Tuesday, August 1, 2017
நக்கி குடிப்பாய்
நக்கி குடிப்பாய் அதையே நல்லதென்றே சொல்வாய் .. புரட்சிக்கவிஞர் பாவேந்தர் ..
கிருஷ்ணசாமிக்கு எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்
..
நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்..இதில் கொடுமை என்னவெனில்
இதனால் ஆதாயம் அடைகிறவன் அமைதியாக இருக்கிறான்.. பாதிப்பிற்குள்ளாகிறவன் போராடுகிறான் அதுவும் வேண்டாமென்று..
போராடுவது அவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கட்டும் அதற்காக அவர் சொல்லும் காரணம் நம்மை சிரிக்கவைக்கிறது .. ஐந்து லட்சம் செலவு செய்து நீட் தேர்வு பயிற்சி எடுத்த மாணவர்களுக்காக இவர் பரிதாபப்பட்டு நீட் தேர்வை வேண்டாமென்கிறாராம்..
..
எனக்கு தெரிந்தவரை இவரின் சமூகத்தில் ஒரு சிலர் வேண்டுமானால் கொஞ்சம் வசதியாக இவரைப்போல இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால் வறுமையின் நிழலில் வாழ்வோரே அதிகம்.. தினக்கூலிகாக .. விவசாயத்தை நம்பி இருப்பவர்களாக சற்று வசதியாய் அரசுபணிகள் இருப்பவர்கள் அதாவது நடுத்தர குடும்பங்கள் இவர்கள் யாரும் ஐந்து லட்சம் செலவு செய்து நீட்தேர்வுக்கு தயாராக கோச்சிங் எடுக்கவில்லை.. இவர் சார்ந்த சமூகமென்றில்லை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் ஐந்து லட்சம் செலவு செய்ய (மருத்துவ நுழைவுதேர்வுக்காக) தயாரில்லை என்பதைவிட வழியில்லை என்பதுதான் நிஜம்..
..
சமீபகாலமாக கிருஷ்ணசாமியின் நடவடிக்கைகள் ஆள்வோருக்கு அதிக வெண்சாமரம் வீசுகிற செயலாக இருக்கிறது ஏதோ ஆதாயத்திற்காக இவர் இப்படி செயல்படுவதாகவும் .. அதற்காக தான் சார்ந்த சமுகத்தை பலிகடாவாக்க கூட தீர்மானித்து விட்டார் எந்தளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி வந்து நக்கி பிழைக்க தயாரென விமர்சனங்கள் வருகிறது.. ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்..
கிருஷ்ணசாமி தமிழக அரசியலில் எதையுமே சாதித்துவிட முடியாது தென்மாவட்டங்களில் வசிக்கும் பள்ளர்களின் செல்வாக்கை கூட இழக்க நேரிடும்.. மத்திய மாவட்டங்களிலோ வடமாவட்டத்திலோ அவர் சார்ந்த சமூக மக்களிடம் பெரியதாக செல்வாக்கோ வரவேற்போ இல்லை.. இருப்பதையும் கெடுத்துக்கொண்டு நடையை கட்டவேண்டும்..
ஆனால் நடையை கட்டும் போது நன்றாக செழித்திருப்பார்.. ஆனால் அவரது சமூகம் இன்னும் ..கீழே போயிருக்கும்..
..
நக்கி குடிப்பாய் அதையே நல்லதென்று சொல்வாய்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment