Sunday, July 30, 2017
திருக்குறள்
திருக்குறளை முழுவதுமாக பகுத்தறிவு நூலென சொல்லமுடியாது .. கிருஷ்ணசாமி..
ஏன் சொல்லணும் ..
எல்லா மனிதருக்குமான நூல் ..
வேதங்கள் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்கு அதாவது தன்னை நம்புகிறவனுக்கு வழிகாட்டும் என சொல்கிறது ..
அது கூட குறிப்பிட்ட பிரிவினரை முதன்மைபடுத்தும்.. ஒரு சிலரை மட்டுமே மேன்மையானவர்களாக படைத்திருப்பதாக சொல்லும்..
..
ஆனால் குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்...
என சொல்லும்..
இவ்வளவு தான் வித்தியாசம்..திருக்குறள் காலம் கடந்தும் நெறி பேசுகிற நூல்.. வாழ்வியலின் எல்லா அம்சங்களையும் அலசுகிற ஆய்வு செய்கிற நூல்.. அவ்வளவுதான் பகுத்தறிவை பேசாதவர்களுக்கும் புரிதலை தந்து பேசவைக்கும்..
..
திருக்குறளைப் பற்றி அறிஞர் அண்ணா
#திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும்.
திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனீயம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் , மூட நம்பிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள் ..என்றார்
..
திருக்குறளை சிலர் இறைவனின் தூதர் அருளியதென்றெல்லாம் சொன்னார்கள் காரணம் நிறைய தூதர்கள் வந்திருக்கிறார்கள் ஏன் இறைத்தூதராக இருக்ககூடாதென வினாக்கள் எழுந்து அது சபைகளில் விவாதிக்கப்பட்டதுண்டு புலால் உண்ணாமை கூட அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இறைவனின் சட்டமாக இருந்திருக்கலாமென்றல்லாம் சொன்னார்கள்..
திருக்குறளை விளக்கமெழுதியவர்கள் பெருந்தகைகள்..
மு.வ. பரிமேலழகர் போன்றோர் மதத்தோடு இணைத்தும் கலைஞர் பகுத்தறிவோடு ஆய்ந்து சொன்னார்கள்..
..
இறுதியாக ஒன்று..
திருக்குறள் பகுத்தறிவு பேசுகிறதா என்பதைவிட
பகுத்தாய படவேண்டிய நூல்.. அனைவருக்குமான அற்புதமான வாழ்வியலை போதிக்கும் மறை..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment