Thursday, July 6, 2017
முத்தம்
முத்தம்..
அரும்புமீசை வளரும் போதில்
காதல் கொண்டு ஆற்றங்கரை படுகையில் அவளோடு கரம்கோர்த்து அலைந்த காலம்.. சிலுசிலு நீரோட ..
ஆற்றின் மத்தியில் கண் மூடி
வானம் பார்த்திருந்த நேரத்தில்
அருகமர்ந்து பிடிமண்ணை கையில் அள்ளி
கண்மீது போட்டு விழி திறக்காமல் இதழ்பதித்த முத்தம் எல்லாம்
நிச்சயமாய் காமத்தில் இல்லை..
..
பெரும் மழையில் நனைந்து உடல்நடுங்கி மரத்தடியில் நின்றவேளை.. மழைநின்று இலை சிந்தும் நீரில் நனைந்தபடி ..
தந்த முத்தம் ..
ஆடி பெருக்கில் காவிரி கிளைநதியில்
குருமுருட்டி கரையோரம்..
கூடிய கூட்டத்தில் நடுவில்
கண்ணசைத்து காற்றினிலே .. தந்த முத்தம்..
அக்ரஹார கோவில் சுவற்றில் கிறுக்குத்தனமாய் பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் கிறுக்கிநின்ற போது..
கண்ணில் காதல் கொண்டு
கருவிழி உருட்டி
கவிதையாய் தந்த முத்தம்..
..
ஆத்திகம் பேசும் பைங்கிளியிடம்..
ஆண்டவனை மறுப்பவனின்
அடியொற்றி கதைத்தபோதும்..
திராவிட பேசி..
சண்டையிட்ட போதும்..
பெரியவாளையா பெரியாரையா
அதையெல்லாம் தூக்கிவை..
அன்பில் கரைந்து ..
அமுதமாய் மொழி பேசி..
சிணுங்கி சிணுங்கி..
சில்லறையாய்.. சிரித்து
சேர்த்தனைத்து.. சிங்காரி தந்த
முத்தமெல்லாம்..
நிச்சயமாய் காமத்தில் இல்லை..
..
அன்பை மட்டுமே தந்தது
அதிலும்.. மதமேறிய சிலரின்
வறட்டு பேச்சை செவிமடுக்காமல்
காதலாய்..காதலாய்..
கனிந்து கரைந்து
உயிரில் கலந்து..
நெஞ்சில் .. மாறாத வடுவாய்
இன்றைக்கும் இருக்குதடி..
இன்றும் இதழோரம்..
சிலநேரம்.. தித்திக்கும்..
அன்று நீ தந்த
அன்பின் அடையாளம்..
முத்தம்....
..
அன்பில் விளைந்தது
#முத்தம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment