Tuesday, July 11, 2017

ஈதல்

இரக்கமற்றுப்போன சமூகத்தில்.. இன்னமும் ஈரமிருக்கிறதா.. .. யார் குற்றம்.. எல்லாம் எனக்கானது என்ற பேராசையா.. நம்மில் ஈதல் இசைப்பட வாழ்தல் மறந்துபோனதேன்.. .. விளைந்து குவிந்து கிடந்த நெற்குவியலை குருவிகள் கொத்தி திண்ணும் ச்சோ என விரட்ட போனேன்.. அதற்கு சேர்த்துதான் விளைச்சல் என்றார் என் பெரியப்பன் .. .. ஆம் .. என்னிடம் தந்ததெல்லாம் எனக்கானது மட்டுமல்ல வறியவன் யாசிக்கும்போது கொடுத்துதவ.. என்னிடம் தரப்பட்டிருக்கிறது.. என்பது புரிந்தது.. .. மரைக்கால் அளவுகளில் கொடுத்தவனின் வழிவந்தவர்கள் கைப்பிடியளவில் கூட தந்துதவ மறுப்பதேன்.. பேராசையா.. மனம் மரத்துப்போனதா.. .. இன்னமும் கொஞ்சம் ஈரமிருக்கிறது.. வறண்டு போகாமல் இருப்பதை பகிர்ந்தளி.. உனக்கானது போக எஞ்சியதை கொடுத்துதவு.. காலம் கடந்தும்.. வாழ்வாய் இப்புவியில்.. .. எனக்காதெல்லாம் எனக்கானதல்ல என்றுணரு... .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment