Tuesday, July 25, 2017
ஐந்தாம் வகுப்பில் பொது தேர்வு
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு மத்திய அரசு ..
மேலோட்டமாக பார்த்தால் தேர்வு என்பது சரியென்பதுபோல தோன்றும்.. ஆனால் மிக சாதூர்யமாக வடிகட்டுதல் என்ற பெயரில் ஏழை மற்றும் கிராமபுற மாணவர்களை அவர்களின் அப்பன் தொழிலை நோக்கி தள்ளுகிற ராஜாஜியின் குலக்கல்விதிட்டம் இது.. தேர்வை என்பதே கூடாதென விவாதிக்கிற கல்வியாளர்கள் மத்தியில் இது குறித்து மௌனம் மிகவும் ஆபத்தானது..
..
எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்கிற நிலை மாணவர்கள் சுயமாய் சிந்திக்கிற
பருவத்தில் தேர்வை நோக்கி நகர்த்தவேண்டுமென்ற சரியான பார்வை .. காரணம் படித்ததை வாந்தியெடுக்கும் பயிற்சியிலிருந்து புரிந்து படிக்கும் கற்றலை நோக்கி மாணவ சமுதாயத்தை கொண்டுவரவேண்டுமென்பதே ..சரியென செயல்பட்டதும் பிற மாநிலங்களை விட கல்விதரம் தமிழகத்தில் உயர்ந்திருப்பதும் தெரிந்ததே..
..
ஐந்தாம் வகுப்பு என்பது 10 வயதை கடக்காத சிறுவர்கள் மீது மன அழுத்தத்தை தந்து ஆசிரியர்களை கோச்சிங் சென்டர்களை உருவாக்கி அல்லது தனியாக பயிற்சியென்ற பெயரில் காசுபார்க்கவைக்கும் திட்டமாகதான் போகும்.. மாணவர்கள் படிப்பின் மீதான ஆர்வத்தை குறைக்கும் என்பதைவிட ஒருவித பயத்தை இளம்பிராயத்திலேயே கொண்டுவருவது வளரும் செடிக்கு வெந்நீர் ஊற்றுவதைப்போல..
..
திமுக ஆட்சியில் கலைஞரும் தங்கமும் சமச்சீர் கல்வியை கொண்டுவந்த போதே பொறுமியவர்கள் .. எட்டாவது வரை தேர்ச்சி என்பது சிறுவர்களை அடுத்த படித்தளத்திற்கு மகிழ்ச்சியோடு அழைத்துச்செல்லும் விடயம்.. சிறுவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கவேண்டும் என பேசபடும் சூழலில் வடிகட்ட நினைக்கும் செயல் அயோக்கியத்தனமானது.. ஐந்தாம் எட்டாவதில் தோல்வி என்ற நிலைவந்தால் .. மேற்கொண்டு படிக்கவைக்க மறுக்கிற பெற்றோர்களும்.. வேலைக்கு அனுப்பலாம் என தீர்மானிக்கிற ஏழைகுடும்பங்களும்..கூலிவேலைக்கு அனுப்புகிற கொடுமை அதிகளவில் நிகழும்.. பள்ளி படிப்பிற்கு உத்ரவாதம் தரவேண்டிய அரசே.. பொதுதேர்வு எனும் பூச்சாண்டியை காட்டி .. குறிப்பாக ஏழைகளின் கல்வியை இல்லாதாக்க செயலை கைவிட வேண்டும்..
..
இன்னும் என்னவெல்லாம் குளறுபடிகளை செய்து ஒரு பிரிவினர் மட்டுமே (வசதியுள்ளவன் ஆதிக்கம் செலுத்துபவன்) கல்வியை பெறவேண்டும் என சொல்வார்கள் போல் இருக்கிறது.. 6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியின் அயோக்கிய செயலை.. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டுவந்து கல்வியை எட்டாக்கனியாக்க நினைக்கிறார்கள்.. கல்விக்காக குழந்தைகள் படிக்கவைக்கவேண்டுமென்பதற்காக காமராஜர் சத்துணவை கொண்டுவந்து ஏழைகளுக்கும் கல்வி தந்தார்..அப்போது விவசாயிகளிடத்தில் முதல் மரைக்கால் சாமிக்கும்,இரண்டாவது மரைக்கால் ஊர்கோவிலுக்கும் தருகிறீர் மூன்றாவது மரைக்காலை எனக்கு தாருங்கள் நான் சோறு போட்டு படிக்கவைக்கிறேன் என்றார்.. அந்த பெருமகன்..
எல்லாருக்கும் சமமான கல்வி வேண்டும் பணக்காரன் ஏழை என்றில்லாமல் அனைவருக்கும் சமச்சீராக கல்விவேண்டுமென எங்கள் தங்கத்திடம் சொல்லி #சமச்சீர்கல்வியை
கொண்டுவந்தார் கலைஞர் பெருமகன்..
..
இதோ இப்போது குழந்தைகளை கூட வடிக்கட்ட நினைக்கும் பாசிச போக்கை நடப்பிலாக்க நினைக்கிறார்கள்.. அனைவரும் ஒத்தகுரலில் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்..
..
#விரட்டப்படவேண்டியவர்கள்_தூக்கியெறிவோம்
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment