விஜயகாந்த்
சினிமாக்காரன் .. அதுவரை எந்த குழப்பமும் இல்லை ஆனால் அரசியல்வாதி ஆவதற்கு அடிப்படை தகுதிகூட இல்லை .. சில முக்கிய காரணிகளே ஒருவரை அரசியல்வாதியாக தீர்மானிக்கிறது .. பொதுநலம், தீர்மானிக்கும் ஆற்றல், எதை எப்படி எதுவரை செய்யவேண்டும், எப்போது ஆடவேண்டும், தன் தகுதி என்ன என்பதை உணர்தல், இவையாவும் இல்லாதவர்..
..
வந்தவர்களுக்கெல்லாம் சோறுபோட்டேன் என்ற மகோராவின் சொல்லின் உண்மையாய் திகழ்ந்தார் அது அவரின் இயல்பாக இருக்கலாம் மீன் சோறு போடுவதல்ல மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டும் அதுதான் பொதுவாழ்வில் பெயர் சிறக்க வழிவகுக்கும்.. அது இருவரிடமும் இல்லை.. அரசியலை புரிந்துக் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது துவக்கத்தில் வெளிச்சம் தரும் அது மின்மினி பூச்சியின் வெளிச்சம் .. அதை உணரவே இல்லை என்பதுதான் கொடுமை..
..
சினிமா மோகம் வாழ்வு தரும் என்பது எழுபது என்பதுகளில் சரி.. ஆனால் இப்போதெல்லாம் உதவாது.. அரசியலில் சில முடிவுகள் குழியில் தள்ளிவிடும் அது நடந்தது.. சோவின் பேச்சை நம்பி ஜெயாவோடு சேர்ந்தது அழிவின் தொடக்கமானது .. அதிலிருந்த மீள பழம் நழுவி பாலில் விழ வாய்ப்பிருந்தது ஆனால் விழுந்தது சகதியில்.. தன் எதிர்காலத்தை சிதைத்த தருணம் அது .. இன்று அரசியலில் கோமாளியாக காட்சியளிக்கிறார்.. கிடைத்தது வரை லாபம் என்ற நிலையிலிருந்து லாபம் கிடைக்க காட்சிப்படுத்தும் பொருளாய் மாற்றிய பெருமை பிரேமலதாவை சாரும்..
..
இப்ராகிம் ராவுத்தரோடான நட்பும் பிரிவும் இவர் வாழ்வில் நல்ல பாடத்தை போதித்திருக்கிறது .. உண்மையில் கேப்டனின் இன்றைய நிலை அவருக்கு ஓய்வு தரவேண்டிய நேரத்தில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காட்சிபடுத்தி தன்னை பொதுச்செயலாளராக முன்னிறுத்தி இனி கேப்டன் இல்லை நான் தான் எல்லாம் என சொல்லியிருக்கிறார் .. பெரிய கட்சியாக வர வேண்டிய தேமுதிக இன்னுமொரு லெட்டர்பேட் "அமைப்பாக" சுருங்குகிறது.. மற்றபடி கேட்பாரற்று கேப்டன் பரிதாபம்
..
பிரேமலதாவிற்கு வாழ்த்துகள்
விரைந்து நலம் பெறுக! கேப்டன் !! ..
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment