Thursday, December 28, 2023

விஜயகாந்த் 
இவரைப் பற்றி பேச துவங்கினாலே இப்ராகிம் ராவுத்தர் ஞாபகம் வருகிறது .. மதுரையில் ரைஸ்மில்லை பாரத்துக்கொண்டிருந்தவரை சினிமா ஆசையை அறிந்து சென்னை அழைத்த வந்தவர்..
..
ஆரமபகாலங்களில் அவரை கேலிசெய்தவர்களின் அலுவலகம் சென்று சண்டை போட்டவர்.. நடித்தால் கதாநாயகனாக நடி என இல்லையென்றால் வேண்டாம் என்றவர்.. விஜயகாந்த் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த போது ராவுத்தர் பிலிம்ஸ்  என்ற கம்பெனியை உருவாக்கி வெற்றி படங்களை தந்தவர் .. அன்றைக்கு கும்பகோணம் யூகிசேது வின் தந்தையிடம் பைனான்ஸ் பெற்று படங்களை தயாரித்தார் விஜயகாந்திற்காக தானே பைனான்ஸ் கம்பெனியில் கடனுக்கு கையெழுத்திட்டு பணம் பெற்று புதிய இயக்குனர்களை கொண்டு வெற்றி படங்களை தந்து விஜயகாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ..  நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய மனிதர் தனக்கு கல்யாணம் ஆனால் விஜயகாந்தை பிரிய நேரிடுமோ என கல்யாணம் செய்தக் கொள்ளாதவர் இப்ராகிம்
..
ராவுத்தர் பிலிம்ஸில் தினமும் சாப்பாடு போட்டார், வெள்ளிக்கிழமை பிரியாணி என வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டவர் இதெல்லாம் ராவுத்தர் பிரிவதற்கு முன்பு வரை நடந்தது.. தனக்கான வாழாமல் தன் நண்பனுக்காக வாழ்ந்தவர்
கடைசி காலத்தில் நோயின் பிடியில் இருந்த போது கூட விஜயகாந்த் அருகில் வைத்துக்கொள்ளவில்லை..  விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முதன்மை காரணமானவர் ,
விஜயகாந்த் வாழ்வில் ஒளியேற்றியவர் இப்ராகிம் ராவுத்தர்  ஏனோ இந்நாளில் நினைவில் வந்தார் 
..
ஆலஞ்சியார்

Tuesday, December 26, 2023

இஸ்லாமிய சமுதாய பாதுகாவலர் எடப்பாடிக்கு வாழ்த்துகள் .. SDPI அரசியல் கட்சி அது தனக்கு வேண்டியவர்களோடு கூட்டணியமைக்க அதற்கு உரிமையுண்டு .. சமுதாயத்தை காப்பாற்றுகிற பணியில் தங்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என கருதி "பாதுகாவலன்"  பட்டத்தை எடப்பாடிக்கும் தரும் அந்த பெரிய மனதை பாராட்டாமல் போனாலும் வசைபாட கூடாது ..
..
SDPI பிழைப்புவாத இயக்கம் சமுதாய இளைஞர்களை வழக்கெடுக்கும் வேலைகளில் தன்னை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டு பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கும் வேலைகளில் எஜமானர்களின் சொல்லுக்கு ஆடும் விசுவாசமான எடுபடிகள்.. தலைமை எடுபடி எடப்பாடியை கொண்டாடாமல் போனால் தான் வியப்பு வரும்..  இஸ்லாமிய சமுதாயத்தைப் போல பரிதாபகரமான சமுதாயம் வேறெதும் இல்லை .. தடுக்கி விழுந்தால் தலைவன் அவன் வழியில் கொஞ்சமும் சிந்திக்காமல் ஒரு கூட்டம், ஏன் இப்படி என யாரும் கவலைக் கொள்வதில்லை ..
..
தங்களுக்கென ஒரு தலைவனை தேர்வு செய்ய முடியாமல் அதிகாரம்,பதவி தானென்ற மிதப்பில் "திரியும்" சிலரை தங்கள் சமுதாயத்தை காக்க வந்த "தெய்வமாய்" நினைத்து இளைஞர்கள் வழிகேட்டில் நிற்கிறார்கள்.. IUML ன் அலட்சியபோக்கு 
 குறிப்பாக தமிழகத்தில் இரு இலக்கங்களை தாண்டி "அமைப்புகள்" .. எல்லோருக்கும் சுயநலம் , தனக்கு கைதட்ட சிலர் இருந்தால் போதும் தலைவனாகிவிடலாம் .. பரிதாபம் தோன்றுகிறது ..
..
சிறைவாசிகளை விடுதலைச் செய்யவில்லை அதனால் அதிமுகவிற்கு ஆதரவு தருகிறோம் என சிலர் .. எதையும் திமுக சட்டரீதியாக வலுவான நிலையில் செய்யும் ஒரு உதாரணம் போதும் ஆந்திராவில் அவசரகதியில் கொண்டுவந்த இட ஒதுக்கீடடை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது அதை காரணம் காட்டி ஜெயலலிதா முதல் பார்ப்பன ஊடகங்கள் தமிழகத்திலும் இட ஒதுக்கீடு வராது வந்தாலும் ரத்தாகும் என புலம்பினர் .. கலைஞர் மிக தெளிவாக  சட்டவல்லுநர்களிடம் ஆலோசித்து பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் பரிந்துரைப் பெற்று 7.5%விழுக்காடுக்குமேல் போக கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இஸ்லாமிய கிருத்துவ சமுதாயத்திற்கு தலா 3.5% எனவும் ஜெயின் சமுதாய மக்களுக்கு 0.5%  விழுக்காடும் தந்தார் வழக்கம் போல் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தை நாடினர் ஆனால் உச்சநீதிமன்றம் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஏற்று உள் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது எடுத்தேன் கவிழ்த்தேன் என இல்லாமல் சரியான பாதையில் திமுக செல்லும் என்பதற்கு இந்த உதாரணம் போதும்.. 
..
எனக்கென்னவோ தமிழக இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிமுகதான் சரியெனபடுகிறது ..  CAA  சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அதை செய்யாத அதிமுக சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருப்பது கொடுப்பினை.. தங்களுக்கென ஒரு தலைவனை கண்டறிய  முடியாத சமுகம், சட்டென்று உணர்சசிவயப்படும் சமுகம் நிலைகுலைந்து நிற்கும்.. 
சமுதாயத்தை பிடித்த பீடைகள் விலக காத்திருப்போம் ..
அது என்ன "மதசார்பின்மை"
..
ஆலஞ்சியார்

Monday, December 25, 2023

பொன்முடி ..
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து வருமானவரித்துறை மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்றாண்டு தண்டனையும் 50லட்சம் அபராதம் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது ..
..
உயர்நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது  .. ஆனால் தீர்ப்பில்  உள்ள முரண்கள் கேள்வி எழுப்புகிறது .. வருமானவரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டிருப்பது  அபராதம் 10% விழுக்காட்டிற்கு மேல் இருப்பதும் இங்கே கேள்வி எழுகிறது இரண்டு பேரும் தலா 50 லட்சம் என்பது 1.75 கோடியில் ஏறக்குறைய 60% விழுக்காடு வருகிறது .. 
..
பொன்முடி துணைவியார் விசாலாட்சி அவர்களின் பெயரில் இயங்கும் விஷால் மோட்டார்ஸ் வருடம் ₹5 கோடி வியாபாரம் ஆவதாக வங்கி அதிகாரி சாட்சியம் அளித்திருக்கிறார் .. ஆனால் ₹1.75 அதிக வருவாய் என வருமான வரித்துறை  வழக்கு .. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது என வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள் .. எது எப்படியோ பாஜக தன்னை எதிர்ப்பவர்கள வழக்குகளில் தனிக்கவனம் செலுத்துவதும் வேண்டியவர்களை வைத்து சந்திப்பதும் தொடர்கதையாகிறது..
..
உயர்நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறது .. மேல்முறையீட்டிற்கான அவகாசம் தந்திருக்கிறது .. அலட்சியமாக இல்லாமல் நல்ல வழக்கறிஞர்களை கொண்டு வாதிட்டு இன்னும் திறமையான ஆடிட்டர் ஆலோசனையில் வழக்கை எதிர்க்கொள்ள வேண்டும் ..  இது ஊழல் வழக்காக நீதிமன்றம் கருதாமல் வருமானத்தை மீறிய (சொத்து/பணம்) என தீர்ப்பு   வழங்கியிருப்பதை கருத்தில் கொள்ளவேண்டும் .. இப்படி நிறைய முரண்கள் தீர்ப்பில் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. ஆனாலும் திமுக மீது விழுந்த கரை .. அதை துடைத்து வெளிவரவேண்டியது 
அவசியம்..
..
காத்திருப்போம்
..
ஆலஞ்சியார்

Friday, December 15, 2023

விஜயகாந்த் 
சினிமாக்காரன் .. அதுவரை எந்த குழப்பமும் இல்லை ஆனால்  அரசியல்வாதி ஆவதற்கு அடிப்படை தகுதிகூட இல்லை .. சில முக்கிய காரணிகளே ஒருவரை அரசியல்வாதியாக தீர்மானிக்கிறது .. பொதுநலம், தீர்மானிக்கும் ஆற்றல், எதை எப்படி எதுவரை செய்யவேண்டும், எப்போது ஆடவேண்டும், தன் தகுதி என்ன என்பதை உணர்தல், இவையாவும் இல்லாதவர்..
..
வந்தவர்களுக்கெல்லாம் சோறுபோட்டேன் என்ற மகோராவின் சொல்லின் உண்மையாய் திகழ்ந்தார் அது அவரின் இயல்பாக இருக்கலாம் மீன் சோறு போடுவதல்ல மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டும் அதுதான் பொதுவாழ்வில் பெயர் சிறக்க வழிவகுக்கும்.. அது இருவரிடமும் இல்லை.. அரசியலை புரிந்துக் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது துவக்கத்தில் வெளிச்சம் தரும் அது மின்மினி பூச்சியின் வெளிச்சம் .. அதை உணரவே இல்லை என்பதுதான் கொடுமை..
..
சினிமா மோகம் வாழ்வு தரும் என்பது எழுபது என்பதுகளில் சரி.. ஆனால் இப்போதெல்லாம் உதவாது.. அரசியலில் சில முடிவுகள் குழியில் தள்ளிவிடும் அது நடந்தது.. சோவின் பேச்சை நம்பி ஜெயாவோடு சேர்ந்தது அழிவின் தொடக்கமானது .. அதிலிருந்த மீள பழம் நழுவி பாலில் விழ வாய்ப்பிருந்தது ஆனால் விழுந்தது சகதியில்.. தன் எதிர்காலத்தை சிதைத்த தருணம் அது .. இன்று அரசியலில் கோமாளியாக காட்சியளிக்கிறார்.. கிடைத்தது வரை லாபம் என்ற நிலையிலிருந்து லாபம் கிடைக்க காட்சிப்படுத்தும் பொருளாய் மாற்றிய பெருமை பிரேமலதாவை சாரும்..
.. 
இப்ராகிம் ராவுத்தரோடான நட்பும் பிரிவும் இவர் வாழ்வில் நல்ல பாடத்தை போதித்திருக்கிறது ..  உண்மையில் கேப்டனின் இன்றைய நிலை அவருக்கு ஓய்வு தரவேண்டிய நேரத்தில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து  காட்சிபடுத்தி தன்னை பொதுச்செயலாளராக  முன்னிறுத்தி இனி கேப்டன் இல்லை நான் தான் எல்லாம் என சொல்லியிருக்கிறார் .. பெரிய கட்சியாக வர வேண்டிய தேமுதிக இன்னுமொரு லெட்டர்பேட் "அமைப்பாக" சுருங்குகிறது..  மற்றபடி கேட்பாரற்று கேப்டன் பரிதாபம் 
..
பிரேமலதாவிற்கு வாழ்த்துகள்  
விரைந்து நலம் பெறுக! கேப்டன் !! ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, December 14, 2023

நாடாளுமன்றம் ..  தோற்றுக்கொண்டிருக்கிறது 
பாதுகாப்பு காரணங்கள் மட்டுமல்ல சனநாயகத்தின் குரல்வளை நெறிக்கபடுவதும், ஊழல் பொய் எனும் சொற்களை கண்டு ஆள்பவர்கள் அச்சபடுவதும் விடுதலை இந்தியா மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதை காணமுடிகிறது .. 
..
நாடாளுமன்ற தாக்குதலில் யார் இவர்கள் என பரப்பரப்போடு செயல்பட்ட ஊடகங்கள் 'அவர்கள்" இல்லை இதன் பின்னணியில் என்றவுடன் நிசப்தமானது.. இவர்கள் மொழியில் "தேசவிரோதிகள்" இல்லையென்றவுடன் பிரதமர் உள்துறை அமைச்சர் தொடங்கி சுமந்த் மாமாக்கள் வரை அமைதி காக்கிறார்கள் 
வேறெதையோ எதிர்பார்த்து ஏமாந்து பாதுகாப்பு குறைபாடு என்ற சொற்சொடரோடு முடித்துக் கொணடார்கள் .. 
..
ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசியவுடன் திமுக ஆட்சியை கலைக்க சொன்னவர்கள் இப்போது மௌனம் விரதம் இருக்கிறார்கள்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீசியவனுக்கு அனுமதி சீட்டு தந்த பாஜக எம்பி அவையில் இருக்கிறார்.. விரிவான விரைந்த விசாரணை தேவையென குரல் கொடுத்த கனிமொழி Kanimozhi Karunanidhi   உள்ளிட்ட 15 பேர் இடை நீக்கம் வாழ்க சனநாயகம் 
..
சனநாயக விழுமியங்கள் கொஞ்சம் கொஞசமாய் செத்துக் கொண்டிருக்கிறது.. இங்கே பாரப்பனர்கள் தவிர மற்றவர்கள் நீதி,சட்டம், அரசியல் கொண்டு மெல்ல மெல்ல கொல்லப்படுகிறார்கள்..  இந்த நாடு தன் ஜீவனை இழக்கிறது.. சட்டம் முன் நின்றாலும், நிறமும் உடையும் அடையாளமும் உற்று நோக்கியே தீரப்புகள் எழுதப்படுகின்றன.. மிச்சமிருக்கும் நம்பிக்கை செயலிழக்கிறது.. வாக்குகள்,விலைபேசியோ மிரட்டியோ அல்லது இயந்திரம் கொண்டோ தனகாக்கிக் கொள்ளும் தந்திரமே இன்றைய தேசபக்திமார்களின் சூட்சமம்
..
எங்கே போகிறது எனது இந்தியா அடிப்படைவாதிகள் மதவெறிகள் முட்டாள்கள்,பொய்யர்கள் கையில் கிடந்து சீரழிகிறது.. இன்னமும் நாம்  இந்திய சனநாயகத்தின் ஆணிவேரில் இன்னமும் கொஞ்சம் ஈரமிருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது..
இன்றைய இந்திய ஒன்றியம் திராவிடத்தின் திமிலில் ஏறி பயணிக்க வேண்டும் .. மக்களின் தன்னெழுச்சியும் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் சாதிமத வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாய் ஒற்றை இலக்கோடு பாசிச மதவெறியாளரகளை வீழத்துவதே வரும் தலைமுறைக்கு 
செய்யும் நற்செயல் 
..
ஆலஞ்சியார்

Wednesday, December 13, 2023

மீண்டு வருகிறது சென்னை..
அனைவருக்கும் நன்றி!  இந்த பெருமழை நிறைய செய்திகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது..எம்ஜிஆர் எனும் கோமாளியின் நிஜத்தையும், இரும்பு பெண்மணி என பார்ப்பன ஊடகங்கள் கட்டமைத்த பிம்பத்தையும் அதிமுக எனும் அறிவிலிகள கூட்டத்தையும் திமுக என்றாலே அதிகம் தண்ணீர் குடிக்கும் "நடுநிலை" களையும் தோலுரித்து காட்டி இருக்கிறது..
.. 
நாடாளுமன்றத்தில் ₹4000 கோடி எங்கே என தம்பிதுரை கேள்வி எழுப்ப அவரது அறியாமையை அவரே வெளிச்சம் போட்டார்.. முன்பெல்லாம் தமிழகத்திலிருந்து தான் அறிவுஜீவிகள் செல்வார்கள் அதில் பார்ப்பனர்கள் கை ஓங்கி அரசியல் சாசனத்தை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் நாங்கள் தான் என இறுமாப்போடு இருந்தவர்களை I Am Dravidian stock என அதிரவைத்து தொடர்ந்து வல்லமையோடு பேசும் அறிவார்ந்தவர்களை அனுப்பியது தி.மு.கழகம்.. தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் என்றாலே சபை உற்றுநோக்கும்.. அதை உடைத்து காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீரென பாடலை  பாட செய்த பெருமை ஜெயலலிதாவை சாரும் தங்களை விட யாரும் அறிவாளிகளாகிவிட கூடாது என்ற மனப்பான்மை முட்டாள்களை அனுப்பி தமிழ்நாட்டில் இப்படியும் சில கோமாளிகள் இருக்கிறார்கள் என காட்டினார் அப்படியான வரிசையில் வந்தவர் தான் தம்பிதுரை
..
47 ஆண்டுகளுக்கு இப்படியொரு பெருமழை பேரிடராய் வந்தது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தாலும நினைக்கவே அச்சமாகிறது.. தொலைக்காட்சியை பார்த்து தெரிந்துக் கொண்டேன் என உளறிவைத்து அதையும் ஊடகங்கள் சொல்லி குதூகலம் அடைந்திருக்கும் .. பேரிடர் நிவாரணத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கும் தவிர்க்க முடியாதுதான்.. காலதாமதமும் தனக்கு கிடைத்துவிட்டதென சிலர் பகிர்ந்ததை கண்டு பலர் கோபம் கொள்வதும் தனக்கு தெரிந்த அதிகார மட்டத்தில் காரியம் சாதித்துக் கொணடவர்களின் இறுமாப்பும் விமர்சனத்திற்கு உள்ளாகும் தான் .. ஆனாலும் விரைந்து சேவை செய்து மாநகரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.. அமைச்சர்கள் அதிகாரிகள் தன்னார்வலர்கள் #துப்புறவுதெயவங்கள்  என அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி பெருங்துயரிலிருந்து மீட்டுயிருக்கிறார்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
மாநகர மேயர்.. இவரின் உழைப்பை திறமை கேலிசெய்தவர்கள் சின்னப் பெண் என்றவர்களுக்கு தான் சிங்கப்பெண்  என நிரூபித்திருக்கிறார் .. ஊடகங்கள் சமூகவலைத்தளங்கள் நேர்மை தவறிய போதும் எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் தனக்கு வாய்ப்பளித்த தலைமைக்கும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் தன் உழைப்பின் மூலம் தான் யார் என்பதை உணர்த்தி திறம்பட செயல்பட்டிருக்கிறார் PriyaRajan DMK ..
.. 
அனைத்து 
களப்பணியாளர்களுக்கும் நன்றி!🙏
..
ஆலஞ்சியார்

Friday, December 8, 2023

மேயர்.. 
மாநகரின் முதல் பெண்மணி ..
இதுவரை கண்ட சென்னை மாநகராட்சியின் மேயர்களில் அதிகம் பேசப்பட்டவர் அதிகம் உழைத்தவர் .. விமர்சனம் என்ற கக்கும் விசமங்களை புறங்கையால் தள்ளிவிட்டு வீணர்களின் வெற்று கூச்சல்களுக்கெல்லாம் கலங்காமல் காரியம் ஓன்றே குறிக்கோளாய் செயலாற்றும் மாநகரின் செல்லமகள்..
..
இதுவரை கண்டிராத பெருமழை ஒரு வருடம் பெய்ய வேண்டியதை ஒரே நாளில் கொண்டிதீர்த்து இயற்கை தாண்டவமாடியது கொஞசமும் அசராமல்  அயராமல் ஓடிக் கொண்டே இருந்தார் கிடைத்ததை தின்று கார் பார்க்கிங்கில் உணவருந்தி  வீட்டிற்கே செல்லாமல் அரசு அலுவலகத்திலேயே குளித்து உடைமாற்றி தனக்கு தலைவர் தந்த பொறுப்பு உணர்ந்து  உழைத்துக் கொண்ட இருந்தார் .. உடல் நலத்தையும் கொஞ்சம் பாருங்கள் 
..
சிலரின் விமர்சனங்கள் பொறுப்பற்ற அரசியலாய் இருந்தும் ஒன்றுகூடி உழைக்கவேண்டிய நேரத்தில் விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியை கக்குவதும்  பேஷன் ஷோ நடத்த முடியாமல் போனதாய் கிண்டல் அடிப்பதும் மனித நாகரீகமற்ற செயல் .. அவர் உடுத்து உடை உங்களுக்கு எரிச்சலை தருகிறதென்றால் அதை தொடர்ந்து செய்வோம் ..  
..
மேயராக பொறுப்பேற்றபோது சின்ன பெண் என்றார்கள் அவர் உழைப்பை கண்டு அவரின் ஒழுங்கை திறமை நிர்வாக திறனை கண்டு சிலர் வாயடைத்துப்போய் செய்வதறியாது நிற்கிறார்கள் ..
கொள்கை உறுதியோடு தலைமை தந்த பணிகளை செவ்வனே செய்து மக்களிடம் பெரும் மதிப்பை பெற்ற மேயராய் திகழ்கிறார் ..  விமர்சனங்களை கண்டு பெறாமல் நடிப்பது போலல்ல இது உதவி வேண்டுமா கேளுங்கள் என இடது கையால் தள்ளி தான் நிஜத்தில் இரும்பு பெண்மணி .. ஓடியொளிந்துக் கொண்டு நடுக்கத்தல் ஏரியை திறந்து திக்குமுக்காட செய்யும் பேதை அல்ல.. எதையும் எதிர்க்கொள்ளும் மனோபலமும் உழைப்பும் சரியாக செய்யம் ஆற்றலும் உண்டு என நிரூபித்திருக்கிறார் ..
வரலாறு காணாத பெருமழையில் நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்படும் அதற்காக இவரின் அர்ப்பணிப்பை கேவலபடுத்தாதீர்.. 

..
 இயற்கை பேரிடரை எதிர்கொண்டு மாநகர மக்களின் நலன் காத்த இவரை கொண்டாட மனமில்லாமல் போனாலும் குறைச் செல்லாதீர்கள்  இதுவரை தலைநகர் கண்ட மேயரகளில் தலைசிறநதவராய் திகழ்கிறார் .. நேர்மையும் கடின உழைப்பும், திறமையும் அவரை இன்னும் உயர்த்தும்  ..
வாழ்த்துகள் தாயி..
..
ஆலஞசியார்

Thursday, November 2, 2023

இரவில் 
சூரியனை கண்டவருண்டா!
குவைத்தில் 
இன்றிரவு..
திராவிடச்சூரியன்  உதிக்கிறது 🖤❤️
இரண்டு தினங்கள் 
திராவிடப் பெருவெளிச்சத்தில்  
கொண்டாடி மகிழ்வோம்..
.. 
பேரருளாளனின் 
நூற்றாண்டுவிழா
திராவிடத் தென்றல் 
மானமிகு கனிமொழி 
உரைவீச்சை கேட்க வாரீர்..
கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் 
கொள்கைக்குன்று 
கலைஞரின் போர்முரசு 
பெரியாரின் கொள்கைவாரிசு 
ஆசிரியரின் மாணவி சிறப்புரையாற்றுகிறார் 
..
இந்திய ஒன்றியத்தின்
இன்றைய தேவையை..
திராவிடச் சித்தாந்தமே 
மனிதவள மேம்பாட்டிற்கு 
தேவையென பறைய வருகிறார்..
தமிழர்ப் பண்பாட்டை வாழ்வியலை
சங்கமமாய் தந்தவர் 
குவைத்தில் 
நிறைய கதைக்க வருகிறார்
திராவிட மாடல் தளபதியின் அடியொற்றி புதிய சேதிகளை சொல்ல வருகிறார்.. 
இதுவரை குவைத் கண்டிராத பெருவிழாவைக் காண வாரீர்
..
வாழ்ந்த காலமெல்லாம் 
மனிதம் பேசிய 
மாமனிதனின் புகழ்பாட..
வாழ்ந்து, வழிகாட்டி 
அரசியல் இலக்கணம் படைத்த 
இந்திய ஒன்றியத்திற்கே 
அரசியல் பாடம் தந்த பேரொளி..
பள்ளத்தில் கிடந்தவரை 
படிகளில் ஏற்றிய பகுத்தறிவாளன் 
தொலைநோக்கு பார்வை 
எதிலும் நிதானம் 
சொல்லும் செயலும் 
நன்னெறி தந்த ..
தமிழகத்தின் நவீன சிற்பியின்
நூற்றாண்டில் நாமெல்லாம்
புத்தாடை உடுத்தி கொண்டாட வேண்டாமா..
கலைஞரெனும் பேரருளாளின்
புகழ்பாடும் சபையில் 
மகிழ்ந்திருப்போம் வாரீர்..
Kanimozhi Karunanidhi 
..
ஆலஞ்சியார்

Sunday, October 29, 2023

திராவிடம்..

திராவிடம் என்னவென்று தெரியாதவரெல்லாம் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருப்பது எவ்வளவு அசிங்கம் .. அதிமுக ஆரம்பித்தபோது கலைஞர் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. சிங்கத்திற்கு முன் "அ" சேர்த்தால் வருவதுதான் ..  

..

அறிவுடை இயக்கமாய் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மகோரா எனும் சாயபூச்சுகாரனின் அலங்கோலத்தால் மக்களின் கேளிக்கை மயக்கத்தில் மதியிழந்து நின்றதால் இன்றைய அவலங்களுக்கு நாமும் சாட்சியாகிறோம்.. இனப்பகைவர்கள் கூட நம் அறிவின் முன் மதிமயங்கி நின்றதெல்லாம் காலம் நமக்கு போதித்திருக்கிறது.. எதையும் அறிவுக்கொண்டு பார் எனச் சொல்லி வளர்ந்த தமிழர்கள் இன்று அறிவிலிகளால் தலைக்குனிவை நேரிடும் அவலம்.   திராவிடம் ஆரியம் அதெல்லாம் புராணத்தில் வரும் என உளறிவைத்து தன்னை தற்குறியாய் அடையாளப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி

..

திராவிடம் இந்த மண்ணின் இனம்.. இந்தியாவிற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனில் தமிழர்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என அண்ணல் அம்பேத்கர் சொன்னதையாவது படித்திருக்கிறாரா.. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் என மம்தாவிற்கு இருந்த புரிதல் கூட பழனிசாமிக்கு இல்லாமல் போனதேன்.. திராவிடம் என்ற சொல் தேசிய கீதத்திலேயே இருப்பது கூட இந்த அரைவேக்காட்டிற்கு தெரியாதா.. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவன் என பெருமைபேசிய பழனிக்கு திராவிடம் ஆரியம் என்றால் தெரியாதா..  அண்ணாவின் "ஆரியமாயை" யாவது தெரியுமா..  

..

திராவிட  இயக்க வரலாறு தெரியுமா.. இதெல்லாம் இவரைச் சொல்லி என்ன பயன்.. அதிமுக நிறுவனர் மகோரா எனும் எம்ஜிஆருக்கே தெரியாதே.. அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் அமரும் இலைகள் .. கலசமாகாது..  ஆரிய திராவிட போர் ஈராயிரம் ஆண்டு வரலாறும் கொண்டது .. பழனி போன்றவர்கள் திராவிட இயக்க வரலாறு தொகுப்பை  படிக்க வேண்டும் ..

வரலாறு தெரியாதவர்கள் விவரகேடுகள், வழிதவறிய பாதையில் இனியேனும் திராவிடம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் பழனிசாமி அவர்களே.. பெரியாரை பேரறிஞரை, திராவிட இயக்க முன்னோடிகள் படியுங்கள்.. இல்லையெனில் அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆரிய அடிவருடிகளாக இருங்கள் 

..

ஆலஞ்சியார்

 

Saturday, October 7, 2023

படிப்பு முக்கியமில்லை என்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் .. படிக்காமல் உயரலாம் அதிக பணம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டுவார்கள் நம்பாதீர்கள் .. முதலில் ஆன்மீகவாதிகள் அப்புறம் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் திரியும் மூடர்கள் தொடர்ந்து தமிழ் தேசியம் பிள்ளைகள் உளற தொடங்கியிருக்கிறார்கள் .. காமராஜர் படித்தாரா என கேள்வி எழுப்புவார்கள் அவர்தான் பள்ளிக்கல்வியின் அவசியத்தை உணர்ந்ததால் தான் ராஜகோபாலச்சாரி எனும் பாசிசவாதியால் மூடப்பட்ட பள்ளிகளை திறந்து படிக்க வைத்தார்.. கலைஞர் பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்பார்கள் ஆனால் அவரின் படைப்புகள் பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு முனைவர்கள் உருவானார்கள் ..
..
படிக்காதே என்று சொன்னால் எச்சரிக்கையாய் இரு.. அவன் உன் இடத்தை அபகரிக்க முற்படுகிறான்.. எங்கே நமக்கு சமமாக வந்து விட்டாானே என்ற கோவம் அவனை இப்படி பேச சொல்கிறது .. படித்து வேலை இல்லாமல் இருக்கிறான் என்பான் நம்பாதே தொடர்ந்து முயற்சி நிச்சயம் கிடைக்கும்.. படித்த வேலை கிடைக்காதென்பான் நம்பாதே கிடைத்த வேலையில் புதிய அறிவும் அனுபவமும் கிடைக்கும் .. 
..
மாடு மேய்த்தால் வருமானம் அதிகம் என்பான் ஆனால் அவன் வீட்டு பிள்ளைகளை abroad 
ல படிக்க வைப்பான்.. விவசாயம் பார் பொட்டிகடை வை என்பான் அவன் குழந்தைகள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும்.. 
கல்வி தான் உன் பேராயுதம்.. உன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் பாசிச / மடைமைவாதிகளுக்கும் உன் கல்வியறிவு மட்டுமே இடைஞ்சலாக இருக்கிறது அதனால் தான் கதற தொடங்கியிருக்கிறது .. அப்பன் தொழிலை பார் என "விஸ்வகர்மா "உன் குறையை தீர்க்குமென ஆசைகாட்டி காலகாலமாய் குலத்தொழிலில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆபத்தானவரகள் நம்பாதே ..
..
இது ஒருவகையான சூழ்ச்சி, ஒருவகை மூளைச்சலவை , படிக்காமலே பணக்காரனாகலாம் எனச் சொல்லி உன் சந்ததியை மடையர்களாக்கும் மந்திரம்.. மயக்கம் தரும் இச் சலவையின் முடிவு கிழிந்த நிலையை தந்துவிடும்.. எவன் தடுத்தாலும் படி.. என்ன வழியில் சொன்னாலும் உன் கல்வி மட்டுமே உன்னையும் உன் சந்ததியினரம் கரை சேர்க்கும்
..
கல்வியே பேராயுதம் ..
கல்வியே ஒளி தரும் விளக்கு..
கல்வியே விடியலுக்கு முதல் கூவல்
..
ஆலஞசியார்

Wednesday, October 4, 2023

அன்பு நண்பர் இக்பால்.. 
அஸ்ஸலாமு அலைக்கும்  
இன்று இரவு அரசு அய்யா அவர்களும், ஆசிரியர் பெருந்தகை ஜலீல் அவர்களும் நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களும், என் இல்லம் வந்து சிறப்பித்தனர்..  முதற்கட்டமாக 250  பிரதிகள் அர்த்தமுள்ள திராவிடம் " நூலை கொண்டு வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.. நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தோம்.. நல்ல பயனுள்ள பொழுதாய் அமைந்தது..
..
இன்று அர்த்தமுள்ள திராவிடம் நூலாக வருவதற்கு பெரும் காரணியாக இருந்த தங்களின் செயல், பெரும் பெருட்செலவை ஏற்ற
தங்களின் தயாள குணம் 
நன்றிகளால் நிரப்பிட முடியாது ..
தாங்கள் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்டு பேரன்பிற்கு நன்றி!.. தொடர்ந்து தமிழ் சேவை செய்திட வேண்டி விழைகிறேன்.. 
..
நன்றிகள் 
.. 
அன்பின்
ஆலஞ்சியார்
அனைவருக்கும் வணக்கம்

பெரியார் வழியில் கலைஞர் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்
..
பேராசான் வழியில் கலைஞர் ..
தான் கொண்ட கொள்கை வழியில் நின்று சமத்துவம், சமூகநீதி பெண்ணுரிமை என தமிழ் நாட்டில் மாபெரும் புரட்சி செய்தார் ..
பெண்களின் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை தாருங்கள் என்றார் பெரியார்.. உங்கள் வீட்டில் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்க வையுங்கள் என்றார் உங்கள் ஊரில் அதற்கான வசதியில்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார் அதைதான் கலைஞர் பெண்களின் கல்வியின் அவசியத்தை உணர்ந்து கட்டணமில்லா கல்வியென்றார், எட்டாவது படித்திருந்தால் திருமண உதவித்திட்டம் என தொடங்கி அதை 12 வது என உயர்த்தி பெண் குழந்தைகளின் கல்விக்கு வழி வகுத்தார் 
..
ஐந்து கிலோ மீட்டரில் நடுநிலைப்பள்ளி, தாலுக்கா தோறும், கலைக்கல்லூரி மாவட்டந்தோறும் தொழில்ஙட்ப, மருத்துவகல்லூரிகள் கண்டார்..
அதுமட்டுமா
 ஒடுக்கபட்டோரில் குரலாய் நின்று கல்வி வேலைவாய்ப்பில் விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு வழி வகுத்தார்.. இன்றைய தமிழகத்தின் வளர்ச்சியின் காரணகர்த்தா கலைஞர் நவீன தமிழகத்தின் சிற்பி .. 
நூற்றாண்டு காணும் கலைஞர் புகழை பாடுவோம்..

Saturday, September 30, 2023

வழிநெடுக பார்க்கிறேன் உன்

அமைதி அர்த்தங்கள் பொதிந்ததாய் 

ஆரவாரமற்ற மொழியில் கதைக்கிறது.. உன் விழிகளில் பெரு வெளிச்சம் தமிழகத்தின் சுடரொளியாய் ஜொலிக்கிறது..  எதையும் பகுத்தாயும் தெளிவு ஆசானை நினைவுபடுத்துகிறது ..

..

எத்தனை சதிகள், தொடர் இடையூறுகள்.. பாசிசத்தின் சூழ்ச்சிகள் , கூட இருப்பவரின் சனாதன சேட்டைகள், அதிகாரம் வந்தவுடன் தான் என்ற அகந்தையில் திரியும் அற்பர்கள் ..ஊடகம் என்ற பெயரில் உமிழும் வதந்திகள், பூச்சாண்டி காட்டும் ஒன்றிய ஏவல்கள் 

இவையனைத்தும் உன் அழுத்தமான அமைதி முன் அடிப்பட்டு போகிறது..

..

உன் வெற்றிடத்தை நீயே செதுக்கியதென்பதை அறியாதோர் புலம்புகிறார்கள்.. உன் அடுத்த அடி எதுவென யோசிப்பதற்குள் நீ சதுரம் கட்டுகிறார.. 

உன் நிழலை கண்டாலே பதறுகிறது பகைவர் கூட்டம் உன் செயல்கள் மக்களை அடையும் ஒவ்வொரு நொடியும் எதிரிகளின் விலா எலும்பு ஒடிகிறது.. எனக்கு உன் எதிரிகளை கண்டு அச்சமில்லை எதை நீ உன் பீச்சாங்கையில் டீல் செய்வாய்..

..

உன் கூட இருப்பவர் நீ அதிகாரம் தந்து அழகுபார்த்தவர்கள் உன்னால் நியமனம் செய்யபட்டவரகள் செய்யும் அழிச்சாட்டியம் ஆரவாரம் உன் அமைதி முன் அகங்காரமாய் நிற்கிறது ..

பொறுப்புணராதவர்களின் செயல்கள் கழகத்தின் கொள்கையை கேள்வியாக்குகிறது..  தலித் என்பதற்காக நிற்கவைக்கும் குறியீடுகள் பாசிசத்தின் நிழலை காட்டுகிறது எவனும் உயர்ந்தவனில்லை எவனுக்கும் தாழ்ந்தவனில்லை என்ற கோட்பாடு சிதைகிறது தலைவா..

..

பொறுப்பென்பது எதுவென்று தெரியாதவர்களை அகற்றி நிறுத்தி திராவிடத்தை உணர்ந்த, சித்தாந்த தெளிவும் அறிவும் பெற்றவர்களை முன்னிறுத்த வேண்டும்.. 

திமுகவில் ஊடுறுவிற்கும் சனாதனவாதிகளை பதவிக்காக எதையும் செய்யும் பித்தர்கள் இனங்கண்டு "களையெடுத்தல்" அவசியம் 

..

நல்லதை விதைத்தால் அறுவடையின மகிழ்ச்சி வரும்.. நாம் தீய "களை"களையும் கூடவே வளர்ப்பது தீங்கு தரும் 

..

ஆலஞசியார்



Friday, September 15, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை..
தமிழ்நாடே திருவிழாக் கொண்டாட்டம் போல் மகிழ்வில்.. பெண்களுக்கான இந்த உரிமைத் தொகை சுயசார்பு தொடக்கத்தை தரும் ..
சின்ன சின்ன தேவைகளுக்கு யாரையும் சார்ந்திராது கம்பீரமாய் நிற்கலாம், சிலர் வழக்கம் போல் எரிச்சலடைவதும் கிடைக்காத அதிருப்தில் அதிமுககாரனுக்குதான் கிடைக்கிறதென புழுக்கம் அடைவதும், எப்படியும் தர போவதில்லை என்றவர்கள் சாத்தியமானது கண்டு கலக்கம் அடைந்திருப்பதும் திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது..
..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்திய ஒன்றியத்தின் வழிகாட்டும் தலைவராக ,அரசியலில் ஒரு தலைவன் எப்படி அதிகாரத்தை கையாள்கிறார், மக்களுக்கு தேவைகளை எப்படி சரிசெய்து வழங்குகிறார் என்பதை உற்று கவனிக்கிறது.. கொஞ்சமும் சஞ்சலமில்லாமல் என்னால் கூற முடியும் எம் தலைவரை கலைஞரை விட ஸ்டாலினை வியந்து
பாரக்கிறது இந்திய ஒன்றியம்..  எதிரிகள் கைபிசைந்து நிற்கிறார்கள்.. காலை உணவுத் திட்டம் பீதியை தந்தது, இன்றோ உறைந்து நிற்கிறார்கள்.. கிடைக்காதவர்கள் வாக்கு திமுகவிற்கு கிடைக்காதென தப்புதப்பாய் பேசி ஆறுதலடைகிறார்கள்.. தகுதியுள்ளோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் கிடைக்கும் 
எதிலாவது குறை கூற முடியாதா என எண்ணுவோர் வேறுபாதையில் செல்லலாம்..
..
இனி மாதாமாதம் பணம் வரும் பெண்கள் சேமிப்பில் சேருவார்கள் தங்களுக்கான,தன் குடும்பத்திற்கான பொருட்களை வாங்கலாம் அவசர தேவைகளுக்கு கைமாத்திற்கு அலைய வேண்டியதில்லை.. அவசர தேவைகளுக்கு ஆண்களின் கைகளை எதிர்ப்பார்க்க தேவையில்லை.. தன் மருந்து செலவிற்கும் பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் உதவும் 
 சுயசார்பு மட்டுமல்ல சுயமரியாதையையும் கலைஞர் மகளிர் உரிமை தொகை தரும்.. 
..
கட்டணமில்லா பயணம்,காலை உணவுத்திடடம், கலைஞர் மகளிர் உரிமை தொகை என வரலாறு படைக்கிறார்.. 
பிற மாநிலங்கள் இதுபோன்ற திட்டங்களைப் பற்றி சிந்திக்கவே பல ஆண்டுகள் ஆகும் .. 
..
இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மக்களின் நிலையை உணர்ந்து குறிப்பாக பெண்களின் பொருளாதார ,மற்றும் கல்வி நிலை உயர்வே மாநிலத்தின் வளர்ச்சியை காட்டும் என்ற யதார்த்தத்தை புரிந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
..
தமிழ்நாட்டின் தாய்மார்களின் பிள்ளையாய், சகோதரனாய்,அப்பனாய் நம் தலைவர் ஸ்டாலின் நிற்கிறார்..
Thank You Stalin Sir...
நன்றி C M Sir...
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
சனாதனம் பற்றிக்கூட ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் பேசி மக்கள் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள் பாஜகவின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்திற்கு நாம் இடமளித்துவிட கூடாது மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர் ..
எத்தனை தீர்ககமான சிந்தனை அரசியலில் மிகத் தெளிவாக தன் கொள்கைகளை வரையறுத்து பயணிப்பவர்களால் மட்டுமே பகைவரின் ஒவ்வொரு செயலையும் சரியாக கணிக்க முடியும் 
..
அறுபதாண்டு பொதுவாழ்வு திராவிடச் சித்தாந்தத்தை சரியாக 
உள்வாங்கி எதற்காக இந்த இயக்கம் தொடங்கபட்டதோ அதிலிருந்து பின்வாங்காமல் அதே நேரம் பகைவரின் சூழ்ச்சி அறிந்து படையோட்டம் நடத்தமுடியும்.. நம்மை அறியாமல் ஒரே விடயத்தில் உழன்று கொண்டிருந்தார் எதிரிகள் வேறென்றை நடத்திடுவார்கள்.. ஆனால் நம் தலைவர் திறமையும் தெளிவும்,துணிவும் கொண்டவர் .. 
எதிரிகள் அதனால் தான் இந்திய துணைக்கண்டத்தில் இவரை மட்டுமே தொடர்ந்து கவனித்து வருகிறாரகள் .. 
..
பாசிசவாதிகளுக்கு திராவிட இயக்கங்களில் தொடர்ந்து கடுமையான எதிரிகள் வருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை அரச இயந்திரத்தை ஆளுநரைக் கொண்டு முடக்க நினைக்கும் போதெல்லாம் வெளிச்சம் போட்டுகாட்டி முகத்திரையை கிழிக்கிறார்.. 2024 ல் வீழ்த்தபடுவோம் என்றறிந்து எதையாவது பிரச்சனையை பெரிதாக்கி காய் நகர்த்த முடியுமா என பார்க்கும் போது நடுமுதுகை உடைத்தைவிடுகிறார் நம் தலைவர்
..
கலைஞரோடு தீர்ந்தது என்றிருந்தவர்கள் ஸ்டாலின் திமிர்க் கொண்டு எழுந்த போது கலங்கி நின்றார்கள்.. இதோ உதயமாய் புதிய ஒளி சனாதனத்தை சுட்டரிக்க
 வருவது கண்டு புறவழி சாதனையாளர்கள் புரண்டு அழுகிறார்கள்.. புரிந்துக் கொள்ளுங்கள் எங்கள் இனப் பகைவர்களே.. 
திராவிடம் 
தன்னைதானே உயிர்ப்பிக்க கொள்ளும் .. புதிய தலைமுறையின் பாதுகாவலனை தயார் செய்யும்.. 
தன் இனத்திற்கான தலைவனை உருவாக்கி செம்மைபடுத்தி பகை முன் நிறுத்தும் ..
எதிரிகளே உங்கள் குலைநடுங்க எம் குலம் காக்க வரிசையாய் தலைவர்களை தயார் செய்துக் கொண்டே இருக்கும் ..
..
இது இயக்கம்..
இயங்கிக் கொண்டேதானிருக்கும்
..
ஆலஞ்சியார்

 



Monday, September 4, 2023

வருங்கால திராவிடத் தலைவனை பகைவர்கள் இனங்கண்டுக் கொண்டார்கள்.. ஒவ்வொரு முறையும் காலம் நமக்கான தலைவனை அடையாளம் காட்டுகிறது.. எனக்கு பழைய காட்சிகள் நிழலாடுகிறது தஞ்சையில் கலைஞரிடம் ஒருமுறை அடுத்த தலைமுறைக்கான தலைவனை அடையாளம் காட்ட வேண்டாமா என துடுக்குத்தனமாய் கேட்டு வைக்க 'காலம் தீர்மானிக்கும்' என்றார் எத்தனை எளிதாய் புரிதலோடு பதில் தந்து புன்னகை புரிந்தார்..
ஆம் நம் பகைவர்கள் நம்மை விட தெளிவாக இருக்கிறார்கள்..
..
சனாதன எதிர்ப்பு மாநாடு இளைய திராவிடத் தலைவனை இந்திய ஒன்றியத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறது.. பாஜக தலைவர்கள் வரிசைகட்டுகிறார்கள்.. சனாதனத்தை ஒழிப்போம் என்றதை இந்துக்களை ஒழிப்போமென்கிறாரென வழக்கம் போல் பொய்யை சுமந்து வருகிறார்கள்.. சனாதனம் சமத்துவத்திறகு எதிரானது சமூகநீதிக்கு எதிரானது ஏற்றதாழ்வற்ற நிலைக்கு எதிரானது .. 
வழக்கம் போல பார்ப்பனர்கள் இந்துத்துவ கைக்கலிகள் ஓலமிடுகிறார்கள்.. 
அதிலிருந்தே உதயநிதி சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் 
..
உதயநிதி தலைக்கு ₹10 கோடியாம் இவன் தாத்தன் தலையை சீவினால் ₹1  கோடி பரிசுமழை என்றார்கள் என் தலையை நானே சீவுவதில்லை என நகைச்சுவையோடு கடந்து போனார் கலைஞர் ..  தந்தை பெரியார்  செத்து  போக வேண்டி பிரம்ம ஹத்தி யாகம் செய்தார்கள் 
யாகம் செய்த
40  சாமியார்களும்   செத்து  போன பிறகு  தான் பெரியார்  94 வயசுல மறைந்தார்.. 
..
சனாதனம் என்பது பார்பனீய மதம் அதைதான் இந்து மதமாக்கினார்கள் இதோ எச் ராசா சனாதனவாதிகளுக்கு அவிட்டம் வாழ்த்துகள் சொல்வதிலிருந்து சனாதனம் பார்ப்பனியத்தை/ பார்ப்பனர்களை உயர்த்தி பிடிக்க இவர்கள் உருவாக்கியது என புரியும்.. சனாதனம் கருத்தியல் ரீதியாக பதிலளிக்க முடியாமல் கொலைவாளை  உருவும்.. ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் தரையில் அமர்த்துவது தான் பார்ப்பனீயம் சொல்லிதந்த சனாதனம் ..
..
சனாதனத்தை எதிர்ப்பதென்பது கடவுள் மறுப்பு அல்ல கடவுளின் பெயரில் செய்யும் அநீதியை எதிர்ப்பது.. மூடநம்பிக்கை என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான செயல்களை எதிர்ப்பது, தீட்டான பெண்கள் வெளியே வந்தால் லோகம் கெட்டுவிடும் ,வேலைக்கு போனால் விபச்சாரம் பெருகும் என்ற ஜகத்குருவின் கருத்தியலைதான் சனாதனம் என்ற பெயரில் அடக்கிவைப்பதைதான் எதிர்க்கிறார்.. அனைவரும் அர்ச்சகர்களாகலாம் என்றதை எதிர்ப்பதற்கு பெயர் தான் சனாதனம் .. அதைதான் ஒழிக்கபடவேண்டும் என்றார் உதயநிதி 
..
சனாதன எதிர்ப்பில் தான் சமநீதி அடங்கியிருக்கிறது.. அனைவரையும் சமமாக நடத்தப்படவேண்டும், தொட்டால் தீட்டு பார்த்தாலே பாவம் என்பதற்கு எதிராகத்தான் தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருகிறது ..
பெரியார் தொட்டு அதை தான் திராவிட இயக்கம் செய்கிறது
 இனியும் தொடர்ந்து சம நீதி சமூகநீதி பேசும்..
வாழ்த்துகள் உதய்
Udhayanidhi Stalin 
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Saturday, September 2, 2023

கவிதை 
சொல் என்றார்..
தமிழில்..
என்றார்
தமிழே 
கவிதைதானென்றேன்
..
மயங்கி நிற்கிறேன்
உன் அழகில் 
நீ ..
தரும் 
அறிவின் வெளிச்சம்
நான் செல்லும்
பாதையெங்கும்
வழிகாட்டுகிறதே..
..
பழமை பேசலாம் என்றால்
"சங்கம்" தருகிறாய்..
புதுமையெனில்
பராசக்தி தருகிறாய்..
(கலைஞரின் பராசக்தி)
..
பறக்கிறேன்
இறைக்கையாகிறாய்.
படர்கிறேன்..
மரமாய் ..
எனை.. 
வளைத்துக்கொள்கிறாய்..
..
காதல் சொல்ல
காமம் சொல்ல
மலர்ந்ததை
மலராததை
மொட்டை..
மயக்கும் விதத்தை
மயங்கும் வித்தையை
தந்து செல்கிறாய்....
..
மடமை கொளுத்தி
சாதி
மதத்தை வீழ்த்தி..
மானுடம் உடுத்தி..
மண் பெருமை பேசி
மகிழ்வாய் 
கதைக்கிறேன் 
மயக்கம் தருகிறாய்..
..
கோபம் கொள்கிறேன்.
கொள்கை பேசுகிறேன்
சிலநேரம்..
கொந்தளிக்கிறேன்..
வளைந்து.. எனக்கு 
வழங்குகிறாய்..
..
தீயாய்.. 
தென்றலாய் 
சிலநேரம் புயலாய்..
எனை சூழ்ந்துநிற்கிறாய்
பேச்சில் மூச்சில்
என் சுவாசத்தில் 
என் துடிப்பில்..  
எல்லாம் நீயே..
என் தமிழே..
..
ஆலஞ்சியார்
வயல்வெளிகளிலும் முள்காடுகளிலும் அடுப்படிகளிலும் பெண்களை வேலைவாங்கி, உனக்கு வராது தேவையில்லை ஏன் படிப்பு, ஆணுக்கு நிகராக முடியுமா என காலங்காலமாய் அடைத்துவைக்கபட்ட பெண்களுக்காக ஒரு குரல் ஓங்கி உழைத்தது.. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு பெண்கள் படித்துவிட்டு வேலைக்கு போனால் லோகம் கெட்டுவிடும் வேலைக்கு போகும் பெண்களை விபசசாரிகளென என பெரியவா/ ஜகத்குருக்களெல்லாம் முழங்கிய காலத்தில், நீ வா படி விமானம் ஓட்ட வேண்டாமா சந்திரமணடலத்துக்கு போகவேணடாமா என்றது ஒரு குரல்.. அந்த கிழவனின் குரல் சமுகத்திற்கு அதிர்வை ஏற்படுத்தியது .. 
..
பெண்கள் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த கிழவன் உங்கள் வீடடில் ஆண்குழந்தையை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் உள்ளூரில் அதற்கான வசதியில்லென்றால் வெளியூர் சென்று கூலிவேலைப் பார்த்தாவது பெண்களை படிக்க வையுங்கள் என்றது அந்த குரல்
ஆம் அந்த பெரியாரின் குரல் .. பெண்கள் முன்னேற படிப்பு அவசியம் என்றவர் பேராசான் பெரியார் 
..
பள்ளிபடிப்போடு பெண்களை நிறுத்தியது கண்டு  ஒரு தலைவன் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தந்தான் .. மாவட்டம் தோறும் கல்லூரிகளை தந்து அதை விரிவுபடுத்தி தாலுக்கா தோறும் கல்லூரி, மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் என தந்தான்.. பெண்களுக்கு கட்டணமில்லா கல்வி என்றான் படிக்க வா எல்லா கதவுகளும் திறக்கும்.. பெண்களுக்கு முன்னுரிமை தந்து 
உந்துவிசையானான் .. அந்த பேரருளாளனுக்கு மற்றொரு பெயருண்டு கலைஞர் கருணாநிதி 
..
அன்று கிழவன் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா என்ற கேள்விக்கு விடை இதோ.. எங்கள் தமிழ் நாட்டுப்பெண்கள் விண்வெளியில் கோலோச்சுகிறாரகள்.. முடுக்கிவிட நினைத்தது ஆரியம் .. 
முயன்று முன்னேறு என்றது திராவிடம்.. சக்தி என சாமியாக்கியது ஆரியம் 
உன் சக்தியை காட்டி வெற்றிக்கொடி நாட்டு என்றது திராவிடம்..
மதம் சாதி எனச் சொல்லி சக மனிதனைக் கொல்ல கத்தியை தீட்டென்றது ஆரியம் உன்னை உலகமே திரும்பிபார்க்க உன் புத்தியை தீட்டென்றது திராவிடம்.. மடமையில் உன்னை அழுத்தி பள்ளத்தில் தள்ளியது ஆரியம்..  கைக்கொடுத்து உயரத்தில் ஏற்றி அழகுப்பார்ப்பது திராவிடம்
.. 
திராவிடம்
அறிவை மரியாதையை
மானமுள்ள வாழ்வை தரும்..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
தினமலருக்கு கண்டனம் ..
இன்றல்ல பன்நெடுங்காலமாய் நெஞ்சில் வஞசத்தோடுதான் அவர்கள் .. நம் பிள்ளைகள் கல்வியில் உயரத்தை தொடுவதை எரிச்சலோடுதான் காண்கிறார்கள் தமக்கு மட்டுமே அறிவு உண்டென்று பேசி திரிந்தவர்கள் யார் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றோமோ அவனே நம் முன்னில் உச்சத்தை தொடுகிறான் என்றவுடன் கோவம் கொப்பளிக்கிறது.. 
..
எப்பாடுபட்டாயினும் கல்விகற்க வா நாஙகளிருக்கிறோம் என திராவிடத்தின் தலைவர்கள் கட்டணமில்லா கல்வி, பேருந்தில் கடடணமில்லை பசியோடு வந்தாலும் பசியாற்றி கற்பிப்போம் வா உன் திறமையால் உயரு.. எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாதே.. யார் தடுத்தாலும் திராவிடம் துணை நிற்கும் என்றவுடன் பார்ப்பனீயம் பதறுகிறது .. 
..
இதோ சூத்திரர்கள் வானில் கோலோச்சுகிறார்கள் நம்பியைப்போல காட்டி கொடுக்காமல் படித்துவிட்டு அமெரிக்க சென்று ஊதியம்பாரக்காமல் நாட்டிற்கு உழைக்கிறார்கள்.. என்ன இது என கால் நக்கும் கூட்டம் கதறுகிறது.. பாசிசத்தின் நிழலில் நின்று கூத்தாடியவர்கள் இன்று  I.N.D.I.A வை கண்டு அஞ்சுகிறார்கள்.. இனி விரட்ட படவேண்டிய கூட்டம்.. இங்கே தலைதூக்கவே முடியாதவாறு ஆழ புதைத்திடுவோம்..
..

 




Tuesday, August 29, 2023

வரலாறு, வல்லமை, வளமை இல்லாத நாட்டவரிடம், வரலாறு, வல்லமை, வளமை உள்ள நாட்டவர் ஏன் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும்? அதற்கு வழி சொல்ல முடியவில்லை. நம்மைத் தூற்றுகிறார்கள். தூற்றல் பாணம் நம் நம்பிக்கையைத் துளைத்து விட முடியாது. நாங்கள் தூற்றலிலே முளைத்தவர்கள்.

#பேரறிஞர்_அண்ணா

Sunday, August 20, 2023

அதிமுக மாநாட்டை கண்டு களித்தீர்களா  என்றார் நண்பர் ..
களைப்பை போக்க பொழுதுபோக்க கேளிக்கைகளில் ஈடுபடுவோரை அரசியல் சாணக்கியன் என்றெல்லாம் விளித்து 'புரட்சி' பட்டம் தரும் கட்சியில் வேறென்ன எதிர்பார்த்தீர்கள் என்றேன்..
..
அரிதாரம் பூசி,எம்ஜிஆர் போல் வேடமணிந்து இசைத்தட்டு நடனம் (ரிக்கார்ட் டான்ஸ்) கண்டு மகிழும் தொண்டனைக் கொண்ட கட்சியில் கொள்கை முழக்கத்தையா கேட்க முடியும்.. எடப்பாடியோடு எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடும் போதே முன்னவர்களின் 'மகிமை' புரியும்..  வேசம்கட்டி நிழல் தந்த மயக்கத்தில் நிஜமறியா லோகத்தில் சஞ்சரிக்கும் தொண்டர்கள்.. வரும் இழப்பையோ, கேடையோ அதனால் வரும் தலைமுறை படும் கஷ்டங்களையோ பற்றி கவலையில்லாமல் கூத்தாடும் இவர்கள் தமிழ்நாட்டின் கேடுகள்..
..
கொள்ளையடித்ததை காக்கவும்,தங்களை விசாரணையிலிருந்து காத்துக்கொள்ளவும்,  தமிழ்நாட்டின் நலன்களை, பலிகொடுக்கும் இவர்கள் அரசியல் கேடுகள்.. நீட் தேர்வு ,சி ஏ ஏ சட்டம்,மாநில அதிகாரங்களை பறிக்கும் மசோதா என தொடர்ந்து பாஜக இடும்  கட்டளைகளை கண்மூடி ஆதரித்து ,மண்ணிற்கு ,மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவர்கள் நாட்டின் சாபகேடுகள்..
..
திமுக மாநாடல்ல இது.. கொள்கைப் பேசவும், சமூகநீதி,சமயசார்பற்ற கொள்கை பிரகடனம் நடத்தவும், மொழிக் கொள்கை, இயக்கத்தின் வரலாறு திராவிடத் தீரர்களின் இனப்பற்று இவற்றையெல்லாம் பேச நினைவுபடுத்த இதுவொன்றும் கொள்கைமறவர்கள் இயக்கமல்ல.. அரிதாரத்தில் மயங்கி மாலைநேர மகிழ்விற்காக தொடங்கபட்ட கட்சி.. அதில் கொள்ளைக்கூட்டம் கையகப்படுத்த அதை வைத்து மிரட்டி பாசிசம் வளர வழிவகுக்கிறது .. 
..
அதிமுக அரசியல் என்பது பணம்,சாதி,சினிமா ,கேளிக்கை கொண்டது.. அவர்களிடத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு கையெழுத்திட ஒருபோதும்  மாட்டேன் ஆளுநர்..
இதைதானே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தீர்கள் ..
படிப்பே வராது என்றீர் தரமுடியாது என்றீர்.. தோளில் துண்டை கூட போட கூடாதென்றீர்.. இதையெல்லாம் கடந்து தான் இங்கு வந்து கம்பீரமாய் நிற்கிறோம்.. பொறுக்கமுடியவில்லை.. எதேனும் செய்து தடை போட நினைக்கிறீர்.. இதையும் கடப்போம்.. ஆட்டம் முடியும் நேரம் பதறுவதும் கூறுவதும் கண்ணீர் வடிப்பதும் உங்கள் தொடை நடுங்குவது தெரிகிறது..
..
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் சாதனைகளை செல்வாராம் அப்போ இதுவரை எதையும் செய்யவில்லை.. மக்களை பிழிந்து ஆட்சி நடத்தும் லட்சணம் தெரிகிறது.. ஒரு சில முதலாளிகளுக்காக நாட்டை ஏறக்குறைய விற்றாகிவிட்டது.. எளியவர்கள் நடுத்தர குடும்பங்கள் சொல்லண்ணா துயரத்தில் .. கேஸ் விலையை இவ்வளவு உயர்த்தி யாரை குளிர வைக்கிறீர் ..
..
ஊழலுக்கெதிராக ஆட்சி நடத்துகிறாராம்.. யார் மீதெல்லாம் குற்றசாட்டு உண்டோ அவர்களை பாஜகவில் சேர்த்து புனிதராக்கும் இவர் பேசுகிறார்.. PMCARE எவ்வளவு வசூலானது எதற்கெல்லாம் செலவு செய்யப்பட்டது என கேட்கக்கூடாது என்பவர் உத்தமராம்..
கடைசியில் வாரிசு அரசியலாம் அதெல்லாம் பழைய புளித்தமாவு வேறெதாவது வடை சுடவும்
..
இந்திய ஒன்றியமே மூச்சுதிணறலில்.. வாழ வழிதெரியாது முழிக்கிறார்கள் மக்கள்.. ஏழைகள் வயிற்றில் அடித்து ஆட்சி செய்யும் இவர் மான்கிபாத் என்பதுதான் கொடுமை.. நீதிமன்றங்கள் தனித்தன்மையை இழக்க செய்து நீதியரசர்கள் மிரட்டபடுவதும்..  
எதிர்க்கட்சிகள் மீது விசாரணை என்ற பெயரில் பரபரப்பை உண்டாக்கி ஒருவித பதட்டத்தோடு 
தேசத்தை வைத்திருப்பதும், பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுப்பதும் ஊடகங்கள் விலைபேசபடுவதும் ஜனநாயகத்தின் நரம்புகள் வெட்டப்படுவதும் அனைத்து மரபுகளையும் குழித்தோண்டி புதைத்து சர்வாதிகார தோற்றத்தை உருவாக்கி இந்தியாவின் மாண்பை குலைத்துதான் இவர்கள் ஓன்பதாணடுகளில் செய்தது..
..
இந்த சுதந்திர தினத்தில் ஒரு உறுதிமொழி எடுப்போம்.. 
இந்த பாசிச அரசை வீழ்த்தி ஜனநாயகத்தின் தூயகாற்றை சுவாசிப்போம்.. கார்ப்பரேட்டுகளின் விசுவாச ஆட்சியை அகற்றுவோம்..
இந்த சாதி,மதவெறியவர்களின் கையிலிருக்கும் செங்கோலை பிடுங்குவோம்.. மீண்டும் ஒரு சுதந்திரப் போர்.. 
அன்பை விதைக்கும், நல்லிணக்கத்தை பேணும் நல்லவர்கள் கையில் நாட்டை தருவோம்..
..
,ஆலஞ்சியார் 




Monday, August 14, 2023

கையில் ஆயுதம் ஏந்தியவர்கள் வரலாறு முழுவதும் வீழ்த்தும் அழிந்தும் போயிருக்கிறார்கள் ..
சாதியும் மதமும் உன்னை மடையனாக்கும்..
படிக்கிற வயதில் அரிவாளை தூக்குகிறாய் 
உன்னால் வெட்டபட்டவன் கல்வியால் உயர்ந்து நிற்பான்.. 
நீ
அவனுக்கு கும்பிடு போடும் காலம் வரும்.. 
சாதி மயிர் கூட வராது..
உன் அப்பனும் தாத்தனும் ஊட்டிய சாதிவெறி படுகுழியில் தள்ளும்..
உன்னை தூண்டிவிட்ட சாதி தலைவனோ 
தன் பிள்ளையை நாட்டின் உயர்தர கல்விநிறுவனத்தில் படிக்கவைக்கிறான்..
உன்னை,
அரிவாளை தூக்கவும் 
குடிகளை கொளுத்தவும் 
உயிரைக் கொல்லவும் ..
மீசையை முறுக்கி 


Friday, August 11, 2023

கலைஞர் கருணாநிதி
பெயரை கேட்டாலே பதறுவதும் 
அவரை நினைத்தாலே எதிரிகள் குலைநடுங்குவதுமாக மறைந்து ஐந்தாண்டாகியும் பகைவர்களை கதறவைக்கிறார் எம் தலைவர் ..
..
தலைமைக்கு இலக்கணமாய், அரசியல்வாதிக்கு பொது பாடமாய், எதிரியை வீழ்த்த எங்கனம் எப்படி எதைக்கொண்டு வீழ்த்த வேண்டுமென வழிகாட்டிய ஆசானாய், எளியவரை கண்டு இரக்கம் கொள்,அவருக்காக ஆளும் காலமெல்லாம் வழி செய் என அரச இலக்கியம் சொன்ன மன்னனாய், வீழும் போதெல்லாம் வீறுக்கொண்டு எழு.. நீ கலங்குவதை கூட பகைவர் கொண்டாடுவர் ஆதலால் தோல்வியின் போதும் "புன்னகை" என வாழ்ந்துகாட்டி புதியபாதை சொன்ன பெருந்தலைவன் ..
..
கலைஞர் ..
தமிழக அரசியலில் தன்னைச் சுற்றியே சுழலவைத்த பேரதிசியம்.. இத்தனை திறமையாளன் இதுவரை கண்டதில்லையென
இந்திய ஒன்றியம் வியப்போடு பார்த்தது .. 
..
உண்மையில் ஒரு நல்ல ஜனநாயகவாதியாய் .. இடர்வரும் போதெல்லாம் வீறுகொண்டெழுந்து ஜனநாயகத்தை காத்த பெருந்தலைவன் .. பேருக்கு அரசியல் செய்யாமல் பேரெடுப்பதற்கும் செய்யாமல் 
பலபேர் பயனடைய வேண்டும், பட்டினிகிடப்போர் வயிறு நிறையவேண்டும் ..ஏழ்மையால் அறிவு தடைபடகூடாது .. காலங்காலமாய் அழுத்தபட்ட சமூகமக்கள் ஏறிவர வேண்டும் என பொதுவுடைமை பேசிய தோழனவன் ..
..
சமூகநீதி சமநீதியாக வேண்டுமென பாடுபட்டு .. அதற்கெதிராய் மநுநீதி இருப்பதையும் பூணூல் தடுப்பதையும் உணர்ந்து மிக சிரத்தையோடு காய் நகர்த்தி கதறவிட்டவன் .. எப்பாடுபட்டாகினும் படி .. அதற்கு அரசு துணைநிற்கும் .. தடைபோடுவர், தடுப்பமைத்து தகராறு செய்வர்.. அஞ்சாதே .. எவன் ஸ்வாமி என அழைக்க சொன்னானோ அவனையே கையெடுத்து கும்பிட வைக்க உனக்கு கல்வி அவசியமென சொல்லி அதற்கான  கட்டமைப்பை செய்து இன்று இன்ஜினியர் இல்லாத தெரு இல்லை மருத்துவர் இல்லாத ஊரில்லை என தமிழனை உயரத்தில் நிறுத்தி அழகுபார்த்தவன் ..
..
இதோ, ஒழிந்தது திராவிடம்.. இல்லாதாக்கிவிட்டோம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம், முடிந்தது பார் திமுக வரலாறு என்றவனெல்லாம் காணாமல் போய்விட்டான் .. ஆனால் கருத்தாளன் கருணாநிதி அரணாய் நின்று .. விழுந்தபோதெல்லாம் வீறுக்கொண்டு எழுந்து எப்போதுமில்லாத திமிரோடு ஓடி எதிரிகளை கலங்கடித்தார்..
கருணாநிதியோடு முடிந்தது திமுக என்றவன் கதறுவதை கேட்கதான் கலைஞரில்லை .. நான்காம் தலைமுறையை மிக அருமையாக செதுக்கி பண்படுத்தி செல்லும்பாதை எது எப்படி எங்கனம் கையாளவேண்டும் .. எதை சொன்னால் பகைவன் அலறுவான் .. எங்கே அடித்தால் வலிக்கும் என கற்றுதந்து சரியானவரை அடையாளபடுத்திவிட்டுதான் சென்றிருக்கிறார்.. அவரும்(தளபதியார்) "திராவிடமாடல்" கையிலெடுத்து இதுதான் முன்னேற்றத்திற்கானதென வகுப்பெடுப்பதை பார்க்க என் ஆசான் இல்லை .. பெரியாரின் வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்
வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்.. என் தமிழ் சமூகமே தலைவர் தளபதி கரத்தை வலுவாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ..
வாழ்க்கை தரம் உயரும், சரியான கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரமென இந்திய ஒன்றியத்தில் தமிழகம் தனித்து மிளிரும்
..
நான் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்த தலைவன் .. அறத்தோடும் அன்போடும் அறியணையேறிய போதெல்லாம் தமிழ் நிலத்தை வளமாக்கிய பெரும்மழையாய் ..
பகைவரை அறிந்து அவர்தம் சூழ்ச்சியை உன் விவேகத்தால் வீழ்த்தி கடைசிவரை கதறவிட்ட போராளி ..
உன் ஒவ்வொரு சொல்லும் எதிரியை சுட்டது 
எதிர்க்க நிற்க அஞ்சி தலைமறைவானவர்கள் .. 
இப்போது கண்விழிக்க தொடங்கியதும் .. நீ வார்த்து வைத்த "திராவிட மாடல் " சூரியன் சுட்டெரிக்கிறது தலைவா!..
காலமெல்லாம் தமிழர் நெஞ்சில் நீ வாழ்வாய் ..
இனம் மொழி பண்பாடு காத்த 
பெருவீரனே!..
ஆரியத்தை அலறவிட்டு 
பேரரசனே!!..
நீ..
பெருஞ்சுவர் 
உனை மீறி எதுவும் அண்டாது 
காலமானதாக சொல்கிறார்கள் 
ஆம் 
"காலமாய்" காத்துநின்ற எம்மான்!
என்றும் உன் புகழ் நிலைத்திருக்கும் 
..
கலைஞர் என்பதாண்டுகாலம் செப்பனிட்டபாதை தான் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது .. தமிழ் சமூகத்திற்கு தன் எழுத்தால்,பேச்சால்,செயலால் 
"பெருஞ்சுவராய் " காத்துநின்ற எல்லைசாமி.. எதிர்ப்போரும் எதோவொருவகையில் இவரால் பலனடைந்திருப்பர்.. இன்றைய வளர்ச்சியில், தமிழர் வாழ்வில் இவரின் பங்கு இல்லாமல் இல்லை .. 
காலம் கொண்டு சென்றிருக்கலாம் .. ஆனால் "காலமாய் " நம்மோடு நம் நினைவோடு என்றும் நிலைத்திருப்பார் ..
..
வாழ்க! கலைஞர் பெருமகன் புகழ்!!
..
ஆலஞ்சியார்  ..
(ஆலஞ்சி மு மன்சூர் )

ஆலஞ்சி.ம.தமீம் 
Thameemul Ansari M

Tuesday, August 8, 2023

கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் உயரத்திற்கு வா.. 
உலகம் அன்னாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
..
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  .

..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார்


Thursday, August 3, 2023

முத்தலாக்..
குர்ஆன் இறைவன் அருளியது ஷரியத் சட்டம் மனிதன் இயற்றியது என்ற சென்னை பல்கலைகழக துணைவேந்தர் திரு.சாதிக் அவர்களின் கருத்தை மேற்கோள்காட்டி தான் துவக்கி வைத்தேன் ..பல்வேறு கருத்தாளர்கள் கலந்துக் கொண்டு இஸ்லாமிய குடும்ப பின்னணிகளையும் யாரும் தலாக்கை விரும்புவதில்லை என்றும் பேசினர் .. கிராம ஜமாத் பஞ்சாயத்துகளில் தீர்த்துவைக்கபடுகிற சாதாரண விடயம் போல சிலர் பேசினார் மொத்தத்தில் பேசியவர்கள் அனைவருமே இந்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை கடுமையாக சாடினர் ..
..
முத்தலாக் 
இஸ்லாமிய நான்கு கருத்தியலில் (மத்ஹப்)
(ஷாஃபியீ, ஹனஃபீ, மாலிகீ, ஹம்பலீ ) ஹனபியில் மட்டுமே முத்தலாக் சொல்லபடுகிறது மற்ற மத்ஹப்களில் அது ஒருமுறை மட்டுமே சொல்லபட்டதாக கருதபடும் .. தலாக் விடயத்தில் பெண்கள் மட்டுமே பாதிக்கபடுகிற சூழலும் வாழ்வு பாதுகாப்பின்மையும் குழந்தைகளின் எதிர்கால நலனும் வெகுவாக பாதிக்கபடுவதை உச்சநீதி மன்றம் கருத்தில் கொண்டு விரைந்து ஒரு சட்டவரைவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.. அதை தொடர்ந்து  மோடி அரசு அசுரவேகத்தில் முத்தலாக்கை கடுமையான எதிர்ப்பிக்கிடையில் நிறைவேற்றியிருக்கிறது .. சாதக பாதங்கள் நிறைய இருந்தாலும் இதை இஸ்லாமியர்கள் எதிர்ப்பதற்கு காரணம் ஷரியா சட்டத்தை இவர்கள் யார் திருத்தம் செய்ய என்பது தான் .. ஆனால் உண்மையில் ஷரியா சட்டம் கலிபா உமர் காலத்தில் தான் அதிகளவு வரையறை செய்யபட்டிருந்தாலும் பின் வந்த இஸ்லாமிய அரசுகள் நிறைய இடைசொருகலை செய்திருப்பதாகவும் .வரையறை செய்யபட்டபோது கூட கலிபா உமர் அவர்கள் கூட இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என துணைவேந்தர் சாதிக் அவர்கள் கூறுகிறார்கள்.. இதிலிருந்தே மாற்றத்திற்குட்பட்டது அல்லது மிக கவனமாக கையாளவேண்டியதென்ற உண்மையை விளங்க முடியும் ..
..
சரியான காரணமின்றி தலாக் சொல்பவருக்கு மூன்றாண்டு சிறை என்பது இஸ்லாமியர்கள் மீதான அரசின் அலட்சியம்/கோபம்/வெறுப்பு  காரணமாக இருக்கலாம்.. விவாகரத்து செய்தவர் மீண்டும் இணைய விரும்பினால் .. அந்த பெண் வேறொருவரை மணந்து அவரிடமிருந்து விவாககரத்து (தலாக்) பெற்ற பிறகே மணமுடிக்கலாம் என்ற ஷரியத் சரத்'தும் மீறப்பட்டிருக்கிறது .. இந்த முத்தலாக் சட்டம் அவசரகதியில் இயற்றபட்டிருக்கிறது .. திருந்தங்கள் செய்யபடவேண்டுமே தவிர .. முழுவதுமாக நிராகரிக்கபட வேண்டிய சட்டமில்லை .. 
இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் பங்களாதேஷ் சவுதி அரேபியா நாடுகளில் கூட தடை விதிக்கபட்டது முத்தலாக் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்..
..
"மாங்குனி கித்தாப்" என்ற புத்தகத்தை உருவாக்கி 
ஷரியத் சட்சத்திற்கு விளக்கமளிக்க சிலர் மார்க்கஅறிஞர்கள் முன் வந்தார்கள், ஏனோ அந்த முயற்சி வெற்றி பெறாமல் போய்விட்டது.. அது போல மிக சரியான விளக்கங்களோடு இன்றைய காலத்திற்கேற்ப அடிப்படை கோட்பாட்டிலிருந்து மாறாக விளக்கம் தரும் நூலை இயற்றிட வேண்டும் 
மதரஸாக்கள் மார்க்க அறிஞர்கள் தரும் "பத்வா"க்கள் நிறைய குறைபாடுடையதாக இருப்பது தெளிவின்மையை காட்டுகிறது ..
இஸ்லாமிய நான்கு கருத்தியலையும் தவறென்று சிலரும் சரியென்று பலரும் பிரிந்து நிற்கும் போது 
ஷரியத்தின் விளக்கங்கள் கூட வெவ்வேறாக 
ஆளுக்கொரு பதிலை தருகிறார்கள் இஸ்லாமிய சமூகம் தன்னை புனர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டமிது
.. 
மனிதர்கள் வகுத்ததில் உள்ள சிரமங்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாறுதலை சந்திக்காவிடில் முற்றிலுமாக இழப்பை தரும் அல்லது யாரும் பொருட்படுத்தாமல்/கண்டுக்கொள்ளாமல் போக நேரிடும் .. முத்தலாக் என்பது குர்ஆனின் அடிப்படைக்கு எதிரானது என்ற உச்சநீதிமன்ற ஐந்துபேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை சாதாரணமாக கடந்து போக இயலாது ..  சட்டவிதிகளில் மாற்றம் தேவை என்பதில் எப்படி மாற்று கருத்தில்லையோ அதைபோல இது பெண்களுக்கு சிறியளவில் பாதுகாப்பை தரும் என்பதிலும் வேறு கருத்து இல்லை ..கொண்டுவந்த பாசிச ஆரிய அரசின் நோக்கம் புரிந்தாலும் இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து முஸ்லிம் வெகுதூரம் பின்னிட்டு நிற்கிறார்கள் என்பதை உணரவேண்டும் ..
..
முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்படும்.

முத்தலாக் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி நீதிபதியின் முடிவே இறுதியானது.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்ணிடமே, மைனர் குழந்தைகளின் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
..
இவை முத்தலாக் சட்ட வரைவுகள் இதில் பெண்களுக்கு சுமையும் அநீதியும் இருப்பதை சில பெண்கள் அமைப்பு குறை கூறுகின்றன சிறையில் இருப்பவர் எப்படி அந்த பெண்ணின் செலவிற்கு பணம் தரமுடியுமென்ற கேள்வியும் எழாமல் இல்லை 
மோடி அரசு அவசரகதியில் இயற்றிய சட்டத்தால் இஸ்லாமிய ஆண் மட்டுமல்ல பெண்ணும் பாதிக்கபடுவார்கள் என்பதே உண்மை அது தான் இந்த பாசிச அரசுக்கு தேவையாக இருந்தது 
..
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தெளிவான விளக்கங்களை தங்கள் சமூக மக்களிடம் எத்திவைக்க வேண்டும் .. விவாகரத்து என்றில்லை 
இஸ்லாமிய சிவல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையவும் முன் வரவேண்டும்..
"ஷரியத் சட்டம் குர்ஆன்  அடிப்படையில் பிறரால் விளக்கமளிக்கபட்டு கொண்டுவரபட்டதுதான் இதில் உட்பிரிவுகளை புகுத்தி தெளிவுபடுத்த சமூகம் முன்வரவேண்டும் " என்ற துணைவேந்தரின் கூற்றில் நானும் உடன்படுகிறேன் ..
..
சட்டங்கள் மக்களுக்கானது ஆள்வோருக்கானதல்ல
..
ஆலஞ்சியார்

Wednesday, August 2, 2023

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் சாத்தானின் குழந்தையாகி வெகுநாளாகிவிட்டது சீமான் .. இதற்காக அவர் மீது வழக்கு தொடரலாம் .. நாம் அவரின் கருத்து குறித்து பேசுவோம்..
..
ஒருவனை, ஒரு சமுகத்தை சட்டென்று உணர்ச்சிப்பட வைக்க வேண்டுமெனில் சாதி,மதத்தை கையில் எடுத்தால் போதும் .. அதைதான் சீமானின் முதலாளிகள் விரும்புகிறார்கள்.. இவரை போன்றவர்களை முன்னிலைபடுத்தியதும் திரும்ப திரும்ப அவரை இனத்தின் அடையாளம் போல் காட்டி திசை திருப்ப செய்ததலிலும் குறிப்பிட்டளவு வெற்றியைப் பெற்றிருக்கிறது பாசிசம்..
ஈழம் தமிழர் என நகர்த்தி கடைசியில் யாருமே கண்டுக்கொள்ளாமல் அடுத்த நாட்டு பிரச்சனை என நகர தொடங்கிய போது சாதியை கையிலெடுக்க அதன் நீட்டினான் மதம் வந்து நிற்கறது ..
..
அவர் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்கிறார் தினம் தினம் பேசுபொருளாக வேண்டும் ஆனால் கடைசியில் கோமாளியாய் நின்றாலும் கல்லா நிறைந்துவிடும் 
தினம் தினம் மாறி பேசுகிறாரே என யாரும் கவலைக் கொள்வதில்லை.. பைத்தியகாரனின் உளறல் என கடந்து போனதால் இன்று நேரடியாக பிற மதத்தினரை குறைச் சொல்கிறார் .. 
..
மதங்களை விமர்சிப்பதிலோ கோட்பாடுகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதில் எதிர்கருத்தை வைப்பதில் தவறில்லை ஆனால் இவர் அந்த சமுதாய மக்களை ஓடடுமொத்தமாக "சாத்தான்கள்" என்கிறார்.. புரிதலற்றோ தவறியோ பேசவில்லை மாறாக இந்துத்துவாவின் வேசம் கட்டி வருகிறார் ஆனால் நேரமையோடு பாஜகவில் இணைந்து சொன்னால் அதை கூட அவர்கள் அப்படியன என கடந்து போகலாம் ஆனால் இவர் தன்னை இனத்தின் மொழியின் காவலர் போல எண்ணிக்கொண்டு ஒவ்வொரு சாதியாக பேசி கடைசியில் சரியான இடத்தில் வந்து நிற்கிறார்
..
எதிரிகள்,பகைவர்கள் இவனை விட மேலானவர்கள் ஆனால் இவனைப் போன்ற அயோக்கியரகள் பெரும் ஆபததானவரகள் ..  இவரிடம் உள்ள சிறுவர்களை வழிகெடுப்பதோடு அறிவிற்கு விளங்கிடுவார்கள்.. வளரும் இளங்குருத்தில் விசம் பாய்ச்சும் கேட்டுக் கெட்டவர்கள்.. ஒரு தலைமுறையை இனம் மொழி சாதி மதம் எனச் சொல்லி பிற இன,மொழி,சாதி மதத்தவரை வெறுப்போடு பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.. இந்த நாக்பூரின் செல்ல நாய்கள் நம்மை வெறிபிடித்து கடிப்பதற்கு முன் கூண்டில் அடைக்க வேண்டும்.. கருத்துசுதந்திரம் என்றபெயரில் கழிவை கக்குகிற இவர்களை புறக்கணிக்கபட வேண்டியவர்கள் மடடுமல்ல விரட்டப்,ஒதுக்கப் வேண்டியவர்கள்
..
முழு வீடியோவை பார் என சிலதுகள்.. உண்மையில் உள்மனதின் வன்மமும் அரசியல் புரிதலின்மையும் பிழைப்புக்காக ஈழப் பொய்களை கட்டுகதைகள் சொல்லி திரைக்கதை எழுதிய இவர் உண்மையில் இனத்திற்காகவோ மொழிக்காகவோ எதையும் பிடுங்கியதில்லை.. தமிழ்நாட்டு அரசியலின் ஆக சிறந்த கழிவு இவர் .. இவர் கிள்ளியெறியபடவேண்டிய நச்சு ..
வழிகேடன், 
இளைஞர்களே! எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்

Monday, July 31, 2023

அகவை..
ஒன்று 
கணக்கில் கூடி..
..
என் தேடல்
நின்றபாடில்லை
தேடல் இல்லையேல்
நானில்லை..
..
காதலில்
கவிதையில்
அறிவியலில்
ஆன்மீகத்தில்
என் தேடல்..
நின்றபாடில்லை ..
..
என்னை நானே
எடைப்போட
கிழிசல்கள்
நிறைந்த
உண்மைகள்
வலிதரும்
பக்கங்கள்
அதை வார்த்தையில்
வடிக்க ..
என்னால் இயலாது ..
.. 
உண்மையை மட்டும்
பேசி போக
யோகி இல்லை நான்
கெட்டவன்..
கேடுகெட்டவனில்லை..
மிருகம் சிலநேரம் 
என்னுள்
வந்து போகும்..
..
ஒரு சார்பு பேசும்.
திராவிடன்..
தமிழ் பேசும்
பாமரன்..
அன்பு பேசினால்
அடங்கிப்போவேன்
அடக்க நினைத்தால்..
ஆட்டிவைப்பேன்..
..
சினம் சொன்னால்
சிவந்து போவேன்
சிரிக்கச் சொன்னால்
கரைந்து போவேன்
தமிழ் சொன்னால்
மலர்ந்துப்போவேன்..
..
அன்பில் மலரும்
அருந்தமிழ் பேசும்
அறிவியல் பேசும்
சான்றோர்கண்டால்
எழுந்து நிற்பேன்
..
அடிமை பேசும்
மடமைச் சொல்லும்
அறிவிலி கண்டால்
சிரித்து வைப்பேன்..
..
தினம் தினம்
புதிதாய் ஒரு
புத்தகம் ..
சில..பக்கங்கள்
சிலவரிகளாவது
வாசிக்க வேண்டும்
புதிதாய் 
ஒர்அறிவு
தினம் தினம் வேண்டும்..
..

வெற்றி..தோல்வி
உழைப்பு.. உயர்வு
அகங்காரம் ஆணவம்
அமைதி அன்பு..
நல்லது கெட்டது
எல்லாம் வேண்டும்
என்னை இழக்காத
என்னுள் வேண்டும்..
..
யாரையும் துன்புறுத்தாக
சொல்லில் சுவைமாறாத
சொக்க வைக்கும்
தேன் தமிழ்..
என்னுள்..
தீயாய் வேண்டும்
அணையாத..
தீயாய் வேண்டும்..
..
இரக்கம் கொள்ளும்
இதயமும்..
ஈகை கொண்ட நெஞ்சும்
சுனை  மாறா அறிவும்..
நிறம் மாறாமல் நானும்..
வேண்டும்..

***********************
என்னை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கும் முகநூலில் வாழ்த்திட்ட நல்உள்ளங்களுக்கும் 
நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் 
நன்றி!..
..
#நன்றியோடு..
*******************
அன்பெனும்
பெரும்மழையில் நான்
கொஞ்சம் மூச்சு முட்டுகிறது
அன்பிற்குண்டோ 
அடைக்கும்தாழ்..
..
முன்னிலும் முனைப்பாய்
செயல்பட வேண்டும்
இன்னும் இன்னும் 
நிறைய அறிந்திட வேண்டும்
புதிதாய் தினமொரு சேதி
அறிவில் சேர்த்திட வேண்டும்..
..
பழைமை பேசி
பாசாங்கு செய்வோரை
அறிவின் கூர் கொண்டு
வென்றிட வேண்டும்..
மூடம் தொலைத்து
முற்போக்கு விதைத்து
சொல்லும் சொல்லின்
வலிமை உணர்ந்து
கொண்ட கொள்கை
உறுதியுடைத்து
செப்பிடவேண்டும்..
..
அறிவேற்றதை
ஆய்ந்து சரியென்பதை
நாகரீகமேலிட
நல் சொல்லெடுத்து
நா.. இனிக்கும்
தேன்தமிழ் குழைத்து..
நல்லவர் சபையில்..
நவின்றிட வேண்டும்..
..
எப்போதும் போல்
இயல்பாய்..
இனிதாய்
ஈகைக்குணத்தோடு..
நேர்மையாய்
நான் ..நானாகவே
எப்போதும் வேண்டும்..
இன்னும் கொஞ்சம்
விரிவாய் விவேகமாய்
பகைவரும் 
போற்றும்வண்ணம்
கதைக்கவேண்டும்...
..
#அன்பெனும்_பெரும்மழையில்_நான்
..
ஆலஞ்சியார்

Sunday, July 30, 2023

அகவை அறுபதில்
அகமோ இருபதில் தான்..
இன்னமும் ..
செய்தததும் 
செய்ய செய்தததும் 
புள்ளியை தாண்டவில்லை..
ஆனாலும் அகம் மகிழ்கிறது 
..
வஞ்சனை இல்லை 
தற்புகழ்ச்சி இல்லை
வேண்டாததை விரும்பியதில்லை 
நீண்ட நாள் பகைமை கொணடாடியதில்லை 
அதிகம் ஆசைப்பட்டதில்லை 
ஆணவம் தலைக்கேற்றியதில்லை 
ஆனாலும் 
அவசரமும் கோபமும் அகன்றபாடில்லை..
..
வழி நெடுக நல்லவர்கள் 
வழிகேட்டில் விழாமல் காத்தனர் 
அறம் சார்ந்த அறிஞர்கள்
பகுத்தறிவை தந்தனர்.. 
வழிபோக்கனைப்போல வந்து சிலர் 
வாழ்வை வாழச் சொன்னனர்..
புத்தி போதாதது என்றனர்..
தலையில் கொட்டியும் 
தோளில் தட்டியும் 
செப்பனிட்டனர் 
..
ஆசைப்படு அளவோடு 
அகந்தை குறை..
பசித்து உண்,
பகிர்ந்து வாழ் 
பக்கத்து வீடடுக்காரனை நேசி 
இரக்கமும் ஈகையும் விடாதே 
அது உன்னை 
சரிந்துவிடாமல் காக்கும் 
பெரியவர்களை பேச விடு 
ஆடுவதை குறை.. 
ஆர்ப்பார்ட்டம் தவிர் 
என்றான் வழிபோக்கன் ..
..
நிலம் உனதல்ல 
நீ வந்து போகிறவன் 
முன்னவர்கள் 
நட்டதையும் விட்டதையும்
அனுபவிக்கிறாய் 
எதேனும் மிச்சம் வை 
ஓரு செடியேனும் நடு 
அது நிழலேனும் தரலாம் 
இங்கே எதுவும் உனதில்லை 
என்றான் வழிப்போக்கன் 
..
இத்தனை ஆண்டுகள் ஆயினும்
என்ன செய்தோம் என்ற கேள்வி துரத்துகிறது 
அன்பை விதைக்கவும்
பகுத்தறிவுக்கொண்டு 
கற்றதை போதிக்கவும் 
பாகுபாடற்ற சமுகம் அமைய
சிறியளவிலேனும் 
இயங்கிட வேண்டும்..
கற்றதை அறிந்ததை 
பிறர் சொல்லிக் கேட்டதை 
மூடம் தவிர்த்து 
முன்னோர் செப்பியதை இயன்றளவு எழுதிட வேண்டும் 
..
என்னையும் மீறி 
ஆர்ப்பரித்தெழும் 
அகந்தை 
தான் எனும் திமிர்
சின்ன சின்ன விடயங்களில்
காட்டும் அலட்சியம் 
எதிர்கருத்தை 
இளக்காரம் செய்தல் 
புரிந்தே புரியாததுபோல் நகர்தல்
சுற்றிவளைத்து சொக்கட்டான் ஆடுதல்
செவி இருந்தும் கேட்க மறுத்தல்
சில நேரம் சிலநேரம் அமைதியாய் இருத்தல் 
இவையெல்லாம் விடுதல் வேண்டும்..
..
அறுபதென்பது 
வெறும் "எண்" தான்
இன்னும் நிறைய 
தேட
சேகரிக்க,
கற்க.. 
கற்றதை "பறைய"
வேண்டியிருக்கிறது ..
காலம் தரும்/ தந்த படிப்பினையை
வரும் தலைமுறைக்கு தரவேண்டும்
நல்ல மனிதர்களை கொண்டிருக்கிறேன் 
அவர்களின் வாழ்த்துகளோடு 
தொடர்வேன்..
..
ஆலஞ்சியார் 







 

Tuesday, July 18, 2023

NDA கூட்டம்.. 🤣
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 
I.N.D.I.A (Indian national Democratic Inclusive Alliance) 
அமைந்தவுடன் தன் கூட்டணி கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தி நம்மை
 நகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.. 
..
யாரெல்லாம் இவர்களோடு என்பதிலிருந்தே தெரிகிறது பாஜகவின் பதற்றம் .. சிவசேனாவிலிருந்த  பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே  தேசியவாத காங். லிருந்து பிரிந்து வந்த அஜித் பவார், நிதிஷ்குமாரின் பிரிந்த ஜித்தன்ராம், என பரிதாபகரமானவர்களை வைத்துக்கொண்டு NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டம் .. அதில் தமிழகத்திலிருந்து த.மா.க வாசன்,புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் பச்சைமுத்து போன்ற செல்வாக்குமிக்க🤣 தலைவர்கள் காண  I.N.D.I.A அணி திகைத்து நிற்கிறது..
..
பிரதமர்  ஊழல்வாதிகள் கூட்டணி அமைத்திருப்பதாக எடப்பாடியையும்  அஜித் பவாரையும் வைத்துக் கொண்டு  சிரிக்க வைக்கிறார் ..
பாஜகவின் பயமும் தோல்வியும் 
கண்முன்னே தெரிகிறது 
பாஜகவின் அராஜகம் கட்சிகளை உடைத்து  கொள்ளைப்புற வழியே ஆட்சி அமைப்பது  அரச இயந்திரத்தை மிரட்டவும் பயமுறுத்தவும் பயன்படுத்துவது தங்களை தவிர யாரும் யோக்கியர்கள் இல்லை என நினைப்பது,  நீதித்துறையையும்  தன்னாட்சி அமைப்பையும் அலங்கோலப்படுத்தி ஜனநாயக மாண்புகளை கொன்று சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொக்கரிப்பதும், நாடாளுமன்றத்தில் ஊழல்,பொய், என்று கூட பேசகூடாது என தடை விதித்து அவசரகாலத்தை விட  மோசமான 
உண்மையில் ஜனநாயகற்ற நிலை..
 நாடு மிக மோசமான காலகட்டத்தில் மீண்டும் ஒரு சுதந்திர போர் தேவை என்பதை உணர்ந்து எதிர்க்கட்சி கள் ஒருங்கிணைந்திருப்பது நம்பிக்கையை  தருகிறது
..
ராகுல் மிக தெளிவாக பாஜகவிறகும் எதிர்க்கட்சிக்குமான போராட்டம் அல்ல நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் கொள்கைக்கெதிரான  போராட்டம் என்கிறார்.. உண்மை அதுதான் பாஜகவின் செயல்பாடுகள் அதிகார தோரனைகள், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற திமிர் பேச்சுகள், ஊடகங்களை விலைக்கு வாங்கி தொடர் பொய் பரப்புரைகள்,நீதிபதிகளை மிரட்டபடுவதும் கருத்தியலாளர்கள் கொல்லபடுவதும், சிறுபான்மையினரும் பட்டியியலினத்தவர் மிரட்டி ஒடுக்கபடுவதும், பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்பதும் மத கலவரங்கள் மூலம் பதற்றத்தை கொண்டுவந்து மக்களை பீதியில் வைத்திருப்பதும் சாதி மோதலை உருவாக்கி மக்களின் உணர்வுகளை வெறியூட்டி குளிர்காய்வதும் தான் பாஜகவின் அரசியல் சித்தாந்ததம்..
..
மக்கள் நிம்மதியோடு ஒற்றுமையாய் பல்வேறு சமய கோட்பாடுகளும்,நம்பிக்கைகளும், மற்றவர் வாழ்வில் இடைஞ்சலாக இல்லாமல் வாழ்ந்து உலகிற்கு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்று பறைச்சாற்றி வாழ்ந்த நாட்டில் மதம் பிடித்து நாசம் செய்துவிட்டது ..  தெருவில் போகும் ஒன்று வீட்டிற்கும் நுழைந்து அழுக்காக்கிவிட்டு போனால் துடைத்து சுத்தம் செய்துதானே ஆகவேண்டும்  அதை செய்ய தான் (I.N.D.I.A).. 
தேசத்தின் தேவையும் அதுதான் 
..
இழந்த ஜனநாயகத்தை மீட்க அனைவரும் ஒற்றுமையாய் வாழ பாசிச பயங்கரவாத கொடுங்கோல் ஆட்சியை விரட்டியடிக்க இன்றைய
 தேவை.. (I.N.D.I.A).. 

எங்களுக்கு பதவி தேவையில்லை இந்தியாவை மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியம் என காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது..  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே .. மிக தெளிவான திட்டமிடலோடு தொடங்கி பயணிக்கிறது .. பாஜக அதனால் தான் பதறுகிறது ..  
..
தொடர்ந்து ஒருகட்சி பத்தாண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருப்பது ஜனநாயகத்திற்கு கேடு .. பாசிசத்தின் கொடூர பற்களை பிடுங்குவோம்.. இந்தியாவை சுத்தப்படுத்துவோம்.. 
இந்திய ஒன்றியம் நமக்கானது எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை.. 
Really 
INDIA is BORN..
..
தமிழ்நாடு பிறந்த நாளில்
I.N.D.I.A பிறந்தது மகிழ்ச்சி ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
மதுரையில் ஓர் அறிவாலயம்.. 
..
எழுதுகோல் கொண்டு சமூகத்தை பண்படுத்திய பேரரசனின் நூலகம்
ஒரு இனம், சமூகம் மேம்பட, பண்பாட்டை காக்க, இனத்தின் மேன்மையும் வளமையும் அழியாது காக்க, புனைச்சுருட்டுககளைச் சொல்லி மடமையில் மூழ்க செய்யாமல் அறிவுக்கொண்டு பார் உண்மை விளங்கும் வரலாறு தெரியும் பண்பாடும் கலையும் மொழிவளமும் சொல்லாட்சியும் புரியும் என்ற மாமன்னனின் பெயரில் ஒரு அறிவாலயம்.. அரசியல், சமூகநீதி, தொலைநோக்கு சிந்தனை,பார்வை,செயல் என வாழ்ந்த காலத்தில் "தரு" வாய் நின்று நிழல் தந்த எங்கள் ராசராசனின் பெயரில் நூலகம்..
சமூகத்தின் இருளகற்ற காலமெல்லாம் எழுதிய கலைஞரின் பெயரில் நூலகம் ஆதிக்கத்தின் பிடியில் இருந்த கல்வியை அனைவருக்கும் கிடைக்க ஊர்தோறும் பள்ளி, தொடங்கி மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரியென கல்விப்புரட்சி செய்த பெருமகனார் கலைஞர் பெயரில் நூலகம் 
சங்கம் வளர்த்த மதுரைக்கு ஓர் பொன் மகுடம் 
..
 ஒரு இனத்தை வரலாற்றை பறைசாற்ற,  அறிவுடைமை சமூகமாய் திகழ்ந்த தமிழனின் வரலாற்றை, எதையும் அறிவுக்கொண்டு பார்த்த தமிழனின் பெருமையை உலகிற்கு சொல்ல தமிழ் வளர்த்த மதுரையில் மாபெரும் நூலகம்  .. என்பதாண்டு பொதுவாழ்வு பெருமகனுக்கு இந்திய ஒன்றியத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமையாய் தன் தொலைநோக்கு சிந்தனையால் எவரும் தொட முடியாத உச்சத்தை தொட்ட பேரறிவாளனின் பெயரில் நூலகம் 
விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்க காலமெல்லாம் உழைத்த ஓய்வறியா ஒப்புமையில்லா பேரருளாளனுக்கு மதுரையில் புகழ்பேச ஓர் அறிவுசுரங்கம் 
..
நூலகம் அறிவின் நுழைவாயில் ..
அறிவுடைய சமுதாயமாக மாற நல்லொழுக்க சமூகத்தை சமைக்க,எதையும் அறிவுக்கொண்டு பார் விளங்கும் புரியும் மேம்படும் , அறிவின் நிழலே பண்பை தரும், உலகத்தை அறியலாம், பொய் எது என புரியும் புரட்டுகள் பொசுங்கும்,  உண்மை எனும் ஒளி வழிகாட்டும், வழிநடத்தும்,..
..
கலைஞர் நூற்றாண்டு நூலகம் பன்முகத்தனமையோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாய் அமைந்திருப்பது திராவிடம் தந்த அறிவுப்பசிக்கான தீனி .. குழந்தைகள் தொடங்கி ஆய்வு மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்திருப்பது திராவிட அரசு படிப்பிற்கு தரும் முக்கியத்துவத்தை சொல்கிறது இந்திய ஒன்றியத்திலேயே அதிகம் நூலகம் கொண்ட தமிழ்நாடு அதனால் தான் சிலர் பதறுகிறார்கள்.. மக்களை மடைமையில் வைத்திருந்தால் ஏன் என்று கேட்க மாட்டான் மதத்தை புராணபுரட்டைச் சொல்லி வயிறு வளர்க்கலாம் அடிமையாக நடத்தி அதிகாரம் செய்யலாம் என நினைப்பவர்கள் கலக்க மடைகிறார்கள்.. பெட்டிகடை வைத்து முதலாளியாகலாம் அப்பன் தொழில் இருக்க ஏன் அடுத்தவனிடம் கைக்கட்டி வேலை பார்க்கிறாய் என மடைமாற்ற செய்கிறார்கள் ஆனால் திராவிட அரசு கல்வி முக்கியம், அதுவே உன்னை திருத்தும் மேம்படுத்தும் உயர்த்தும் நல் வழிகாட்டும் மானத்தோடு தலை நிமிர செய்யும் என தொடர்ந்து அறிவுக்கண்ணை திறக்க கடமையாற்றுகிறது.. 
 ..
நூலகம் அறிவின் திறவுகோல்..
திராவிடம் அறிவின் தேடலுக்கான பாதை .. மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல்  கருணாநிதி ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
 மாபெரும் அறிவு சுரங்கத்தை மக்களுக்கு தந்து வரலாற்றில் இடம் பெறுகிறார் .. காலமெல்லாம் தமிழ் சமூகம் நன்றியோடு நிற்கும் ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Friday, July 7, 2023

நாடு..
இந்தியா மிக மோசமான சூழலில்,  கடமை உணர்வற்ற ஊடகங்கள், நெறிதவறும்,நீதிமன்றங்கள், பாவிகள் தங்களோடு இணைந்தால் அடுத்த நொடி புனிதர் ஆகலாம்.. கோடிகளில் ஊழல் செய்ததாய் அமலாக்கத்துறை ரெய்டு  நடத்தி பாஜகவில் இணைத்து புனிதவேசம் கட்டுகிற கொடுமை.. சனாதனம் தான் நாட்டை ஆள்கிறது, ரஷிகளும் மகான்களும் தான் வழிநடத்துவதாக ஒரே கூச்சல்.. நாட்டின் சட்டங்கள் வளைந்து நிற்கிறது.. தலைமை அமைச்சர் ஊழலை ஒழிப்பதே என் தலையாய பணி என்று PMCARE திட்டத்தில் எவ்வளவு வந்தது எப்படி வந்தது எங்கு சென்றதென சொல்லமறுத்து நியாயஸ்தன் ஆகிறார்.. 
..
பக்கத்து வீட்டுகதவில் சிறுநீர் கழித்தவனை நாம் கண்டுக்கொள்ளாததால் மனபிறழ் மனிதனை மூஞ்சியில் சிறுநீர் கழிக்கிறான் மனநோயாளி.. பிஞ்சு குழந்தையை கற்பழித்தவன் மாலைபோட்ட வரவேற்கிற நிலை  திருடனும் கொலைகாரனும் பாரத் மாதாக்கீ ஜெ போடுகிறான் கிரிமினலை கட்சி சேர்த்து கட்சியை வளர்க்கிற பாஜக தேசத்தின் சாபம்
..
நீதிமன்றங்கள் நீதியை இழந்து நிற்கிறது   வேண்டியவர்கள் தண்டிக்கபட கூடாதென காலதாமதம் செய்து ஊழல் குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் அதிசயம் உலகில் எங்கும் பார்க்க முடியாது .. ராணுவத்தில் பிடியில் இருந்த அண்டை நாட்டில் கூட உச்சநீதிமன்றம் நடுநிலையாக நின்றது இங்கே சொல்வதற்கே படு கேவலம்..
..
தீர்ப்பு வல்லவனுக்கே சாதகமாய் நிற்பதும் சாமானியன் சொல்லன்னா துயரை சந்திப்பதும் 
நெறி தவறும் நீதியாளர்களுக்கு பணி முடிந்து உயர் பதவி தருவதும்  நேர்மையோடு சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு சொல்வேன் என்போருக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் அரசே அதற்கு துணை நிற்பதும் இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை கொன்று தின்கிறது 
..
உலகின் சிறந்த ஜனநாயக கட்சி, நாங்கள் தான் ஊழலுக்கு எதிரானவர்கள் உத்தமர்கள் என்பவரின் பொய்களையும் வேசகட்டலையும் கணக்கிட்டால் அழுகிய வாடை வருகிறது ..  தேர்தல் நேரத்தில் பொய்யான தகவலை தந்ததற்காக பதவியை பறிக்கலாமென்றால் முதலில் பட்டம் பெற்றதாக தாக்கல் செய்த மூலவரை தான் முதலில் நீக்கவேண்டும்.. அப்பாவு வழக்கில் இன்னமும் தீர்ப்பு வரவில்லை.. 
..
இந்தியாவின் முகம் உலக அரங்கில் வேர்த்து நிற்கிறது.. மதமும்,சாதியும், புராணபுரட்டும், பொய்யும், கலவரமும் மானுடப் பற்றற்ற செயலும் இந்தியா எனும் பிரமாண்டத்தை சிதலடைய செய்கிறது.. நாக்கில் ராமரும்,கக்கத்தில் கொடுவாளும் வைத்திருக்கிறார்கள் என்றார் அம்பேத்கர்.. இந்த மண்ணை சிறு சுயநலக்கூட்டம் தங்களின் வளரச்சிக்காக,  பெரும் சமூகத்தை மடைமையில் ஆழ்த்தி சுகமாக வாழ்வு  வாழ்கிறது.. இந்திய நற்குணமே பன்முகததன்மையில் பெருமைக்கொள்வதும், இணைந்து நிற்பதும் தான்.. பாஜக ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒரு கூட்டம் மட்டம் உயர்வடைகிறது .. விடுதலை பங்கு கொள்ளாத கூட்டம் அது.. திறக்கப்படாத கதவுகளுக்குள் காரியம் சாதிக்கும் கூட்டம் அது..
இந்திய ஒன்றியத்தின் நெடும் துயரம் அது ..
..
இந்துத்துவா என்பது அனைத்து இந்து சமூகத்திற்கானதல்ல .. எல்லோரையும் சமமாக நடத்தபடுவதுமல்ல .. ஒருசாராரின் எண்ணங்களும், மேன்மையும்,காத்துநிற்க பயன்படுமே தவிர ஒரு பயனுமில்லை.. மனநோய் பாதித்த இளைஞரின் மீது மூத்திரம் கழிக்கும் செயல்தான் அவர்களின் யதார்த்தம் ..இதோ மூத்திரம் கழித்த சுக்லா குடும்பத்திற்கு ₹50,000 பிராமணர் சங்கம் அறிவித்திருக்கிறது ..இதுதான் அவர்களின் உண்மையான முகம் 
 ..
2024 அனைவரையும் அரவணைத்து, வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கி சமநீதியை வழங்கி பதற்றமற்ற சூழலை தரும் நிலை வரவேண்டுமானால் பாஜக விரட்டப் வேண்டும்  பொய்யர்களின் கூடாரம் தகர்க்கபடவேண்டும் மதவெறியும் கலவரமும் ஆயுதமாக கொண்டு திரியும் மகாபாவிகள் கையிலிருந்து இந்தியா மீட்கபடவேண்டும்  சுய பெருமை
களைந்து நாட்டை மீட்க ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து நின்றால் வெல்லலாம்.. எதிரி ஒன்றும் அத்தனை பலசாலி இல்லை ஆனால் பிரிக்கும் சூழ்ச்சி அறிந்தவன் .. 2024 நமக்கானது வெல்வோம் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, July 3, 2023

உதயநிதியின் பார்வையும், பதிலும் அவரின் அரசியல் புரிதலையும் மேன்மையையும் காட்டுகிறது .. ஈராயிரமாண்டு அடித்தமர்த்தலை சில ஆண்டுகளுக்குள் மாற்றத்தை தந்துவிட முடியாதென்றாலும் ஐம்பதாண்டுகளாக அதன் பிரச்சாரத்தை அடுத்த கட்ட நகர்வை நோக்கியே திராவிட இயக்கங்கள் பயணிக்கின்றன..
..
யாரெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறாரகளோ அவர்களுக்கெதிராக தான் இயக்கம் நின்றிருக்கிறது, தொடர்ந்து  நிற்கும்.. பெண்கள் மீது குடும்பம் திணிக்கும் ஆதிக்கம், 
அடிமைத்தனம் தொட்டு  எங்கெல்லாம் எவரெல்லாம் அழுத்தபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாய் நின்று குரல் கொடுக்கும்..  காலங்காலமாய் அமுக்கிவைக்கபட்டவர்கள்,மூர்ச்சையாகி கிடந்தவர்கள் இன்று தலைநிமிர காரணியாக திகழ்ந்தது திராவிட இயக்கங்கள்தான்
..
தலித்தியம் பேசும் இயக்கங்கள்,நபர்களுக்குள்ளும் பாகுபாடும், தீண்டாமையும் இப்போதுமிருப்பதை காணலாம்.. இன்றும் அருந்ததியர்களை  சக்கிலிய பய என்றழைக்கும் பறையர் "பெருமகன்களை" ரஞ்சித்தின் கவனகுறைவாக பார்க்கவேண்டுமா..,? அருந்ததியினர் உள்பட ஓதுக்கீட்டை எதிர்த்தவர்கள் யார்
 இடைசாதி திமிரென்பவரகள் தங்களை விட தாழ்நதவன் என்ற மனப்பான்மையை விடவேண்டும்.. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றுணர்தல் வேண்டும்..
..
இந்திய ஒன்றியத்திற்கே எடுத்துக்காட்டாய் சமூகநீதியை பறைசாற்றும் மாநிலம் தமிழ்நாடுதான் முழுவதுமாக சமநீதியை உரிமை பெற்றுதந்துவிட்டோம் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்க மாட்டேன் இன்னும் அடக்குமுறையும் ஆணவமும் தலைக்காட்டுகிறதென்பதும் அதற்கு சாதி மத அமைப்புகள் காப்புகட்டுவதும் , தேர்தல் அரசியலில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்துவதும் மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை .. நிறைய தடங்கல்களும் தடைகளும் தொடர்ந்தாலும் இன்னமும் வெகுமக்களை பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க காரணியாய் அமைந்ததற்கு திராவிடமே காரணம்.. வடமாநிலங்களில் முதல்குடிமகனை நடத்தும்விதம் நாம் காண்பதுதான்.. இங்கே எதிர்த்து பேசவும் போராடவும் உரிமைகளை பெறவும் பெரியாரெனும்  பெருஞ்சுடர் வெளிச்சம் தந்தது .. 
..
திமுகவை விமர்சிக்கும் இவர்கள் சனாதனத்தை, ஏற்றதாழ்வை, தங்களின் சித்தாந்ததமாக கொண்டு செயல்படும் பாசிச பாஜகவை மெல்லியளவில் கூட தும்முவதில்லை.. இவர்கள் சமூகநீதி எல்லாம் திமுக எதிர்ப்பில் கரைந்துபோகும் .. 
..
நீங்கள் இப்போது தான் சமூகநீதிப் பற்றி
பேச முனைகிறீர் நாங்கள் ஏற்கனவே விரிவுரை நிகழ்ந்தியவர்கள்.. "பராசக்தி" அருளியவர்கள் மலைக்கள்ளனையும் மாமன்னனாக்கிய கூட்டம்ங. 
"பரியாரி" கடையை சிகை அலங்காரக்கடையாக மாற்றியவர்கள்.. திமுக சமூகநிதிக்கான இயக்கம் தொடர்ந்து பேசும்  பகுத்தறிந்து செயல்படும்.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
மாமன்னன் ..
சமூக அவலங்களை இன்னும் இங்கே ஏன் தேவை பெரியாரிய கருத்துகள் என்பதையும் இந்த கட்டமைப்பே "கௌரவம்" எனும் போதையில் வீழ்ந்து கிடைப்பதை என்னதான் அதிகாரத்தில் அமர்த்தினாலும் எங்கள் முன் பொம்மலாட்ட பொம்மைதான் என்பதையும் அதன் வலியையும் மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறது ..
..
வடிவேலு எனும் "மகாகலைஞன்" வாழ்ந்துகாட்டியிருக்கிறார் .. ஃபஹத் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகரில் ஒருவர் அவரின் கண்கள் அவரை உடல்மொழியை,குணத்தை அவரின் பாத்திரத்தை பேசுகிறது.. நூறுபக்க வசனத்தை அவரின் கண் மொழி நொடியில் உணர்த்திவிடுகிறது .. உதய் சிறந்த கதை தேர்வை அரசியல் சமசரம் செய்து கொள்ளாமல் நடித்திருப்பது கவனத்தை ஈர்க்கும் 
.. 
சமூகநீதி என பேசிக்கொண்டிருந்தாலும் இன்னமும் சம நீதியை நம்மால்  வழங்க முடியவில்லை என்ற உண்மை நம்மை அறைகிறது..  சில காட்சிகள் நுண்ணரசியலை எது நமக்கு சாத்தியம் பாதுகாப்பு என்பதை சொல்கிறது .. வடிவேலு வீட்டில் புத்தரும் அம்பேத்கரும் ஆனால் பிரச்சனையை தீர்க்க முதல்வரை சந்தித்த விட்டு போகும் போது பாத்துப்போ என்கிற போது நான் பழைய மாமன்னனல்ல என வடிவேலு சொல்வார் அப்போது பெரியாரை காட்டுகிறார்கள் மெல்லிய புரிதல் வருகிறது தமிழ்நாட்டில் பெரியாரெனும் "பெருஞ்சுவரே" காக்கும் வழிநடத்தும் ஒருங்கிணைக்கும் என்பதை உணர்த்துகிறது  நமது அடையாளம் பெரியார் தான்
..
எத்தனையோ பேர் சொல்லியும் உட்காரமாட்டார்ண்ணு சொல்லுறீயே நீ உட்கார சொன்னீயா ..?
, உங்க அப்பாவை நிக்கவைச்சது என் அடையாளம் உன்னை உட்கார சொன்னது என்னோட அரசியல் 
என கூர்மையான வசனங்கள்
மிரட்டல் நடிப்பு, காட்சிபடுத்திய விதம் அழகுதருகிறது 
தமிழ் சினிமாவில் இன்னமும் நாம் பேச வேண்டிய விவாதிக்க வேண்டிய புரிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் வரவேண்டும், தலித் அரசியலாக பார்க்காமல் தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் மனநோயை சீர்படுத்த வேண்டியதை தொடர்ந்து தமிழ் சினிமா செய்யும் இங்கு பேசாமல் வேறெங்கு பேச முடியும் .. 
சாதி மசுருல்லாம் இல்ல அப்பன் எனக்கு கொடுத்துவிட்டு போனது நான் என் மகனுக்கு நான் கொடுக்கணும் என்ற வசனம் உறைய வைக்கிறது 
..
பொழுதுபோக்கிற்கான படமல்ல சமூகத்தின் பழுதை நீக்க சொல்லும் படம் .. சமூகநீதி,சமநீதி வேண்டுமென்பதை சொல்லும் திரைப்படம்
 ..
ஆலஞ்சியார்

Friday, June 30, 2023

நல்ல தொடக்கம்..
சனாதன சாம்ராஜ்யத்தை வீழ்த்த பெரும்படை ஒன்று தயாராகிறது.. அவ்வளவு எளிதல்ல அதிகாரம் பலம்  பணம், அரச இயநதிரம் அதற்கெல்லாம் மேலாய் மதம் .. மக்களின் அறியாமையை, புராதன கட்டுக்களை மண்டையில் ஏற்றி அவனைக் கொண்டே பல்லாக்கை தூக்க செய்து பலகாலமாய் பவனி வரும் தேரின் அச்சாணியை பிடுங்குவது சுலபமல்ல.. பெருமலையை உளிக்கொண்டு சிதைக்கும் செயல் தொடர்ந்து அடித்தடித்து உடைத்தோறிவோம்..
..
மக்களை மனவோட்டம் இந்த அழிச்சாட்டியகாரர்களின் அழிமதியாளர்களின் பொய்யே பிரதானமாக கொண்டு கோட்டை எழுப்பி கொக்கரிக்கும் ஈனர்களை  குறிப்பிட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஓட்டுமொத்த மக்களை வதைக்கும் செயலை கண்டு சினர்ந்தெழுந்து நிற்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாய் நிற்போரை ஒருங்கிணைத்து பொது உடன்பாட்டில் இந்த பாசிச பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே செயல்திட்டத்தில் இணைந்து நிற்கிறார்கள் ..தங்களுக்கும் இருக்கும் வேற்றுமையை மறந்து பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டுமென ஒரே நோக்கம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவுமில்லை 
..
சனாதன எதிர்ப்பின் அடித்தளம் மிக பலமாக உள்ள தமிழ்நாட்டை எப்படியும் உடைக்க வேண்டுமென பெரும் காத்திருப்பில் பாஜக தொடர்ந்து பொய்யை புரளியை வேகமாக பரப்புவதும் அதை ஊடகங்களை கொண்டு ஊதி பெரிதாக்குவதும் சற்றென்று பொட்டிதெரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.. எதையு‌ம் ஆய்ந்தறிந்து ஏற்கும் தமிழரின் குணம் பண்டே பழக்கபட்டதால் பாவம் பாசிசம் முழி பிதுங்குகிறது..வட மாநிலங்களில்
மதத்தை முன்னுறுத்தி பயம் காட்டி தொடர்ந்து மூளைச்சலவை செய்து அறியாமையில் உலளச்செய்து வந்தது.. சமூகநீதியை முன்னிறுத்தும் பீகாரிலிருந்து சிறிய பொறி பெரும் சுவாலையாக
 (கனலொழுங்கு) மாறி பாசிசம் எனும் தீமையை சுட்டெரிக்கும்..
..
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் வலுவான கட்சிகள் தலைமையில் குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு தொகுதி பங்கீடு வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் பேசியிருக்கிறார்.. வரவேற்கத்தக்கது .. ஏதோவொரு கட்சிக்கு எதிரானது அல்ல இந்தியாவின் ஐனநாயகதன்மையை மதசார்பின்மையை, பன்முகதன்மையை காப்பதற்காக ஒருங்கணைய வேண்டிய அவசியத்தை உணர்த்தி உரையாற்றியிருக்கிறார்.. நோக்கம் ஒன்றுதான் இந்தியாவின் முகத்தை காப்பது உலகின் மிகப்பெரிய மதசார்பற்ற ஜனநாயக நாட்டின் இறையாண்மை காப்பது ..
வெல்வோம் ..
முடியாதென்று ஏதுமில்லை..
..
ஆலஞ்சியார் 

Friday, June 23, 2023

கலைஞர் கோட்டம் ..
மாபெரும் தலைவனுக்கு ,தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்த அறிஞருக்கு, தமிழர் பண்பாட்டை காத்துநின்ற பெருவுடையானுக்கு ,
பிறந்த மண்ணில் பெயர் சொல்ல ஒரு கோட்டம்.. 
..
14 வயதில் திருவாரூர் வீதிகளில் படையோட்டம் நடத்திய பெருவீரன்..
நிலகிழார்களின் கைகளில் இருந்த தஞ்சையை மீட்ட எங்கள் ராசராசன்
ஆரூர் தந்த சங்கத்தமிழ், கீழ்தஞ்சையின் கனியமுது, தமிழை ஆண்ட தமிழ்நாட்டை ஆண்ட பேரறிவாளன், எல்லோர்க்கும் இனிய பேரன்பாளன் ,எதிரிக்கும், பகைவர்க்கும்,துரோகிகளுக்கும் அருள்பாலும் பேரருளாளன்..
..
தமிழ்நாட்டின் பெருஞ்செல்வம், தமிழர்களின் பெரும் தவம்,
எளியவரின் அமுதசுரபி, கடைநிலையோருக்கு கிட்டிய கருணை.. பொதுவாழ்வின் பேரொளி, துன்பத்தை நீக்கும் யாழிசை, எதற்கும் அஞ்சா திராவிடத் திமிர், பகைவரும் மயங்கி நிற்கும் தமிழிசை, அரசியல் கற்றோரக்கும் கற்போர்க்கும் தெளிவான பாடத்திட்டம்(Syllabus)..
..
என்பதாண்டு பொதுவாழ்வு அறுபதாண்டு கலைவாழ்வு..
எளியவரை, இயலாதோரை ஏற்றிட படிகளாய் நின்று , பகுத்தறிவு துணைக் கொண்டு திட்டம் வகுத்து, 
பள்ளத்தில் கிடந்தோரை படிகளில் ஏற்றி அனைவருக்கும் அவர்தம் உரிமையை பெற ஓயாது உழைத்த பெருந்தலைவன் .. தமிழ் நாட்டின் ஒளிவிளக்காய், தமிழர்களின் அகல்விளக்காய், மங்காத புகழ்விளக்காய், மானுடத்தின் மணிவிளக்காய், திகழ்ந்திட்ட 
செம்மொழி நாயகனுக்கு  ஆரூரில் கோட்டம்  ..
தமிழர் நெஞ்சமெல்லாம் கொண்டாட்டம்..
வாழ்க! கலைஞர்..
..
 ஆலஞ்சியார்


 


Monday, June 19, 2023

தலைவா..
உன் கண்ணசைவில் 
காத்திருந்து காரியமாற்ற 
கழகத்தவர் நெடிய வரிசையில் 
நீயோ.. அமைதியாய் 
காய் நகர்த்தி அதிரவைக்கிறாய்..
..
வல்லவனோடு மோதலாம் 
இவர்கள் 
சரிநிகரில்லாதவர்கள் 
சூழ்ச்சியும்  வஞ்சமும் 
நஞ்சும் கலந்த நரகல்கள்..
இவர்களிடத்தில் 
அறம் செல்லாது தலைவா..
நாகரீகம் 
ஒற்றை வழி பாதையல்ல 
கர்ப்பிணி வயிற்றில் கத்திவைப்பவனிடம் 
பூக்களையா தர முடியு‌ம்..
..
அறநெறி அரசியல் 
அற்றுப்போன காலத்தில் 
போதனை வகுப்புகள்
பலனளிக்காது தலைவா..
நாம் 
அரசியல் பல்கலைக்கழகத்தில்
பாடமெடுப்பவர்கள்..
அரிச்சுவடி கூட தெரியாதவனிடம்
எதைச் சொன்னாலும் புரியாது 
அவன் வழியில் சென்று
அறைந்தால் தான் புரியும் 
..
பொறுப்பானவர்கள்,
புரிந்தவர்கள்,
கருத்துவேறுபாட்டை கூட ரசிப்பவர்கள் 
ஜனநாயகத்தை நேசித்தவர்கள் 
பண்பான பெருமக்களோடு 
அரசியல் செய்தோம் 
அதுவொரு காலம் 
இன்றோ  
பொய்மையும்,புரட்டும் 
எதிர்கருத்தை நசுக்க நினைக்கும் 
அரசியல் கோமாளிகள்
நம்மை
அடக்கநினைக்கிறார்கள் 
நமக்கு எல்லா அரசியலும் தெரியும்
மிசாவை காட்டினால் விசா வாங்க வேண்டிவரும் என்றவர்கள் 
உறவுக்கு கை கொடுப்போம்
உரிமை குரல் கொடுப்போம் என்றோம் 
எங்கே
எங்கனம் 
எப்படி ஆடுவதென 
கற்பிப்பவர்கள் 
உன் கண் அசைவு போதும் தலைவா..
..

நாம் 
வாய்க்கரிசி போட்டுக்கொண்டுதான் 
வலம் வருகிறோம்..
விவரகேடுகளும் 
விளங்காதவர்கள் 
பதவிக்காக எதையும் செய்யும் 
பாதகர்களுக்கு 
புரிகிற மொழியில் தான் 
பேச வேண்டும் 
புறவழியில் வந்தவர்களுக்கு
நம் பெருமைகள் தெரியாது 
..
சில நேரம் 
ரௌத்திரம் வேண்டும் 
கொடுவாளை தூக்குபவனிடம் 
அஹிம்சை பேசி பலனில்லை 
அவன் வழியில் வீசினால் தான் 
மண்டையில் ஏறும்..
அடித்தாடவேண்டிய  நேரமிது ..
ஆடு தலைவா..
ஆரிய தாண்டவத்தை அடியோடு 
பெயர்த்தெறிய வேண்டிய நேரமிது
ஆடு..
எதிரிகள் காலை நடுங்க..
..
பயமில்லை நம் இனத்திற்கு
அஞ்சாமை நம் உடைமை
..
ஆலஞ்சியார்





Tuesday, June 13, 2023

ஜெயலலிதாவை ஊழல் முதல்வரென எப்படி சொல்லலாம் என அதிமுக ஜெயகுமார் பதறுகிறார் .. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை  என்கிறார் பன்னீர்,  அதிமுகவிற்கே கற்பூர வாசனை தெரியாதே!  
.. 
தமிழ்நாட்டை ஊழல் மாநிலமாக பார்ப்பதாக அவரின் பேச்சு இருந்ததையும் கூட்டணியில் இருந்துக்கொண்டே சொல்வது நியாயமா என சத்தம் குறைந்த தோனியில் புலம்புகிறார்.. அண்ணாமலை உண்மையைதான்  பேசுவாரென குஷ்பு பக்கவாத்தியம் இசைக்கிறார்,  தமிழன் பிரதமரென்றால்  கம்பராமாயண புகழ் அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகம் படித்த கடைசியாக படித்த புத்தகத்தை மறந்து போன 
பழனிதான் தகுதியானவரென பொன்னயன் சிரிக்க வைக்கிறார்
.. 
ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு தீராத களங்கம் எனச் சொன்னதற்கு
என்ன செய்திருக்க வேண்டும் அண்ணாமலைக்கெதிராக போராட்டம், குறைந்தபட்சம் அவர் தலைவராக தொடர்ந்தால் கூட்டணியிலிருந்து விலகுவோமென இந்நேரம் அறிக்கை வந்திருக்க வேண்டாமா..
அவர் சரியாக சொல்லியிருந்தாலும் மிகப்பெரிய கட்சியை விமர்சிக்கிறார்,கூடயிருந்தே வலைப் பின்னுகிறார் என்பதை மறந்து அதிமுக செயல்படுவது அதன் அந்திமம் நெருங்குவதை காட்டுகிறது
..
பாஜகவின் திட்டம் அதிமுகவை வலுவிழக்க செய்து அந்த இடத்தை கபளீகரம் செய்வது .. ஆரம்பத்திலிருந்தே பாஜகவிற்கு வளைந்து பழக்கபட்டதால் இன்று 25 என பேச தொடங்குகிறார்கள்.. தனியாக நின்றால் கட்டிவச்ச காசும் போகும் என்பதை அறியாதவர்கள் அல்ல  ஆனால் அதிமுகவின் பிடி இறுக்கமாகியிருப்பது பல பிரிவுகளாய் பிரிந்து தங்களுக்குள் அடித்துக்கொண்டபோதும் பாஜகவை தாங்கி நிற்பதில் பலத்த போட்டி போட்டு வளைந்த
 நின்றதெல்லாம் இன்றைய இழிநிலைக்கு காரணம் ..
..
அதிமுகவெனும் பொம்மலாட்டத்தின் கயிறு பாஜக கையில் கிடைத்து வெகுநாட்களாகிவிட்டது.. இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடும் நிலை தமிழ் நாட்டின் வரலாற்றில் கேலிக்கூத்து.. மிகப்பெரிய அரசியல் அறிவெல்லாம் இல்லையென்றாலும் காங்கிரஸின் கைப்பாவையாக இருந்த நிறுவனர் எம்ஜிஆர் கூட இந்தளவு பயந்தததில்லை..இரும்பு பெண்மணி என வெளிவேசம் கட்டினாலும் தன் வழக்கில் தண்டனை பெற்றபோது கூட இந்தளவு தாழ்ந்ததில்லை,ஆனால் இவர்கள் பயத்தில் நிற்பதும் எது சொன்னாலும் தலையாட்டுவதும் தமிழ்நாட்டிற்கு பேரிழிவை தேடி தருகிறது என்றறியாமல் இவர்கள் அழுக்கை சுமந்து நிற்கிறார்கள் 
..
என்ன தான் பேசினாலும் பாஜக சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளைகள்.. 25 என்ன இன்னும் வேண்டுமானாலும் தர தயார் என கும்பிடு போடும் பழனியும் பன்னீரும் போட்டி போட்டு கூனிகுனிந்து நிற்பார்கள்..
பாஜகவிலிருந்து வெளியேறி வரும் தைரியம் இவர்களுக்கில்லை.. தலைக்குனிவை தன்மானத்திற்கு இழுக்கென்று அறியாதவரை,  கால் கிடைத்தால் விழுந்து கிடப்பதை பெருமையாக நினைக்கும் இந்த கேடுக்கெடுடவர்கள் அரசியலின் பிழைகள் ..
..
பொம்மலாட்டம் ஆனால்  ரசிக்க முடியவில்லை 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, June 12, 2023

தான் யாரென்று 
முதலில் உணருங்கள்..
இதுவரை யாரால் 
இந்த இடத்தில் எத்தினோம் 
என அசைபோடுங்கள்..
நீங்கள் நடக்கும் பாதையை
யாரோ 
சீர்படுத்தியிருக்காவிடில் 
உங்கள் பயணம் எளிதில் 
சாத்தியப்பட்டிருக்குமா என்ன..?
..
தலைகனம்,
அகந்தை 
தன்னால்தான் எல்லாம் 
என்றவனெல்லாம் 
இடம் தெரியாமல் போன 
வரலாறு அறிவீரா 
பகிர்ந்தளிப்பவனும் 
பகட்டு காட்டாதவனும் 
சேர்ந்திழுப்பவனும், 
உயர எழ..
படிகளில் காலம் ஏற்றிவிடும்
..
முகம் சுளிக்காமல் 
மனம் இளகி நின்று பாருங்கள்
முகம் தெரியாதவன் கூட
நேசக்கரம் நீட்டுவான்.. 
எந்தவொரு விடயத்திலும் 
கூட இருப்பவர்களை 
அன்பால் 
அனுசரணையாக நடத்துங்கள்
நீங்கள் விழும் போது 
தாங்கி நிற்பான் ..
..
எல்லோரிடம் உழைப்பும் 
உண்மையும் 
உறுதியும்  இருக்கிறது 
வாய்ப்பு கிட்டினால் 
நம்மை விட சிறப்பாக செயல்படும் திறனும் உண்டு ..
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர் 
காலம் கனிந்தால் 
சிறகு முளைக்கும் 
வானில் பறப்பதொன்றும் 
பெரிய வித்தையில்லை 
..
உண்மையில் 
நீங்கள் பலவீனமானவர் 
அடுத்தவன் உழைப்பில் 
உயரத்தில் நிற்கிறீர்..
உம்மை தாங்கி பிடிப்பவன் 
சிறிது சலனபட்டால் 
கீழே விழ வேண்டிவரும் 
அடி பலமாய் படும் 
தகர்ந்துவிட்டால்  
திருப்பி எழுப்ப உம்மால் இயலாது
..
அதிகாரத்தாலோ,
அகம்பாவத்தாலோ, 
தனக்கு கிட்டியது 
தன்னால்தான் என்ற 
இறுமாப்பாலோ 
நினைத்திருந்தால் 
திருத்திக் கொள்ளும் 
உமது எதிரிகள் வேறெங்குமில்லை..
நீயே தான் வீழ்ச்சியின் காரணியாவாய் 
எதிர்க்கிறளவிற்கெல்லாம் 
தகுதி உம்மிடம் இல்லை..
..
நீ யாரென்பதை 
முதலில் நீ உணரு..
உனது பாதையை 
நீயே சீர்செய்  
அன்பெனும் ஆயுதம் கொண்டு வா
நேசிக்க நிரம்பிவழியும் 
பெருங்கூட்டம் ..
உனது சொல்லும் செயலும் 
நேர்பட இருந்தால் 
வழி நெடுக பூக்கள் மலரும் 
உண்மையாய் இரு..
உலகம் உன்னை நேசிக்கும் 
எளிமை,
இனிமை,
இளகும்தன்மை, 
கருணை இருந்தால் 
நீ பெரும் படையோட்டம் 
நடத்தலாம்..
..
நீ யாரென்று 
நீதான்
தீர்மானிக்க வேண்டும்..
..
ஆலஞ்சியார்



 

Wednesday, June 7, 2023

தலைவன்..
உன்னை நினைக்கும் போதெல்லாம் கண்ணில் 
நீர் கோர்க்கிறது..
உன்னை நினைத்தாலே 
நெஞ்சில் ஈரம் சுரக்கிறது
உன்னைப் பற்றி பேச தொடங்கினால் 
மனம் குதூகலிக்கிறது 
..
உன்னை ஏன் எப்போதும்
கொண்டாட வேண்டும் என எண்ணுவதுண்டு..
வாழ்ந்த காலமெல்லாம் 
இனத்திற்காக உழைத்த 
உன்னை..
எப்படி கொண்டாடி தீர்ப்பதென்றே தெரியவில்லை..
மனிதனுக்கு தூக்கமும் ஒய்வும்  கட்டாய தேவை ஆனால் 
நீயோ ஓய்வின்றி உழைத்தாய்
..
வாழும் காலமெல்லாம் 
உன்னை கண்டு கதறியவர்கள் 
நீ..
இல்லாத போதும் 
கதறுவதை நிறுத்தவில்லை..
உன் சாவில் கூட 
பகை கொண்டிருந்த கூட்டம்
இன்றும் பதறுகிறது 
உன் பேனா கண்டு 
..
நீ 
இந்திய அரசியலையே புரட்டிப்போட்டவன் 
இன்னமும் 
கைரிக்சா இழுத்துக்கொண்டுதானிருக்கிறது
ஆனால் நீ.. 
முப்பதாண்டு முன்பு 
பாடம் நடத்தினாய்..
உன் சிந்தனை 
தொலைநோக்காய் இருந்தது
நீ ..
செயல்படுத்தியது தான் 
இந்திய அரசியலின் 
பாட புத்தகம் ..
அரசியலின் இலக்கணம் நீ..
உன்னை படிக்காமல் 
எவரும் பொதுவாழ்வில் ஜொலிக்கமுடியாது..
..
உன் அரசியல் பாமரனுக்கானது 
பள்ளத்தில் கிடப்போரை 
படிகளில் ஏற்றிட 
நீ வகுத்த சூத்திரம் சிலருக்கு 
எரிச்சலை தந்தது ..
உன் அரிச்சுவடி தான் 
அரசியல் பயில்வோர்க்கு பாலபாடம்..
நீ செதுக்கிய தமிழ்நாடு
தமிழனின் புகழ் பாடுகிறது ..
..
பசித்தவனுக்கு மீன் சோறு போடாமல்
மீன் பிடிக்க கற்றுதந்து 
மானம் காத்த மகேசனே!..
சுயமரியாதை உணர்வூட்டி 
சுயமாய்  தன்மானத்தோடு 
தன் நம்பிக்கையோடும் 
வாழ.. 
கல்வியே முக்கியமென 
முதல் பட்டதாரிக்கு 
கல்வி கட்டணமில்லாமல் 
புதிய தொடக்கம் கண்டவனே 
பெண்களுக்கு கல்வி முக்கியமென்ற பேராசான் பெரியாரின் கொள்கை வழி 
திட்டங்கள் வகுத்தாய் 
பெண்கள் உரிமை பெற்று 
சமூகம் சிறக்க முன்னேறுகண்டு 
பேரானந்தம்..
பெண்கல்வி சமூகத்தை புரட்டிபோடும்..
சொத்தில் சம உரிமை 
அம்பேத்கர் தோற்ற இடத்தில் 
வென்று காட்டி அவர் வாழ்வில்
நம்பிக்கை எனும் ஒளியேற்றிய தகப்பன் நீ..
..
சமூகநீதி காவலனே! எல்லோருக்கும் எல்லாமென்ற 
கோட்பாட்டை வடிவமைத்த
ஆண்டவனே! 
புறமுதுகில் குத்தியோரையும் 
மன்னித்த மாமன்னனே!..
வறியவர் நிலைகண்டு 
அவர்தம் வாழ்வு முன்னேற 
திட்டங்கள் தீட்டிய அமைச்சனே! 
எல்லோருக்கும் இனியவனே!..
வாழ்க! நின்புகழ்!!.. 
..
உன் அரசியல்
எம் இனத்திற்கான அரசியல்
உன் அரசியல் 
எம் மொழிகாகானது
உன் அரசியல் 
எம் மக்களுக்கானது 
உன் அரசியல் 
இனப் பகைவர் உணர்ந்ததைப்போல்
எம் மக்கள் உணரவில்லை என்ற வருத்தம் உண்டு..
ஆனால் அதைப் பற்றி 
கவலைப் பட்டவனில்லை ..
உன் சிந்தனையும் செயலும்
எமக்காகதான் இருந்ததென்பதை 
நீ 
இல்லாத போது உணர்கிறார்கள்
..
ஆசானே..
அருந்தமிழே..
எங்கள் வேந்தனே!!..
வழிகாட்டியே..
வாழ்வியல்
சித்தாந்தமே..
மாசற்ற மாமணியே !!..
மதுரமே..
மங்காத ஒளிவிளக்கே..
எங்கள் களனியே..
எங்கள் செருக்கே..
பெருவுடையாரே..
பெருஞ்சுவரே..
ஞானத் தந்தையே!! 
வாழ்க! நின்புகழ்!!..
..
ஆலஞ்சியார் 



Sunday, May 28, 2023


கோமாளிக்கு
ராசா 
வேசம் கட்ட
செங்கோலை சுமந்து 
"அறம்" பேசா
ஆசை துறந்த பண்டாரங்கள்
ஆகாய வழியில் 
அவசரமாய் வந்தார்கள் .. 
பண்டாரங்களுக்கு 
அறுசுவையில் உணவு தந்து 
படுத்துறங்க பகட்டான கொகுசு மெத்தையும், 
குளுகுளு வெண்சாமர விசிறியும் 
கூடவே நொறுக்குதீனியும் தந்து 
இளைப்பாற சொன்னார்கள்
..
செங்கோலை சுமந்து வர
கூலிதான் தர முடியும் 
சிம்மானத்தில் அமர வைக்க 
பண்டாரங்களுக்கு தகுதியென்ன 
ஒரு படி கீழே கைகட்டி நின்று 
அந்தணர் அழுக்கை நீக்கி
செங்கோலை தருவார்கள் 
பண்டாரம் கைபட்ட "தீட்டு" நீக்க 
பரிகார பூஜை .. 
தமிழனின் செங்கோலுக்கு நீசபாஷையிலா  செய்ய முடியும்..
தெய்வபாஷையில் தானே ..?
..
பாவம் 
பண்டாரங்கள்..
அரண்மனையில் 
தூரமாய் நின்று 
சுமக்கூலிக்காக 
நிற்கிறார்கள்..
அய்யா சாமி..
..
சைவம்..
அந்தோ  "அ" சைவமானது 
..
ஆலஞ்சியார்

Wednesday, May 24, 2023

செங்கோல்  ..
நீதி தவறாமை எனும் பொருள் இன்றைய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா.. 
நாடாளுமன்றத்தில் திருவாடனை மடம் தந்த செங்கோல் வைக்கப்படும்.. இதில் கூட சோழர்காலத்து செங்கோலென பொய்  ..
பிரதமர் புதிய நாடாளுமன்றத்தை ஏன் திறக்ககூடாதென சிலர் கேள்வி எழுப்புகின்றனர் .. நாடாளுமன்ற மரபுகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் இவர் எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தி காட்சி பொருளாய் திகழும் இவர், ஜனநாயக மாண்புகளை மதிக்காத இதுவரை ஊடகத்தை சந்திக்காத பயந்தாங்கொள்ளி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தை தினமொரு வேசம் கட்டும் "அரிதாரபுருசர்"திறப்பது முறையாக என்ன ..
..
நாட்டின் முதல் குடிமகன் குடியரசின் தலைவர் திறப்பதுதானே சரி.. எல்லா நிகழ்விலும் தன்னையே முன்னிறுத்தும் நாடக சக்கரவர்த்தி திறப்பதா சரி.. 
பிரதமர் நல்ல ஜனநாயகவாதி இல்லை ..  தன்னை சர்வ அதிகாரமும் மிக்கவராக எண்ணிக்கொண்டிருக்கும் இவர் அடிப்படை தகுதி கூட இல்லாதவர், படித்த படிப்பு பொய், சொல்லும் வார்த்தைகள் பொய்,நடத்தும் நாடகம் பொய்.. இந்தியா கண்ட மிக மோசமான ஆட்சியாளர் .. இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றத்தை, தன்னை மன்னராக நினைத்துக் கொள்ளும் "புலிகேசி வகையறா" திறப்பது பொருத்தமில்லை என்பதனால் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன
..
நாட்டின் முதல் குடிமகன் திறப்பதே மேன்மையான செயல் 
..
ஆலஞ்சியார்

Tuesday, May 23, 2023

U.T. காதர் 
கர்நாடக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமியர் சபாநாயகராக பதவியேற்கிறார்..
தொடர்ந்து ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் பணியாற்றியவர் சித்தராமையா அமைச்சரவையில் இடம் பெற்றவர் அமைச்சராக வருவாரென எதிர்பார்க்கபட்டவர் சபை தலைவராகிறார் .. தனக்கு வியப்பாக இருப்பதாகவும் நம்பிக்கையுடனும் அன்புடனும் சபையை நடத்துவேன் என்கிறார்.. 
..
கர்நாடகவில் காங்கிரஸ் 15 பேருக்கு வாய்ப்பை வழங்கியது 9 பேர் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.. இதில் ஒரு படிப்பினை இருக்கிறது .. கர்நாடகாவில் 12.5% விழுக்காடு முஸ்லிம்கள்.. வாக்குகளை சிதறவிடாமல் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்காமல் பதவி பேராசைக்கு சமுதாயத்தை "பலி" கொடுக்காமல் பெரியகட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்தவேண்டும் அது கர்நாடகாவில் காங்கிரஸால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்பி வாக்களித்திருக்கிறார்கள்.. 
அது பலன் தந்திருக்கிறது.. 
சமுதாயப் பேரைச் சொல்லி சில சைத்தான்கள் வாக்கை பிரித்து பாஜகவிற்கு உதவுவது தொடர்ந்து பல மாநிலங்களில் நடக்கிறது.. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆய்ந்தால்  சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெல்வதும் அதற்கு சமுதாயத்தின் காவல்காரன் என பேசிதிரியும் சிலரே காரணம் என்கிற உண்மை தெரிகிறது ..
..
 இந்த முறை உவைசிக்கோ Sdpi க்கோ வாக்களித்து வீணாக்காமல் காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்களித்து வென்றிருக்கிறார்கள்..நல்ல தொடக்கம்.. இது மற்ற மாநிலங்களிலும் வலுவாக உள்ள கட்சிகளோடு இணைந்து ஒற்றைகட்டாய் நின்று தங்களுடைய வாக்குவங்கிகேற்ப இடங்களை பெறலாம்.. 58  பிரிவாக நின்று பதவி பண ஆசையில் சமுதாயத்தை காட்டிகொடுக்கும் கயமைக்கு முற்றுபுள்ளி வைத்தால் சமுதாயம் பலன் பெறும் பலம் பெறும் ..
..
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ..
U T காதர் பாய்க்கு வாழ்த்துகள் 
..
ஆலஞ்சியார்
 கலைஞர் நூற்றாண்டு..
ஒரு தலைவனின் பயணம்..
 அரசியல் இலக்கணமாய் திகழ்ந்த வரலாறு.. 
என்பதாண்டுகள் ஏற்றமிறக்கத்தோடு வழிநெடுக பகைவரும், துரோகிகளும்,வாளெடுத்து நின்றபோதும் புறமுதுகு காட்டாத பெருந்தலைவன்.. வஞ்சத்தால் வீழ்த்த நினைத்தார்கள், படுகுழியில் தள்ளிவிடலாமென திட்டம் தீட்டினர்.. சூழ்ச்சிகளை வெல்லும் சூத்திரம் அறிந்திருந்தான்.. வெற்றியோ தோல்வியோ அவருடைய இயக்கத்தை தடுக்க இயலவில்லை..
..
தஞ்சையில் உட்புற சிற்றூரில் (திருக்குவளை) பிறந்து இந்திய ஒன்றியத்தின் தவிர்க்கமுடியாத தலைவனாய் தன்னை நிலைநிறுத்தியவன்.. 
இந்தியா இப்போது சிந்திப்பதை முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி காட்டியவன்..பகைவருக்கோ சிம்மசொப்பனம்.  இன எதிரிகளோ செய்வதறியாது கை பிசைந்து நின்றார்கள்.. மாபெரும் இயக்கத்தின் அடித்தளம் தகர்ந்துவிடாமல் காத்துநின்ற தலைவன்.. எத்தனை  அம்புகள், வீழ்த்திட நினைத்து முடிந்தது பார் "சகாப்தம்" என சில கைகூலிகள் கவிதைபாட, தளராது எழுந்து நின்று ஆடியது கண்டு மிரண்டனர் சதியாளர்கள்..
..
கலைஞரின் கலைப்பயணம் காட்டாறு போல் ஆரிய திணிப்பை அடித்துக்கொண்டு போனது.. தீந்தமிழில் சுழற்றிய சொற்ச்சொடர்கள் ஆரியத்தின் அடிவயிற்றை கலக்கியது.. "ஆகாரத்திற்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்" என்றெழுதி யாரும் அதுவரை சொல்லாத உவமையோடு இலக்கியம் படைத்தார் மிரண்டது தமிழ்த்திரை.. கலைஞரின் எழுத்தாணி சமநிலையை போதித்தது .. கயமையை சுட்டெரித்தது.. எதிரிக்கும் வாழ்வு தந்தது .. யாருமே தொடாத யாருமே தொட முடியாத உயரத்தை தொட்டது .. தொல்காப்பியத்திற்கு எளிய உரை எழுதி எமக்கெல்லாம் புரியவைத்தது கலைஞரின் பேனா..  கலைஞர் வசனமென்றால் 
கைதட்டியது பெருங்கூட்டம்.. அதுவரை வடமொழி கலப்பில் உரையாடல் தந்த சினிமா கலைஞரின் வரவிற்கு பிறகு தான் 
தமிழ் சிம்மாசனத்தில் அமர்ந்தது..
தமிழ்த்திரை வசனத்தை முன்னிறுத்தி பயணிக்க தொடங்கியது 
கலைஞரின் எழுதுகோல் தலைக்குனிந்த போதல்லாம் தமிழன் தலைநிமிர்ந்தான்.. 
..
சொக்கவைக்கும் பேச்சு வார்த்தையில் சிலம்பம் கட்டி ஆடியபோது எதிரியும் மெய்மறந்து நின்றான்.. அடுக்குமொழியில் தேன்கலந்து தித்திக்க பேசும்போது தமிழ்நாடே நாட்டியமாடியது.. எப்போதும் எதிர்பார்ப்பார்கள்
 வீழ்ந்ததாய்தான் வரலாறு.. தமிழ்உணர்வை வீரத்தை இளைஞர் நெஞ்சில் விதைத்தது இவரின் பேனா.. அரசியல் எதிரிகள், சித்தாந்த பகைவர் கூட  இவர் மொழியில் மயங்கி  நின்றார்கள்..
..
பகுத்தறிவு துணைக்கொண்டு, வாளேந்தி நின்றபோது செய்வதறியாது கதிகலங்கி நின்றது பகை.. தொலைநோக்குப்பார்வை , அடத்தளமக்களின் மேம்பாடு, அனைவருக்கும் கல்வி, இயலாதோர்க்கு முன்னுரிமை, 
தீட்டும் திட்டங்களெல்லாம் எளியவர் பயன்பெற வேண்டும்.. 
மீன் சோறு போட்டவர்களுக்கு மத்தியில் நீ மீன் பிடிக்க கற்றுதந்தவர்..  
கையில் தண்ணீர் கிடைத்த போதெல்லாம் தாகித்தவனை தேடிக்கொண்டிருந்தவர்..
நவீன தமிழ்நாட்டை வடிவமைத்தவர்.. மக்கள் பணியில் தொய்வின்றி ஓய்வின்றி உழைத்தவர் .. இனம்,மொழி,பண்பாடு நாகரீகம் இவற்றை காக்க பெருஞ்சுவராய் நின்ற பெருமகன் ..  தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோவொருவகையில் இவரின் அரசியலால்,அதிகாரத்தால் அணுகுமுறையால் பயனடைந்திருக்கிறது கல்வியில் வேலைவாய்ப்பில் அதுவரை மறுக்கபட்டவர்களுக்கு உரிமை கிடைத்திருக்கிறது.. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும் கட்டமைப்பும் எல்லாம் திராவிட பெருவுடையான் கலைஞரால் நிகழ்ந்தது தான் 
..
தலைமைப்பண்பில் எப்போதும் சிறந்து விளங்கினார் , தொண்டர்களோடு தொடர்பு அவரது சுவாசமாக இருந்தது . உடன்பிறப்பே என விளித்து முரசொலித்து ஊட்டம் தருவார் .. தோல்விகள் வரும்போதெல்லாம் மறுநாள் முரசொலியை தேடும் .. அதுவே அருமருந்தாக தொண்டனுக்கு அமையும்.. அடிமட்ட தொண்டனுக்கும் குரல் கொடுக்க எதிர்க்க, வினா எழுப்ப, உரிமை தந்தார்
எழுப்பிய கேள்விக்கு விளக்கம் தந்து ஜனநாயகம் காத்தவர்..
இயக்கத்தின் பலம் எது என்பதை உணர்ந்திருந்தார்..
..
நூற்றாண்டு கண்ட பேரியக்கத்தின் பெருமைமிகு தலைவர்.. ஆக சிறந்த ஜனநாயகவாதி .. தலைச்சிறந்த  ஆளுமை, அறம்சார்ந்த அரசியல் கலைக் களஞ்சியம்.. பொதுவாழ்விற்கு வருவோருக்கு
இவரின் வாழ்வியல் மிகச்சிறந்த பாடம் கலைஞரின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவோம்..
..
வாழ்க! கலைஞர் புகழ்!!
#கலைஞர்100
..
ஆலஞ்சியார்