Sunday, July 9, 2017

திராவிடர் பூமி

வங்கத்தின் சிங்கம் மம்தா பானர்ஜி...!! மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் சௌவிக் சர்க்கார் எனும் RSS சேர்ந்தவர் சமூக வலைதளத்தில் இஸ்லாத்தை பற்றியும்,நபிகள் நாயகத்தை மிக கேவலமாக இழிவுபடுத்தியும் பதிவிட்டதும்.. அதை தொடர்ந்து அப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் ஏற்பட்டது குஜராத் மாடலில் மேற்கு வங்காளத்தில் மதவாதம் தலைதூக்க கூடாது என்ற அக்கறை கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி முதற்கட்டமாக RSS சேர்ந்த சவுக்காரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பரகானாஸ் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சுமார் 400 எல்லை படை பாதுகாப்பு வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளார்.ஆங்காங்கே சில பூசல்கள் நடந்தாலும் யாரும் கொல்லப்படவில்லை,காயப்படவில்லை என பாதுகாப்பு படை அதிகாரி உறுதிபட கூறியுள்ளார். .. இதை சரியாக பயன்படுத்த நினைத்து மதகலவரத்தை நடத்த திட்டமிட்ட பாஜக MP மீனாட்சி லேகி,ஓம் மாத்தூர்,சத்யபால் சிங் ஆகியோரை அதிரடியாக கைது செய்ய உத்தரவிட்டார் மம்தா பானர்ஜி மேலும் பாஜகவின் கரூபா கங்குலி விமான நிலையம் வந்த சில மணித்துளியிலேயே கைது செய்து மேற்கு வங்கத்தில் அமைதியை நிலை நாட்டினார் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்.. .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் ,மேற்கு வங்க ஜமாஅத் இ இஸ்லாம் இயக்கத்தின் தலைவர் முஹம்மது நூருதீன் அவர்கள் "சமூக வலைதளங்களை மாநில அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும்,மதவாதத்தை தூண்டுபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கைது செய்து வங்காளத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வழிவகை செய்யவேண்டும்"எனவும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதான் மதசார்பின்மை .. யாராக இருந்தாலும் கலவரத்தை தூண்ட நினைப்பவர்களை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் .. மம்தாவின் செயல்பாடுகள் நமக்கு சில விசயங்களை உணர்த்தியிருக்கிறது..மதவெறிபிடித்க பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து வங்கத்தை காத்திருக்கிறார். இதே போன்ற பிற மாநில முதல்வர்களும் நடந்துக்கொண்டால் நிச்சயமாக நாட்டில் மதத்தின் பெயரை சொல்லி நடக்கும் கலவரங்கள் இல்லாமல் போகும்.. .. .. இங்கே தமிழகத்தில் மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதா இந்து முன்ணணியினரை தாக்கினால் கலவரபூமியாக தமிழகம் மாறும் என்கிறார்.. இதுபோன்று பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல .. இந்திய அரசியமைப்புக்கெதிராக ஏற்றுக்கொண்ட சத்திய ரகசிய பிரமாணத்திற்கெதிராக .. கலவரத்தை தூண்டும் வகையில் அமைச்சராக இருந்துக்கொண்டே பேசுகிறவர் பதவிவகிக்க தகுதியற்றவராகிறார்.. ஏற்கனவே வெத்து பதவியை வைத்துக்கொண்டு விமானநிலைய பேச்சாளராக வலம் வரும் திறமையற்றவர் வாயடைக்க வேண்டும்.. .. தமிழகத்தில் குஜராத்மாடலை கலவரத்தை கொண்டுவர பெரும் முயற்சி எடுத்துவரும் பொன்னர் வகையறாக்களுக்கு .. தமிழகம் வேறுமாதிரி பதிலடி தரும்..பெருங்கிழவனின் பெருந்தொண்டால் பண்படுத்தப்பட்ட நிலமாய் .. எதையும் எதிர்கொள்ளும் அஞ்சாமையோடு எவரையும் அறிவெனும் ஆயுதம் கொண்டு வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள்.. ஜாதியை மதத்தை சொல்லி பிரிக்க நினைக்கும் கேடுகெட்ட செயல் இங்கே ஈடேறாது.. .. தமிழகத்தில் அதிமுகவெனும் நொண்டி குதிரையில் ஏறி சவாரி செய்யலாமென்ற ஆசை படிப்படியாய் நிராசையாக கண்டு எதேதோ உளறி கொட்டிகிறார்.. மத்திய அமைச்சர்... வங்கத்து சிங்கத்தைப்போல இங்கே திராவிட சிங்கமாய் தளபதி இருக்கிறார் திமுக ஆட்சிக்கு வரும்போது இருக்குமிடம் தெரியாமல் போவார்கள் மதவெறிகொண்டலையும் அறிவிலிகள்.. .. #போபோ_இதுதிராவிடர்பூமி.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment