Thursday, July 27, 2017
நிதிஷ் துரோகியாய்
நிதிஷ்..
அரசியலில் துரோகங்கள் அரியணைக்காக நடப்பதென்பது மன்னர் காலத்திலிருந்தே கண்டும் கேட்டும் வந்ததுதான்.. ஐந்துமணிக்கு விலகலும் 10 மணிக்கு யாரை வேண்டாமென வைத்து ஆட்சியை பிடித்தாரோ அவர்கள் ஆதரவு தருவதாக சொல்வதும்..
அவர்களோடு இணைந்து ஆட்சி அமைப்பது வெட்ககேடும் மரபு மீறிய செயலாகும்..
..
அரசின் தலைவர் பதவி விலகுகிறார் முறைப்படி விலகல் கடிதம் அளிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டிருகிகுறது மீண்டும் அவரே முதல்வராக வருவது எதில் சேர்த்தி.. இங்கே பன்னீர் ராஜினாமா செய்தவுடன் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கேட்டபோது மறுத்தவர்கள் மற்றொரு பிரிவிற்கு வாய்ப்பை தந்தவர்கள்.. லல்லுவிற்கு வாய்ப்பை தந்திருக்கவேண்டும்.. தனி பெரும் கட்சியான RJD ராஷ்ட்ரீய ஜனதாதளத்திற்கு வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்..
லாலுவால் பெரும்பான்மை நிரூபிக்கமுடியாமல் தேர்தல் நடத்துவது தானே சிறந்த ஜனநாயக முறை ..
மக்கள் வாக்களித்து நிதிஷ் தான் வேண்டுமென தீர்மானித்தால் வரட்டும்.. ஆனால் பாஜக எங்கெல்லாம் செல்வாக்கில்லையோ அங்கெல்லாம் புறவாசல் வழியாக ஆட்சி செய்ய பார்க்கிறது அவர்களின் #புறவாசல் பழக்கம் அரசியலிலும் கடைப்பிடிக்கிறார்கள்..
..
கூட்டணி தர்மத்திற்காக இதுவரை அமைதி காத்ததாக சொல்கிறார் நிதிஷ் .. கூட்டணிகளோடு கலந்துதான் எல்லா முடிவையும் எடுத்தாரா.. பண மதிப்பில் தொடங்கி குடியரசுத்தலைவர் தேர்தல் வரை கூட்டணி தர்மத்தை மீறியவர் ... உண்மையில் லல்லுவும் காங்கிரஸும் தான் அமைதி காத்ததே தவிர நிதிஷ் தர்மத்தை மீறியதோடு அல்லாமல் யாரை பிரதமராக ஏற்க முடியாதென மோடிக்கெதிராக லாலுவோடு கூட்டணி அமைத்தாரோ அந்த பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவை தந்து அரசியல் அயோக்கியத்தனத்தை செய்தவர்.. காவிகளோடு சேர்வதை பற்றி கவலை இல்லை அதை நேர்மையான முறையில் செய்திருக்கவேண்டும்.. மாறாக புற முதுகில் குத்தும் ராம வம்சத்தோடு இணைந்து தாக்கியது வெட்ககேடானது..
..
ஊழலுக்கெதிராக செயல்படும் நிதிஷ்க்கு வாழ்த்துகளை மோடி சொல்லியிருக்கிறார்.. ஊழல் குற்றசாட்டில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவோடு விருந்துண்ட ஜெட்லியை பதவி நீக்கம் செய்துவிட்டு பேசியிருக்கலாம்..இதற்கெல்லாம் காரணமான தான் பிரதமராக இருப்பது அவமானமென உணர்ந்து..
ராஜினாமா செய்துவிட்டு ஊழலுக்கெதிரான போரில் பங்குபெறலாம்..
..
பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர் நேர்மையைப்பற்றி பேசுவது வேடிக்கை..
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ் கூட கலந்தாலோசிக்கவில்லை என்பதும் .. கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்துகேட்காமல் ராஜினாமா செய்தது சலசப்பை உண்டாக்கியிருக்கிறது.. இரவுக்குள் தெரியும்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடக்குமென்று.. ஒருவேளை வெற்றி பெறலாம்.. ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்தாயிற்று.. நிதிஷின் துரோக வரலாறு காலம் கடந்தும் பேசப்படும்..
..
#நிதிஷின்_எதிர்காலம்_இனி_இறக்கத்தில்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment