Tuesday, July 25, 2017

கோபால கிருஷ்ண காந்தி

கோபால கிருஷ்ணன் காந்தி.. குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டிருக்கிறார் மெத்த படித்தவர் .. மென்மையான போக்கை கொண்டவர் நாகரீக கோமாளிகளை போல அல்லாமல் நவீன சிந்தனையாளராக நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் பற்றுக்கொண்ட முற்போக்கு சிந்தனையாளர்.. .. காந்தியின் பெயரன் என்பதாலோ அல்லது திருமதி லட்சுமி (ராஜாஜிமகள்) மகன் என்பதாலோ அவரை ஆதரிக்க சொல்லவில்லை.. திரு.வெங்கய்யா நாயுடுவைப்போல மதமேறிய சிந்தனை இல்லாதவர் என்பது அவரை தேர்வு செய்யவேண்டும் .. என்ன செய்வது செல்லாத ஓட்டை போட கூடியவர்களை வைத்துக்கொண்டு நேர்மையான ஜனநாயகம் பேசுவது கொஞ்சம் வேடிக்கையாக தானிருக்கும்.. .. திருமதி லட்சுமி தேவதாஸ்.. மத நம்பிக்கையில் ஊறி திளைத்த ராஜாஜி தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்துவைத்தார் சிறுவன் சில மாதங்களிலேயே இறந்து போக மொட்டையடித்து வீட்டிலேயே உட்கார வைத்துவிட்டார்.. இதை கண்ட எங்கள் பேராசான் பெரியார் தான் காந்தியிடம் பேசி.. ராஜாஜியிடமும் பேசி மணம் முடித்து வைத்தார்.. அப்போதெல்லாம் விதவை திருமணத்திற்கு எவ்வளவு எதிர்ப்பிருக்கும்.. இந்த சம்பவத்திற்கு பிறகு காஞ்சி பெரியவர் சரஸ்வதி சுவாமிகள் ராஜாஜியை பார்க்க கூட அனுமதி தரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. அன்று பெரியாரின் பெரும் முயற்சியில் நடந்த திருமணம் அது.. அந்த தம்பதியரின் மகன்தான் கோபால கிருஷ்ணன் காந்தி.. .. இது அவரின் தகுதியல்ல என்றாலும் ஆச்சாரியமான குடும்பத்தில் நடந்த சீர்திருத்த திருமணம் .. லட்சுமி தேவதாஸ் இருவருமே பெரியாரிய கருத்துக்களோடு நிறைய உடன்பட்டவர்கள் முற்போக்கான எண்ணங்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களின் மகன் நிச்சயமாக நல்ல தலைவராக நாடு நம்பும் நல்லவராக இருப்பார்.. .. இன்றைய நிலையில் நல்ல வேட்பாளர் திரு.கோபால கிருஷ்ண காந்தி.. .. #வேறொன்றும்_சொல்வதற்கில்லை… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment