Sunday, July 2, 2017
அவசரமும் அவசியமும்
பாஜக ஆட்சிக்கு வந்த போது சொன்னது தான் நடக்கிறது..இன்னும் 50 ஆண்டுகளுக்கு நாம் இழந்த இடங்களை நிரப்ப போராட வேண்டிவரும்..
பாஜக ஆட்சிக்கு இந்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதுமாக பார்பனர்கள் உயர்பதவிகளை மிக சுலபமாக தகுதியிருந்தும் மற்றவர்களை புறந்தள்ளி அடைந்திருக்கிறார்கள்.. எல்லாநிலைகளிலும் (எல்லாபதவிகளும்) வாய்ப்பு தரவேண்டியவர்களை கீழே தள்ளி உயர்பதவிகளை எடுத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.. பேச்சில் செயலில் ஆணவத்தோடு
மற்றவர்களை தங்களை விட கீழானவர்களாக எண்ணும் அந்த பழைய திமிரோடு திரிகிறார்கள்..
..
எங்கே இருந்தானென்றே தெரியாதவனெல்லாம் தாங்கள் தான் தேசபற்றாளன் போல் பேச தொடங்கியிருக்கிறான்.. தெனாவட்டாக பேசும் பழைய பார்பன பேச்சு மீண்டும் துளிர்விடுகிறது..நான் பாப்பாத்தி தானென வீதியில் வந்து கூச்சலிட முடிகிறது..வீட்டில் சமைத்து தின்பவர்களுக்கு வரி கிடையாதென திமிரோடு கிண்டலாக பேசமுடிகிறது.. பார்பனர்களை தவிர மற்றவர்களை கோவிலில் சேர்த்தால் திருட்டுபோகுமென .. மற்றவர்களை திருடனாக சித்திரித்து பேசமுடிகிறது..
..
பசிக்காக எலிக்கறி தின்றவனை ருசிக்காக தின்றதாக சொன்ன பாப்பாத்தி ஜெயலலிதாவின் கருத்தை ஒட்டிதான் இன்று வீட்டில் சாப்பிடுகிறவர்களுக்கு வரி இல்லையென்ற ஆணவபேச்சும் இருக்கிறது
நாளை வீட்டு கக்கூஸில் போனால் வரி இல்லையென்று கூட சொல்வார்கள்..
..
தொலைகாட்சி விவாதங்களில் தான்தோன்றிதனமாக பேசுவதும் அதை சரியென கடைசிவரை தம்பிடித்து நிற்பதும் கேட்க சகிக்கவில்லை..
ஆட்சி அதிகாரம் கையிலிருப்பதால் இனி எதுவும் செய்யலாம் பேசலாம் .. அறிவிற்கொவ்வா கருத்துகளை பரப்பலாம் இடைமறித்தால் காட்டுகத்தல் கத்தி திசைதிருப்பலாம்.. அதற்கும் அசரவில்லையென்றால் மிரட்டலாம்.. இது தான் அவர்கள் அஜந்தா.. அதிகாரத்தில் இல்லாத போது திறக்கப்படாத கதவுகளை ஆயுதமாக கொண்டவர்கள்..இப்போது திறந்தவெளியில் பகிரங்கமாக திமிராக ஆணவத்தோடு கதைக்கிறார்கள் பொய்யை..
..
இது நீண்டநாட்கள் நீடிக்காது.. சிறுபான்மையினரையும் தலித்களையும்(கடைசாதிக்காரன்) குறிவைத்தவர்கள் இப்போது இடைசாதிக்காரன் மீதும் அம்புவீச தொடங்கியிருக்கிறார்கள் .. அவர்கள் நோக்கம் இதுதான் இடஒதுக்கீடென்ற பெயரில் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை இல்லாதாக்கி அதிலும் பார்பனர்களை நிரம்பவேண்டுமென்பதுதான் அதைதான் இப்போது others என்ற பெயரில் நுழைந்து விழுங்கபார்க்கிறார்கள்..
அப்போதே எச்சரித்தோம்..
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகி போனது..
..
எப்பாப்பானாயினும் தலையை தடவப்பாப்பானென்ற பாவேந்தர் வரிகள் நியாபகம் வருகிறது.. நாட்டை சேதப்படுத்தும் விசவிதைகளை தூவி வளர்த்து விடும் செயல் ஆபத்தானது.. பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தில் நாடு இருக்கிறது .. அவசியமும் கூட..
..
#ஒருங்கிணைந்து_வேரறுப்போம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment