Friday, July 7, 2017
திராவிடம்
அதிமுக அழிந்த கதை என்று விகடன் அட்டை படத்தில் அச்சிட்டிருக்கிறது.. அதிமுக தொண்டர்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக தான் உள்ளது..
அதிமுக கொள்கைக்காக துவங்கப்பட்ட கட்சி அல்ல அல்லது சமூகத்தின் நடக்கும் அநீதி கண்டு அதற்கெதிராய் போராட உருவாக்கபட்ட இயக்கமல்ல.. தனிநபரின் அபிலாஷைகளுக்காக .. தனிநபரின் விருப்புவெறுப்புகளுக்காக துவங்கப்பட்டது.. கவர்ச்சியும் பொய்யும் மூலதனமாய் தமிழனின் மூளை மழுங்க செய்யும் நிழலின் மீதான காட்சியும் ரசனையும் அதிமுக தொடங்க போதுமான காரணமாக இருந்தது..
..
சினிமாவில் கவர்ச்சிக்கு கிடைத்த புகழை மாலைநேர கேளிக்கையை நிஜமென நம்பிய மக்களின் அறியாமை கொண்டு..
நிழலின் ரசிகர்களின் உழைப்பில் ஆர்வத்தில் அவர்களை சிந்திக்கவிடாது செய்த கைங்கரியத்தில் உருவான கட்சி சினிமாவில் காணும் நடிப்பை .. நம்பிய ஏமாளித்தனத்தால் மிக பெரிய சக்தியை போல் ஊடகங்களும் ஆரிய பாசிசமும் நம்பவைத்ததில் கிடைத்த வெற்றி .. அது நீண்டநாள் நீடிக்காதென ஆரம்பம் முதலே அறிந்திருந்ததால் வியப்பொன்றும் இல்லை..
..
Mass personality வெகுஜன ஆளுமை.. திறமையால் வந்ததல்ல என்றாலும் கவர்ச்சி அரிதாரம் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட பொய் குதிரையை நம்புகிற கூட்டத்தால் மிகப்பெரிய ஆளுமையை போல் கட்டமைத்து காண்பிக்கபட்டது
காற்றடைத்த பலூன் என்றறியாமல் உயர பறந்ததை விண்நோக்கி பார்த்து நின்றிருந்தது தமிழகம்.. காற்று போன பிறகு தான் தெரிந்தது அது எதற்கும் உதவாதென்று.
மகோராவையும் (எம்ஜிஆர்) அதை தொடர்ந்து ஜெயாவையும் தூக்கி பிடித்து நின்றது ஊடகங்களும் பார்பனீயமுமே அல்லாமல் வேறொன்றுமில்லை.. தனி தலைவர்களிடம் அடிமையாய் சொரணையற்று விவாதிக்கவோ விவரிக்கவோ திராணியற்று .. மதி செயலிழந்த மூடர்களின் கூடாரம் சிதறிபோவதில் வியப்போ அதிர்ச்சியோ இல்லை...
..
முதலில் நிற்க இடமும் காலில் பலமும் வேணேடுமென்பதை மறந்து கரயான் அரித்துக்கொண்டிருக்கும் கட்டைக்காலே போதும் என நினைக்கிற கூட்டம் எப்படி கட்டிகாக்கும்..
ஜானகி ஜெயா அணியென பிரிந்தபோது ஜெயாவின் ராஜகுரு சோ சொன்னதை கேட்டதால் தான் ஜெயலலிதாவால் நீண்டநாட்கள் ந்ற்க முடிந்தது. கட்சியா ஆட்சியா என்று வருகிற போது கருணாநிதியை போல கட்சியை கைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் ஆட்சியை பிறகு பார்த்துக்கொள்ளலாமென்றார்.. திமுக ஒவ்வொருமுறை சிலரால் உரிமை கொண்டாடி போதும் கலைஞர் கட்சியை கட்டுகோப்போடு தன் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.. ஆட்சியில் இல்லாத போதும் கட்சி முக்கியமென்று செயலாற்றினார் அதைதான் ஜெயலலிதாவிற்கு சோ எடுத்துரைத்து கட்சி முக்கியமென்றார்..
..
ஆனால் இப்போது கட்சியை விட இருக்கிற காலத்தை அதிகாரத்தோடு கழிக்கவேண்டும் அதைவிட எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு கட்சியாவது கொள்கையாவது இருக்கிற வருடங்களில் நாலு காசு பார்த்து விட வேண்டுமென செயல்படுவோரால் கட்சி அழியதான் செய்யும்..
..
எந்த கொள்கையும் இல்லாதவர்களால் தொடங்கபட்ட கவர்ச்சி கோட்டை (அதிமுக)
அடித்தளம் வலுவிழந்ததால் விழுந்துவிடும் அபாயத்தில் .. இருக்கிறது..
ஆனால் சிலர் அதிமுகவை திராவிட இயக்கம் போல் காட்டி முடிந்தது பார் திராவிடமென கூக்குரலிடுகிறார்கள் உண்மையில் திராவிட இயக்கம் திமுகதான்.. மிக தெளிவான கொள்கைகளோடு நாட்டின் சமூகநீதியை நிலைநாட்ட மிக சரியாக திட்டமிடபட்ட வழியில் பயணிக்கிற இயக்கம் திமுக.. கொள்கை மறவர்களால் அவர்கள் தம் தியாகங்களால் தொடர்ந்து இயங்குகிறது அதனால் தோற்றாலும் அடுத்த நாளே சலவை செய்ய கரை வேட்டியோடு மக்களை கம்பீரமாய் சந்திக்க முடிகிறது. எத்தனை சூழ்ச்சிகள் பொய் வழக்குகள் ஊழல் குற்றம்சாட்டி பொய் பிரச்சாரங்கள். எல்லாவற்றையும் ஜனநாயகநெறிமுறைகளோடு சந்திக்க முடிகிறது..
தோற்றபோதும் கம்பீரத்தோடு எழுந்துநிற்க முடிகிறது.. திராவிடம் நின்று கதைக்கும்
ஆம்..திமுக #எஃகுகோட்டை
..
#திராவிடம் ..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment