Wednesday, July 5, 2017

இசைகுயில்

தமிழ்த்தாய் வாழ்த்து.. நண்பரின் பதிவொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துபாடலை எம்எஸ்வி பாட மறுத்தது குறித்து கருத்தை பதிவு செய்திருந்தேன்.. அதில் சதாசிவ அய்யர் பாட கூடாதென கட்டளையிட்டதே பாட மறுத்ததின் காரணம் என எழுதியிருந்தேன்.. மறுத்தும் சரியென்றும் சிலர் உள்ளடப்பில் கதைத்தார்கள்.. .. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை கலைஞர் எம்எஸ்வியை கொண்டு இசையமைக்க பணித்த போதே திருமதி எம்.எஸ்.வி தான் பாடவேண்டுமென சொல்லியிருந்தார்..ஆனால் திருமதி எம்எஸ்வி அவர்கள் அதில் சிலவரிகளை சுட்டிகாட்டி ஆரியம்போல உலகவழக்கிழந்து அழிந்தொழிந்து என்று வருவதால் பாட முடியாதென சொன்னார்.. என்று சொல்லபட்டது அதற்கு முன்பே கலைஞர் ஆரியம்போல் உலகவழக்கிழந்த என்ற வாக்கியத்தை நீக்கிவிட்டுதான் இசையமைக்க விஸ்வநாதனிடம் சொல்லியிருந்தார்.. .. இசையரசியைப்பற்றி முதலில் சொல்லவேண்டும் தேவதாசி பிரிவை சேர்ந்தவர்..அவர்கள் தந்தை பெயரை இன்சியலாக போட்டுக்கொள்ளமாட்டார்கள் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதன் சுருக்கம் தான் எம்எஸ் என்றெழக்கப்பட்டார்.. அதாவது தாயாரின் பெயரிலேயே அவர்களது வழக்கப்படி அழைக்கப்பட்டார்.. பின்னாளில் தன் தந்தை சுப்ரமணிய அய்யர் என்று சொல்லிக்கொண்டார்.. அன்றைய காலகட்டத்தில் கோவில்களில் அமர்த்தபடும் பெண்களை அன்றைக்கு ஆதிக்கம் செலுத்திய பார்பனர்கள் கல்யாணம் செய்தோ அல்லது தங்களுக்கு இணங்கி இருக்கும்படியோ செய்தார்கள் அதனால் தான் தந்தை பெயரை அவர்கள் பயன்படுத்துவதில்லை.. திருமதி சுப்புலெட்சுமி அவர்களின் மேலாளராக பணி செய்த சதாசிவம் திரைப்படங்களில் நடித்த போது துணைக்கு வந்தவர் /அவரிடம் வேலைபார்த்தவர் சதாசிவ அய்யர் பிறகு அவரையே மணம் முடித்துக்கொண்டார்.. .. திரைப்பட தயாரிப்பாளர் மதுரை நாட்டாமை மல்லி தான் சேவாசதனம்" படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர்..(1937) 1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை....சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. பின்பு 1945ல் மீரா படத்தில் படத்தில் நடித்து பாடிய காற்றினிலே வரும் கீதம் பாடல் இன்றைக்கும் பிரசித்தம்.. அவரை உயரத்திற்கு கொண்டு சேர்த்தது.. .. ஆனால் தொடர்ந்து கர்நாடக இசையை மட்டும் பாடவேண்டுமென்றும் நீசபாஷை தமிழை பாட கூடாதென்றும் கட்டளையிடபட்டு ஏறத்குறைய கூண்டுக்குள் அடைத்துவைத்த கிளியைப்போலவே தன் வாழ்நாளை கழித்தவர் அந்த இசை பெருமாட்டி..நண்பர் சோமசுந்தரம் கூறியதைப்போல கொடுஞ்சூரன் கையில் சிக்கிய கிளியாகவே இருந்தார்.. .. மூன்று இசையரசிகளில் எம்.எல் வசந்தகுமாரி .. பட்டம்மாள் இருவருமே பார்பனர்கள் சுப்புலெட்சுமி மட்டுமே ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து வந்தவர்.. அதனாலேயே என்னவோ அவர் மீதான ஆதிக்கம் அதிகமாக இருந்தது.. மார்கழி மாதங்களில் சென்னை கச்சேரிகளில் விரும்பி நேயர்கள் தமிழை பாட கேட்டும் மறுத்திருக்கிறார்.. தமிழை பாட கூடாதென மறைமுகமாக அழுத்தம் தரபட்டதாக இசை விமர்சகர் சுப்புடுவே ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.. .. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சுப்புலெட்சுமி பாடவேண்டுமென கலைஞர் மிகவும் விரும்பியும் அது நடைபெறாமல் போனது.. அழித்தொழித்து என்ற வாக்கியங்களை எடுத்துவிட்டு பாட அழைத்த போதும் கூட தமிழ்த்தாய் வாழ்த்தை பாட தடை விதிக்கபட்டிருந்தது.. ஆனால் அந்த இசைகுயில் மீது கலைஞர் மிக மரியாதை கொண்டிருந்தார் .. தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதி வடிவம் தந்து சிலவற்றை நீக்கி சிலவற்றை சேர்த்த போது சிதைத்துவிட்டதாக சொன்ன கூட்டம் தான் .. இன்றும் நம்மோடு பகை கொண்டே திரிகிறது..ஆனாலும் தமிழ்த்தாய் பாடலை பாடும் போதெல்லாம் கலைஞர் நினைவு வந்து போவார் அதுதான் உண்மை.. .. குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா என்று முதல்முதலில் பாடியவர் கடைசிவரை.. குறைகளோடே வெளியில் சொல்லமுடியாமல் பாடி திரிந்த குயில்.. ஒடுக்கப்பட்ட குரல்.. இனிமையாய் நம்மை கரைத்துக்கொண்டே இருந்தது.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment