Tuesday, July 18, 2017

ஜோதிடம் ஆருடம்

நோயாளிகளை குணப்படுத்த ஜோதிடர்களை நியமிக்க மத்தியப்பிரதேச அரசு முடிவு... .. மடையர்கள் கையில் நாடு.. மூடநம்பிக்கை தன்னோடு நிறுத்திக்கொள்ளவேண்டுமே தவிர அதை மற்றவர்கள் மீது திணிப்பதென்பது ஏற்ககூடியதா.. ஜோதிடம் என்பது மிகச்சரியாக கணிக்ககூடியதல்ல.. அதோடு மனிதர்களின் உயிரோடு விளையாடுகிற செயல் இது.. ஜோதிடம் மந்திரம் என மக்களிடம் இருக்கும் தவறான மூட நமபிக்கைகளை நீக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு அறிவுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத நம்பிக்கைகளை திணிப்பதென்பது வெட்ககேடானது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி.. .. இன்றையஇளம் தலை முறையிடம் அறிவியலை கொண்டு சேர்க்காமல் ஆன்மீகம் மந்திரவாதி என புழுத்த பொய்களை கொண்டு சேர்ப்பது வளரும் தலைமுறையை விவரகேடாக மாற்றும் முயற்சி அவர்களுக்கு செய்கிற துரோகம்.. ஜோதிடம் என்பதே புரட்டு எத்தனை ஜோதிடர்கள் கணித்தவையெல்லாம் பொய்யாகி இருக்கிறது மனிதர்களை ஏமாற்ற பிழைக்க இவர்கள் செய்த ஏற்பாடு ஜோதிடம் மாந்திரீகம் பரிகாரம் ... .. உலகநாடுகள் Big bank theory சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொள்கின்றன பூமிக்கடியில் பெரும்பள்ளம் எப்படியென ஆய்வுகொள்கின்றன நாசா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி ஆய்வு மேற்கொள்கிறது வேற்று கிரகங்களில் மனிதன் வாழ முடியுமா என ஆய்வுகள் நடக்கிறது.. வேறு ஜீவராசிகள் பிற கோள்களில் வாழ்கிறதா என மனிதன் ஆய்வு செய்யும் வேளையில்.. கட்டம் அமைத்து சோலி உருட்டுகிறான் #இந்தியன்.. .. உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறவனை கட்டம் சரியில்லையென மருத்துவம் பார்க்காமல் அனுப்பிவிடுவார்களோ.. ஜோதிடத்தில் நோயாளிக்கு இருக்கிற ரத்தகொதிப்பு சக்கரை அளவு தெரியுமா.. என்ன மருந்து கொடுக்கவேண்டுமென சொல்வார்களா.. .. தந்தை பெரியார் சொல்வார்.. நாட்டு வைத்தியனை மறந்து இங்கிலீஷ் மருந்து வந்த பிறகுதான் நிறையபேர் பிழைத்தான் இல்லையென்றால் நாட்டுவைத்தியன் எதற்கு கொடுக்கிறான் என தெரியாமல் வாங்கி தின்று பரலோகம் போனான்.. கேட்டால் விதி முடிந்ததென சொல்வான்.. ஆங்கில மருத்துவம் வந்த பிறகு என்ன வியாதியென கண்டறிப்பட்டது அதற்கான சிகிச்சை தரப்பட்டது ..மீண்டும் நாட்டுவைத்தியனிடம் அனுப்பும் செயலாக தான் பார்க்கவேண்டும் அதைவிட இது மோசம்..சோலியை உருட்டி ஜோலியை முடிக்கிற கதையாக மாறும்.. .. முட்டாள்களோடு வாழ்வதென்பது எவ்வளவு கடினம்.. மடையர்கள் மூடர்கள் கையில் நாடு மதம் தலைக்கேறிய அரசாள்வோர் குடிமக்களை காவு கேட்கிறார்கள்.. மதத்தின் பெயரில் ஜோதிடம் மாந்திரீகம்..புனிதம் ..என மூடநம்பிக்கை விதைக்கிறார்கள் .. வரும் தலைமுறையை அறிவிலிகளாக்க.. மதத்தின் பெயரில் சடங்கென்றும் தம்பிராதாயமென்று அழித்தொழிக்க பார்க்கும் கயவர்கள் கூட்டம்.. .. மதநம்பிக்கையென்ற பெயரில் இதுபோன்ற அறிவுகெட்டத்தனத்தை ..மருத்துவர்கள், மெத்தபடித்தவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் வெகுண்டெழுந்து இந்த அரசிற்கெதிராக குரல்கொடுக்கவேண்டும்.. பெரியாரின் பணி எவ்வளவு உயர்ந்ததென்று வடமாநிலங்களின் தினம் தினம் நடக்கும் கூத்தை பார்க்கிற போது புரிகிறது..கிழவனின் தொண்டு.. .. #விழிப்புணர்வு_தேவை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment