Thursday, July 20, 2017

உ.பி..பார்பானர்கள்...

Brahmins are as victimised as Dalits and Muslims in BJP’s Uttar Pradesh என்ற தலைப்பிட்டு அமிரிஷ் மிஸ்ரா எழுதிய கட்டுரை ஜனதா ரிப்போர்டரில் வந்துள்ளது.. உ.பி யில் பிராமணர்கள் வேட்டையாட படுகிறார்கள் இடைசாதிக்காரர்களால் என சேதி சொல்கிறது.. இதில் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை யோகி பதவியேற்ற பிறகு 30 பார்பனர்கள் கொல்லப்பட்டதாகவும் பார்பன சமூகம் ஒடுக்கப்படுவதாகவும் ஒப்பாரி வைக்கிறது.. நோக்கம் இதுதான் பாஜக பார்பனர் கட்சி என்ற மாயையிலிருந்து மீட்க செய்கிற உக்தியாக கூட இருக்கலாம் அல்லது இடைசாதிகாரர்களின் ஆதிக்கம் அதிகமாகி தூண்டி விட்டவனையே பதம்பார்த்து இருக்கலாம்.. கட்டுரையின் நம்பகதன்மையில் சந்தேகம் வருவதென்பதற்கு ராமர் கோவில் கட்டவேண்டுமென பார்பனர்கள் விரும்பியிருக்கலாம் ஆனால் பாபர் மஜ்ஸித் இடிக்கப்பட்டதை அவர்கள் விரும்பவில்லை என சொல்வதிலிருந்தே இந்த கட்டுரை ஆசிரியரின் நோக்கம் நமக்கு பிடிபடுகிறது.. இறுதியாக தலித்களும் பிராமணர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்தால் மாற்றத்தை கொண்டுவரமுடியுமென்கிறது.. .. பாஜக பார்ப்பனர் கட்டுபாட்டியிலிருந்து போய்விட்டதென நம்பவைக்கும் முயற்சியை யாரும் நம்ப தயாரில்லை.. பாஜக ஆட்சி என்பதே ஆர்எஸ்எஸின் சொல்படி நடக்கிறது என்பதை ஒவ்வொரு செயலும் நமக்கு நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பே பார்பனர்களுக்கானது என்கிற போது அவர்களின் மீறி எதுவும் நடந்திராது.. யோகி மீது வரும் விமர்சனங்களை கடக்க அது பார்ப்பனின் சொல்படி நடக்காத ஆட்சியென நம்பவைக்க முயற்சிக்கிறது இந்த கட்டுரை.. பொது சமூகத்தை திசை திருப்ப கையாளப்படும் முயற்சி என்ற விமர்சனத்தையும் தள்ளிய களையமுடியாது.. .. அதேவேளை... தொடர்ந்து பார்பனர்கள் தாக்கபடுவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லாமல் இல்லை.. தாக்கூர்களும் பனியாக்களும் அதிகார பகிர்வை ருசிக்க ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு போட்டியாக அல்லது இடைஞ்சலாக நிற்கும் பார்ரனர்களை கொல்ல துணிவதை நிறைய செய்திகள் சொல்லிவருகிறது.. எவ்வளவு காலம் தான் இடைசாதிகாரன் எடுபிடியாக எடுப்பார்கையில் இருப்பது திருப்பி தாக்க நினைக்கிற போது வலுவிழந்த கடைசாதியை குறிவைக்காமல் தன்னிலும் உயர்ந்தவனென சொல்லி திரிவோரை தாக்குவது அடித்தமர்த்த நினைப்பது இயல்புதானே அதுதான் நடக்கிறது.. உ.பி.யில் தலித் பிராமணர் முஸ்லிம்களோடு யாதவர்கள் கைகோர்க்க திட்டமிடுவதாக செய்தி சொல்வதை தள்ளிவிட முடியாது பார்பனர்களை இணைத்துக்கொள்வதென்பது கொள்ளிக்கட்டையோடு சவாரி செய்வதை போன்றது.. .. யாரையும் கீழ்மை படுத்திக்கொண்டே நீண்டநாள் இருக்கமுடியாதென்பதை தான் பார்பனர் தாக்கப்படுவது உணர்த்துகிறது.. இது தமிழகம் வரை வர நீண்டநாட்கள் தேவைபடாது ராசா சேகர் போன்றவர்களின் அத்துமீறல்கள் திருப்பி அடி என்ற நிலையை நோக்கி நகரலாம் வடமாநிலங்களில் தொடங்கியிருப்பது தெற்குநோக்கலாம்.. .. #இன்னும்வரும்_செய்தவினை .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment