Sunday, July 23, 2017

இனம்காண்போம்

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சீட் கிடைக்காவிட்டால் என்ன cbsc ல் படித்த மாணவர்கள் சீனாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ, பங்களா தேசத்திலிருந்தோ வரவில்லையே.. அவர்களும் தமிழக மாணவர்கள்தான் என்கிறார் கிருஷ்ணசாமி.. மாநில பாடத்தில் படித்தவன் யார்.. பாகிஸ்தான்காரனோ சைனாகாரனோ அல்ல.. #தமிழ்க்குடிப்பிள்ளைகள்.. இந்த மண்ணில் குழந்தைகள் அவர்களுக்கு அநீதி இழைக்கபடுவதை எதிர்காவிடினும் ஆதரிக்கிற அயோக்கத்தனத்திற்கு பெயர் துரோகம் கிருஷ்ணசாமி..பச்சைதுரோகம்.. .. மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் யாரென்று கூட தெரியாதவர் என நம்புவோம் cbsc ல் தமிழக மாணவர்கள் மட்டுமல்ல பிறமொழி பேசும் படிக்கிறார்கள் அவர்களுக்குரிய இடங்களில் நாம் கேட்கவில்லை மாறாக தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நமது குழந்தைகளின் உரிமையில் கை வைப்பதைதான் கேட்கிறோம்..1264 இடங்களில் 83 பேர் தான் சேர்ந்திருக்கிறார்கள் மீத இடங்களை நீட் தேர்வென்ற பெயரில் எடுத்துக்கொண்டார்கள் இதெல்லாம் இடஒதுக்கீட்டில் படித்த கிருஷ்ணசாமிக்கு புரியாமல் இல்லை என்ன செய்வது எதற்கு பயன்படாத அடிமாட்டை சொற்ப விலைக்கு வாங்குவதை போல விலைக்கு வாங்கபட்டிருக்கிறார்.. .. என்னதான் குளித்து சந்தனம் பூசி நின்றாலும் நாலு அடி தள்ளிதான் நிற்கவைப்பான் என்கிற நிலையிலும் இப்படி பேச வைத்திருக்கிறது பாருங்கள் அதில்தான் பார்பனத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது .. தன் சமுகத்திற்குமட்டும் ( பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் ) துரோகம் இழைக்கவில்லை மாறாக ஒட்டுமொத்த தமிழனத்திற்கே துரோகம் இழைக்கிறார்.. சென்ற ஆண்டு பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 67 பேர் மருத்துவத்திற்கு வந்ததாகவும் இந்த முறை ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பதாக கூறபடுகிறது.. இது தன் இனத்திற்கு அநீதி இல்லையா.. யாரெல்லாம் நீட் தேர்வை எழுத முடிகிறது பாருங்கள் நீட் தேர்வு பயிற்சிக்கென்று இரண்டு லட்சம் செலவு செய்ய தயாராக இருக்கிறவர்களோடு அரசுப்பள்ளி பயின்றவன் திறமையிருந்தும் செலவு செய்ய இயலாமையால் இடம் கிடைக்காமல் போகிறதே.. அது அவரின் வாய்ப்பை பறிப்பதற்கு சமமானதில்லையா.. தேசமெங்கும் ஒரே தேர்வு என சொல்லி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு வினாதாள்கள் .. சில மாநிலங்களில் கேள்விகள் எளிதாகவும் தமிழகத்திற்கு கடுமையானதாகவும் கேட்பதும் .. மாநில பாடத்தில் பயின்றவனுக்கு cbsc பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்பது எந்தவகை நியாயம்.. இதெல்லாம் அடிமாடாய் போன கிருஷ்ணசாமிக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை.. .. இப்போது தமிழினத்தின் மீதே பாய துவங்கியிருக்கிறார்.. இவர் சொம்பு தூக்குவதை விட நேரடியாகவே பாஜகவில் சேர்ந்துக்கொள்ளலாம் அப்படியிருந்தாலும் நிர்மலா சேகரின் அடிமையாகதான் வலம்வரமுடியுமே தவிர.. எதிர்த்து பேசவோ கருத்துச்சொல்லவோ முடியாது.. இன்னும் சில தினங்கள் போனால் பெரியாரை நேரடியாகவே தாக்கி பேசுவார் அதுதான் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணி அவ்வளவுதான் அதற்கு பிறகு தூக்கியெறியபடுவார் அப்போதும் நாம் தான் துணைநிற்கவேண்டிவரும்.. இவரை போன்ற இனதுரோகிகள் முதலில் விரட்டப்படவேண்டும்.. .. நீட் தேர்விற்கெதிராக திமுக மனித சங்கிலி போராட்டத்தை நடத்துகிறது.. யாருக்கோ என எண்ணாமல் தங்கள் பிள்ளைகளுக்காக பேரன் பெயர்த்திகளுக்காக சகோதரி சகோதரன்களுக்காக.. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க நினைக்கிற பழையபடி அப்பன் தொழிலையே மகன் மீது திணிக்க நினைக்கிற பாசிச கும்பலின் விசப்பற்களை பிடிங்க ..அணி திரள்வோம்.. .. நீட் தேர்வு ஆதரவாக பேசுகிற செயல்படுகிற கிருஷ்ணசாமி போன்றோரை.. இனம்கண்டு தூக்கியெறிவோம்.. #இனதுரோகிகளை_களையெடுப்போம்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment