Monday, July 24, 2017

சசிகலா எங்கே..

சிறைக்குள் சசிகலா.. சிறையில் சசிகலா படு சௌகரியமாக வாழ்கிறார் வெளியே போய் வருகிறார் என்ற குற்றசாட்டும் அதன் பின்னணியில் பணம் பெருமளவு கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பதும் மெல்ல வெளிவந்து சமூக வலைதளங்களில் ஊடகங்களில் பெரிய விடயமாக பேசபடுகிறது..கமலில் பிக்பாஸில் கூட 5ஸ்டார் ஜெயலில் இதென சொல்லிய போது வெளியே இதைவிட பைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கிறதென சாடியதும் பரப்பரப்பாக பேசபடுகிறது.. .. கையூட்டு வாங்கியவரையோ கொடுத்தவரையோ இதுவரை விசாரணைக்கவில்லை கையூட்டு பெறவில்லையென சத்யநாராயணன் சொல்லியிருக்கிறார் அதைவிடுங்கள் இந்திய சிறைச்சாலைகள் நியாயமானதாக இருக்கிறதா சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா.. விசாரணைகைதிகள் என்ற பெயரில் காசில்லாதவன் நீண்டகாலம் சிறையில் கழிக்கவேண்டியிருக்கிறது.. ஆனால் பணமிருந்தால் வெளியில் கூட போய்வரலாம் அதிகாரியே அதற்கு துணைநிற்பார்.. இங்கே 10 நாட்கள் ப்ரோலில் சென்றுவர முடியவில்லை.. ஆனால் வலுத்தவன் ஷாப்பிங் சென்று வரலாம்.. இதுதானே இந்திய நீதி சிறைத்துறையின் லட்சணம்.. .. சரி இன்றைக்கு ஏதோ சசிகலாவிற்காக சட்டம் வளைந்ததாக கூக்குரல் இடுவோர் சங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரன் எனும் சுப்ரமணியனை சிறையில் அடைத்த போது பீ பேல கூட வாழையிலை தந்தது எந்த சட்டத்தின் அடிப்படையில் .. ஏறக்குறைய இதே போல் கொலை வழக்கில் கைதான முத்துராமலிங்க தேவரை பேண்ட பீயை அள்ள சொன்னார்களே அதேபோல சங்கரராமன் புகழ் சுப்ரமணியனை அள்ள சொல்லவில்லையே.. பாப்பானுக்கு ஜெயந்திரர் ஜகத்குரு என்றால் தேவர்இனத்திற்கு ..முத்துராமலிங்கம் குருதானே.. தெய்வப்பிறவியாகதானே நினைக்கிறார்கள்.. ஜெயேந்திரருக்காக உயர்நீதிமன்றமே ஜாமீன் வழக்கை கீழமை நீதிமன்றங்களிலோ அல்லது வழக்கை நடத்தும் நீதுமன்றத்திலோ விசாரிக்காமல் நேரடியாக உடனே விசாரித்தது விதிமுறைகளை மரபுகளை மீறிய செயல் இல்லையா.. மற்றவர்கள் வழக்காக இருந்தால் Trial court விசாரணை நீதிமன்றத்தை நாட சொல்வது என்ன நியாயம்.. .. சசிகலா என்றில்லை.. யாரெல்லாம் விதிமுறைகளை மீறுகிறார்களோ அவர்களெல்லாம் தண்டிக்கப்படவேண்டும் விதியை தளர்த்திய சட்டமும் அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.. ஆனால் எல்லோரையும் ஒருபோல பார்க்கவேண்டுமே தவிர சசிகலாவை பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதும் மற்றவர்களுக்கு விதிகளில் தளர்வை கொண்டுவந்து கொண்டாடுவதும் சரியா..? .. இங்கே நீதி.. யாருக்கானது.. #வலுத்தவனுக்கானதே_நீதி.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment