மத்திய அரசின் பொம்மலாட்டத்திற்கு தகுந்தார்போல் ஆடுகிற கேவலமான ஆட்சி.. ஆனால் பாதிக்கப்படுவதென்னவோ.. தமிழக மக்கள்.. எத்தனைவிதமான இழப்புகளை சநிதித்திருக்கிறார்கள் .. நீட்..ஜிஎஸ்டி.. மின்சாரம் .. சொல்லிக்கொண்டே போகலாம்.. பினாமி அரசால் தமிழக மக்கள் நேரடியாகவே பாதிக்கப்படுகிறார்கள்.. ஆனால் பாப்பனர்கள் மறைமுகமாக இதன் அனுகூலங்களை அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள் .. இந்த கேடுகெட்ட ஆட்சியை கமல் என்றில்லை ஒவ்வருவரும் கேள்வி கேட்கவேண்டும்.. அந்த காலம் வருமென்றே எண்ணுகிறேன்.. ஒவ்வொரு தமிழனும் நேரடியாக பாதிக்க தொடங்கியிருக்கிறான்.. அரசின் செயல்களால் தமிழக அரசாங்கத்தின் நேர்மையற்ற திறமையற்ற செயல்பாட்டால் ஆளுமையின்மையால் .. தொடைநடுங்கும் செயலால் ..மத்திய அரசை தட்டிகேட்க முடியாத இந்த பினாமி அரசால் தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்திருக்கிறார்கள் .. இதெற்கெல்லாம் பதில் சொல்லியாகவேண்டும்.. .. கடைசியாக இந்த அமைச்சர் அன்பழகனை தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment