Monday, July 3, 2017

அரசியல் அறிவிலிகள்

GST மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.. தமிழிசை.. சிங்கப்பூரில் எச்சில் துப்பினால் தண்டம் .. நிர்மலா சீதாராமன்.. பெரியார் கலைஞருக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை பானு.. திமுக காலாவதியான கட்சி .. இருக்குமிடமே தெரியாமல் விரட்டபட்ட பாமக அன்புமணி.. .. முட்டாள்களோடு பயணிப்பது எவ்வளவு கஷ்டமான காரியம்.. கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் கூசாமல் பொய் சொல்ல எப்படி முடிகிறது.. கொஞ்சமே கூட சிந்தனை திறன் இல்லாததவர்களால் நாடு சீரழிகிறது.. மதமும் தங்கள் ஜாதியும் உயர்ந்தென நினைக்கும் மனநோய் அரசாள்வோரிடமும் அரசை பின்துணைப்போரிடமும் மூர்க்கத்தனமாய் இருக்கிறது .. பெரியாரும் கலைஞரும் அரசியல் நாகரீகம் தெரியாதவர்களென்று சொல்லிவிட்டு இங்கே இருக்கமுடிகிறது பாருங்கள் அதுவே சாட்சி.. வடமாநிலங்களில் தலைவர்களை மட்டமாக பேசிவிட்டு வீடுதிரும்ப முடியாது.. பெரியாரை பற்றி இந்த புல்லுக்கு என்ன தெரியும்.. சிறு குழந்தைகளை கூட வாங்க என்று பேசுகூடியவர் பெரியார்.. மேடை ஏறினால் மட்டும் தான் இந்த மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற பாசிசத்தை வர்ணாவை மிக கடுமையாக எதிர்த்தார் அவர் எதையெல்லாம் எதிர்த்தாரோ அதெல்லாம் சரியென்றே அவரின் மறைவிற்கு பிறகும் நமக்கு பாடம் புகட்டிக்கொண்டே இருக்கிறது.. கலைஞரைப்போல அரசியல் நாகரீகம் தெரிந்தவரை தமிழகத்தில் பார்க்கமுடியாது.. எதிர்ப்பில் கடுமையாக இருந்தாலும் எத்தனை விமர்சனங்கள்.. பொய் பிரச்சாரங்கள் என புறம்பேசி திரிந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாகவோ.. அல்லது கண்காட்டி தாக்குதல் நடத்தவோ பணித்ததில்லை.. ஜெயலலிதா போன்று மிரட்டவில்லை.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பேராற்றல் இருந்தது.. .. பாஜகவினரை பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை அவர்களுக்கு அதிகாரம் இருப்பதால் சொல்வதெல்லாம் உண்மை என மக்கள் நம்பிவிடுவார்களென்ற அகந்தை சிங்கப்பூரில் குப்பை கொட்ட முடியாதாம்.. சிங்கப்பூர் சாலைகள் போல இங்கே வைத்திருக்கிறீர்.. அல்லது இங்கே உள்ளது போல டோல்கேட் என பகல்கொள்ளை அங்கே நடக்கிறதா.. மிக குறைவாக எரிப்பொருள் (பெட்ரோல்டீசல்) விலையுள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.. 200% வரியெல்லாம் இல்லை.. அதைவிட அங்கே இரண்டுவிதமான நீதி இல்லை.. .. ஜாதி போதகர் என்ன சொன்னாலும் யாரும் செவிமடுக்கவில்லை என்பதால் எதையாவது உளறிக்கொட்டி நானுமிருக்கிறேன் உள்ளேன் அய்யா போடுகிறார்.. சிலர் சிறந்த நிர்வாகி என தூக்கிபிடிக்கிறார்கள்.. தன்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய தர்மபுரி மக்களுக்காக என்ன செய்தார்.. அதைவிட பாராளுமன்றத்தில் அதிகம் மட்டம் போட்ட முதல் நபர் இவர்தான்.. பாராளுமன்றத்தை சந்திக்கவே அஞ்சுகிற.. இவர்தான் ஒத்தைக்கு ஒத்தை வரியா என சொல்லி திரிகிறார்.. பலம் பொருந்தியவன் பலவீனமானவர்களோடு மோதுவதில்லை என்ற நியதி அறியாமல் .. கலாவதியான சீட்டை வைத்துக்கொண்டு வண்டிக்கி காத்திருக்கிறார்.. .. சமீபகாலமாக வெற்றுகூச்சல் காதுசவ்வை கிழிக்கிறது.. மீடியா வெளிச்சம் இருக்கிறதென்பதாலேயே எதைபேசினாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்பார்களென்ற எண்ணமும் .. தங்கள் நிலைநிறுப்பை காட்டிக்கொண்டே இருக்கவேண்டுமென்ற நினைப்பும் அருவருக்கதக்க பேச்சுகளை சகிக்கமுடியாத பேத்தல்களை அள்ளிவீச வைக்கிறது.. முதலில் நிற்க பழகுங்கள் கால் தரையில் வலுவோடு நிற்கிறதா என பாருங்கள்.. அடுத்தவர்(பிரதானகட்சிகள்) துணையின்றி எழுந்து நிற்க முடியுமா என யோசியுங்கள் பிறகு கதைக்கலாம்.. .. நிற்கவே முடியாதவன் ஓட்டபந்தயத்தில் கலந்துகொள்ளகூடாது. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment