காதல்
நெஞ்சில்
ஆழமாய் பதிந்து
அன்பை பீறிட்டடிக்கும்
சிறு சிறு செயல் கூட
கவிதையாய் மின்னும்..
..
ஒற்றை மலர் கூட
வேண்டாம்
புன்னகையே மலராய்
வாசம் தரும்..
மேனி சிலிர்த்து
சில்லறென்ற காற்றை
சுவாசிக்கும்
உணர்வு வரும்..
..
பசியோ வறுமையோ
தோற்றுபோகும்..
அவள் சிணுங்கும்
ஒரு சிலிர்ப்பில்..
அழுக்கில்லா
மனதில்
அன்பில் வரைந்தது
வறுமையிலும்
ஜொலிக்கும்..
..
காதல் நிஜமெனில்
அவர் வாழ்வே கவிதை..
கவிதையாய் ஒரு வாழ்வு
காசில் கிடைப்பதில்லை..
..
#காதல்_அழகு..
..
தோழர். ஆலஞ்சி
மீள்.
No comments:
Post a Comment