Friday, July 28, 2017

கலாம் ஆர்எஸ்எஸ் அடையாளம்

அப்துல்கலாம்.. அரசியல்.. சிலர் அப்துல் கலாம் நினைவு மணிடபத்திற்கு தமிழகமே திரண்டிருக்கவேண்டாமா என கேட்கிறார்கள்.. கலாமோடு நமக்கு நிறைய கருத்துவேறுபாடு உண்டென்றாலும் கலந்துக்கொண்டிருக்கவேண்டுமென சொல்கிறார்கள் .. .. கலாம் மிகவும் ஏழ்மையான மீனவ இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து தன் திறமையால் இந்தியாவின் உயரிய பதவிகளை வகித்தவர் மாணவ சமுதாயத்தை கனவு காண சொன்னவர்.. இந்திய ஏவுகனைகளின் தந்தை என்பதில் எல்லாம் விமர்சனமோ மாற்று கருத்தோ இல்லை. ஆனால் அவர் பெரியளவில் காவிகள் மற்றும் ஒருசிலரை தவிர மற்றவர்களால் கொண்டாடபடவில்லையே.. எல்லோருமே மௌனமாய் கடந்து போகிறார்களே ஏன்.. அவர் பிறந்த சமுதாயமே அவரை கொண்டாடவில்லையே.. சாதாரணமாக உயரத்திற்கு வரும் வரை எவரையுமே கண்டுக்கொள்ளாத அவர்களின் சமூகம் .. உயரத்தை எத்தியவுடன் கொண்டாடுமே அது கூட கலாம் விடயத்தில் நடக்கவில்லையே ஏன்..? .. எந்தவொரு மனிதனும் தான் நம்புகிற கோட்பாட்டில் (கொள்கையில் அல்ல) நம்பிக்கையாளனாக இருக்கவேண்டும்.. அது எந்த கடவுள்,மதம் பிரிவு ஜாதி அல்லது கடவுள் மறுப்பு எதுவாக இருந்தாலும் அந்த கொள்கையில் உறுதியும் அதோடு அதன் கோட்பாட்டில் தடம்பிறழாமலும் இருக்கவேண்டும் ஆனால் இவர் இஸ்லாமிய மத கோட்பாடுகளை விட இந்துத்துவ கோட்பாடுகளை நேசித்தார் அதில் தவறில்லை ஆனால் அதை நேர்மையோடு பின்பற்றி இருக்கவேண்டும்.. அது இல்லாததால்தான் முஸ்லிம்கள் அவரை சக முஸ்லிமாகவே பார்க்கவில்லை.. அதிலும் சில அமைப்புகள் மிக கடுமையாக கூட விமர்சித்தன .. .. அவரது அரசியல் பார்வை அப்பட்டமான அடிபணிதல் அல்லது ஆர்எஸ்எஸ் சொல்படி ஆடும் இந்திரன் அவ்வளவுதான்.. குஜராத் இனபடுகொலையை அதை யார் செய்திருந்தாலும் கலவரத்திற்கு காரணம் முஸ்லிம்களே என்று நம்பியிருந்தாலும் கூட குடியரசுத்தலைவராக இருந்தவர் அதை கண்டித்திருக்கவேண்டும்.. ஆர்எஸ்எஸ் கூடாரத்திலேயே வளர்ந்து வந்த வாஜ்பாய் கூட மோடியை பார்த்து #அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் என சொன்னார்.. குஜராத்தின் கசாப்கடைகாரனென ஊடகங்களில் சில விமர்சித்தன ஆனால் கலாம் மௌனம் காத்தது எந்த வகை நியாயம்.. பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால் அன்றைய அரசை கலைக்க வலியுறுத்தியிருக்க வேண்டும் . ஆர்எஸ்எஸ் சித்தாந்த்தை சுமந்து திரிந்தவராக தான் தெரிந்தார் அதிக சுமையை சுமக்கும் என அறிந்ததால் தான் அவரை குடியரசு தலைவராக கூட ஆக்கி அழகுபார்த்தது.. .. கலாம் நினைவு மண்டப திறப்புவிழா அன்று நீட் தேர்வுக்கான மனிதசங்கலியை நடத்தி விழாவை கொண்டாடாமல் தடுத்ததென்கிறார்கள்.. முதலில் அவர் கொண்டாட படவேண்டியவரா என்பதிலேயே வேறொரு பார்வை இருக்கிறது மற்றொன்று கனவு கண்டுக்கொண்டிருந்த மாணவர்களின் எதிர்காலம் களவாடப்பட்டதை கலாம் நினைவு நாளில் எதிர்பது கூட அவருக்கு செய்கிற அஞ்சலிதான்.. ஆர்எஸ்எஸ்காரனின் கைபாவைக்கு பகவத்கீதையோடு வீணை சிலை மிக பொருத்தம்.. வாழ்ந்த போது அவர் தூக்கிபிடித்த ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மறைந்தும் சிலையாய் செய்கிறார்.. அவ்வளவுதான்.. .. #கலாம் இஸ்லாமியர்களின் தமிழர்களின் அடையாளமல்ல.. #ஆர்எஸ்எஸின்_அடையாளம்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment