Friday, July 14, 2017
நான் யார்
நான்
நானாகதானிருக்க..ஆசை
ஆனால்..
என்னை நானாக
இருக்க விடுவதேயில்லை..
..
பொய் சொல்லாதே
எனச்சொன்னவர்..
பொய் பேசுவதை
பார்க்கும் போதும்..
அமைதியாய்
நகர்ந்தேன்.
..
வலுத்தவன் சொல்
அம்பலமேறும் போது
மௌனம் காக்கிறேன்
தவறென்ற போதும்..
..
அப்பாவிற்கு தெரியாமல்
அம்மா காசு கொடுத்து
சொல்லாதே என்ற போதே
கயமையை கற்றுக்கொண்டேன்..
..
பிரியமானவர்கள்
பித்தலாட்டகாரர்கள்
என்றறிந்தபோது
நானும்.. சேர்ந்துக்கொண்டேன்..
..
காதல்..
கடைந்தெடுத்த
பொய்யென்றறிந்தபோது
காமத்தில் கரைந்தேன்..
..
ஒரு நாளேனும்..
பொய் புரட்டில்லாமல்..
அடுத்தவனைப்பற்றி
புறம் சொல்லாமல்..
முன்னால் செல்கிறவனின்
முதுகிலேறி.. சவாரி செய்யாமல்..
குப்புறதள்ளி.. மீதேறாமல்..
அடுத்தவன் உரிமையை
அபகரிக்காமல்..
இருக்க ஆசைதான்..
..
எல்லாம் பழகி..பழகி..
கடைசியில்
நான் ...
யாரென்றே தெரியாமல்..
..
தெரியாமல்தான் கேட்கிறேன்..
நான்.. யார்
என் முகம் இதுவல்ல
என்னை யாரோ வடிவமைக்கிறார்கள்
அப்பனுக்காக..
அவன் வம்சத்திற்காக
சொந்தங்கள்
கூட வாழ்ந்தவர்கள்
என்னோடு அடுத்தவர்கள்
அன்பால்
அதிகாரத்தில்
எனை வீழ்த்தியவர்கள்
இவர்களுக்காக
வாழ்ந்தது போதும்
எனக்காக..
எப்போது வாழ்வது..
வாழணும்
#சிலகாலமேனும்.
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment