Saturday, July 29, 2017
கலைஞர் தமிழகம் செய்த தவம்
#முத்தமிழ்_அறிஞர்..
..
ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக தொடர்ந்து 49 ஆண்டுகள் இந்தியாவில் உலகில் எங்குமே நடந்திராத அற்புதம்.. ஒரு அரசியல் கட்சியை/இயக்கத்தை கட்டிகாப்பதென்பது அதிலும் கட்டுகோப்பாக நடத்துவதென்பது எல்லோராலும் முடியாது .. எத்தனை விமர்சனங்கள் கூட இருந்தே குழிப்பறித்தவர்கள்.. நம்பி கழுத்தறுத்தவர்கள் முதுகில் குத்தியவர்கள் ..தொடர் தோல்விகள்..அத்தனையையும் தன் அசாத்திய திறமையால் மாறி கடந்து திமுக எனும் கட்சியை இன்றும் மிகப்பெரிய கட்சியாக இயக்கி வருகிற பெருமகன் கலைஞர்..
..
1980 களில் மாணவனாய் திராவிட இயக்கத்தின் மீதான காதல் வர தொடங்கிய நாள் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.. தஞ்சை நடராசனின் வெற்றிக்கான பிரச்சாரத்திற்காக திலகர் திடலில் பொதுக்கூட்டம்.. நேரமாகி் கொண்டே இருக்கிறது.. நள்ளிரவை தாண்டி மக்கள் காத்திருக்கிறார்கள்.. அந்த மக்களோடு மக்களாக அமர்ந்திருக்கிறேன் நித்திரை கண்களை தழுவுகிறது.. இதோ வந்துவிடுவாரென சொல்லி சொல்லி கடைசியாக விடிய சிலமணிநேரமே இருக்கிற வேளையில்.. முகில் கிழித்து வரும் முழுமதிப்போல .. கூட்டத்தை கிழித்துக்கொண்டு வருகிறது தமிழ்.. வானம் அதிர முழக்கம்.. கலைஞர் வாழ்க ..வாழ்க..
முதன் முதலாய் சங்கத்தமிழை பார்க்கிறேன்.. கரகரக்குரலில் பேச தொடங்கியதும் ஆர்ப்பரித்த கூட்டம் அமைதியாய் செவிமடுக்கிறது..
அன்று தொடங்கி இந்த பெருமகனை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன் .. திகட்டதாக சுவையாக..
..
என்பதாண்டு பொதுவாழ்வில் .. ஐம்பதாண்டுகள் தன்னை சுற்றி.. தன்னை மட்டுமே சுற்றி அரசியலை சுழல செய்த ஆளுமை இதுவரை தேசம் கண்டிராதது.. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் செய்தி தரும் கருத்து கரூவூலம்.. இங்கே கலைஞரை எதிர்த்தோ ஆதரித்தோ தான் அரசியல் செய்யமுடியும்.. இல்லையெனில் யாரென்று தெரியாமல் போவார்கள்.. என்ன அதிசயம்.. இங்கே எதிரிகளுக்கு சேர்த்தே இவர் உழைக்கிறவர்.. இவர் அசைவில் தான் தமிழகமே இயங்கியது இயங்குகிறது.... இவர் சிந்தித்ததை தான் தமிழக அரசியல் கட்சிகள் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டது..
இங்கே எல்லோருக்கும் அரசியல்வாழ்வு தந்தவர்..
..
இதோ இப்போது உடல்நலிவுற்று.. பேச்சாமல் இருந்தும்.. அபார நினைவாற்றலால் தமிழக அரசியலை ஆட்சி செய்தவர் முதுமையால் நினைவாற்றல் தடுமாறுகிற போதும்.. இப்போதும் கூட கலைஞரை பேசினால் தான் சிலருக்கு அரசியல் பிழைப்பே நடக்கிறது...
தமிழகத்தின் அரசியல் வரலாற்றை கலைஞர் பெருமகனாரை நிராகரித்தோ மறுத்தோ எழுதிட முடியாது..
தமிழக அரசியல் என்றால் அது கலைஞர் தான் கலைஞர் மட்டும் தான்..
..
#கலைஞர்_தமிழகம்_செய்த_தவம்…
..
#அரைநூற்றாண்டு_அரசியல்_அதிசயம்
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment