Sunday, July 30, 2017
கலாம்
மீண்டும் சர்ச்சையில்..
கலாம் நினைவகத்தில் வீணை சிலக்கருகே கீதையோடு குர்ஆனையும் பைபிளை வைத்தது சர்ச்சையாகி இந்து அமைப்பினரின் எதிர்ப்பால்
அகற்றப்பட்டது..
வைத்தது கலாமின் சகோதரரின் பேரன் சலீம்..
நன்று..
..
சில வினாக்கள்.. கலாமை இந்துவின் காவலராக்க நினைக்கிறார்களா எனில் மகிழ்ச்சியே..
ஆனால் குர்ஆனையும் பைபிளை வைக்க கூடாதென சொல்ல இந்து அமைப்புகளுக்கு என்ன அதிகாரமிருக்கிறது.. யார் அதிகாரத்தை தந்தது
இதேபோல்
இஸ்லாமிய கோட்பாடுகளுக்கெதிராக கலாம் சிலை வைக்கப்பட்டிருக்கிறதென இஸ்லாமிய அமைப்புகள் போராடினால் சொன்னால் ஏற்பார்களா..
..
முதலில் கலாமிடம் பின்பற்ற வேண்டியது மதம் சார்ந்த விடயங்கள் அல்ல மாறாக அறிவியல் சார்ந்தும்.. கல்வி சமூக ஒற்றுமை அறிவின் தேடல் போன்றவையே தவிர மதமேறிய மூடபழக்கங்கள் அல்ல.. மதத்தை யார் பேசினாலும் அது வீணான விவாதித்திற்கும் முட்டாள்தனமான செயல்களுக்கும் கடைசியில் கலவரத்துக்குமே வழிவகுக்கும்.. அது தான் நடக்கிறது.. ஏற்கனவே நான் குறிப்பிட்ட போது கொதிந்தெழுந்த சிலர் கலாமை சிறுமைபடுத்துவதாக கூட சொன்னார்கள் அவர்களின் மாற்று சிந்தனையை கருத்தை உடன்படாவிடினும் மௌனமாய் கடந்தேன்..
கலாம் தேசத்தின் அடையாளமாக ஆக்க நினைத்தால் அவரின் விஞ்ஞானத்தை அறிவியலை கொண்டு அவர் நடத்திட்ட அறிவுசார் விடயங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கவேண்டுமே தவிர பகவத்கீதையையோ மதம் சார்ந்த அவரின் பொன்மொழிகளையோ ..?அல்ல..
..
முன்னாள் குடியரசு தலைவர் முகமது இதாயத்துல்லா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆனால் அவரின் மரணத்தின் போது அவரை எரிக்கவேண்டுமென அவரது குடும்பத்தார் கேட்டுக்கொண்டார்கள் அதன் படி அவரது உடன் தகனம் செய்யப்பட்டது..அவரது துணைவியார் பஷ்பா அவர்கள் இந்துமத கோட்பாட்டின் படி வாழ்ந்தார் என சொன்னார்.. ஆனால் கலாம் எப்படி வாழ்ந்தாரென தெரியாது அது அவரது சொந்த விடயம் ஆனால் இஸ்லாமிய சடங்குகளோடு புதைக்கப்பட்டார்.. இன்று அவரின் சிலை அருகே கலாம் குடும்பத்தார் குரானை கொண்டுவைத்தவர்களுக்கு சிலையே கூடாதென்பது தெரியாதா.. சிலை வைத்ததை எதிர்த்திருந்தால் இன்று கீதை அருகில் இருக்கிறதென சங்கோசப்படலாம்..
..
ஒரு விடயம் சிலை வைப்பது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல இவர்கள் கலாம் சிலை அருகே வைத்திருக்கும் கீதைக்கு எதிரானது.
கீதையில் 7:20 ல்
// எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்..
..
கடைசியாக கலாமை அறிவியலோடு பாருங்கள் சமயநெறிகளோடோ சடங்குகளோடோ மூடபழக்கவழக்கத்தோடோ அல்ல
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment