எத்தனை தீர்ககமான சிந்தனை அரசியலில் மிகத் தெளிவாக தன் கொள்கைகளை வரையறுத்து பயணிப்பவர்களால் மட்டுமே பகைவரின் ஒவ்வொரு செயலையும் சரியாக கணிக்க முடியும்
..
அறுபதாண்டு பொதுவாழ்வு திராவிடச் சித்தாந்தத்தை சரியாக
உள்வாங்கி எதற்காக இந்த இயக்கம் தொடங்கபட்டதோ அதிலிருந்து பின்வாங்காமல் அதே நேரம் பகைவரின் சூழ்ச்சி அறிந்து படையோட்டம் நடத்தமுடியும்.. நம்மை அறியாமல் ஒரே விடயத்தில் உழன்று கொண்டிருந்தார் எதிரிகள் வேறென்றை நடத்திடுவார்கள்.. ஆனால் நம் தலைவர் திறமையும் தெளிவும்,துணிவும் கொண்டவர் ..
எதிரிகள் அதனால் தான் இந்திய துணைக்கண்டத்தில் இவரை மட்டுமே தொடர்ந்து கவனித்து வருகிறாரகள் ..
..
பாசிசவாதிகளுக்கு திராவிட இயக்கங்களில் தொடர்ந்து கடுமையான எதிரிகள் வருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை அரச இயந்திரத்தை ஆளுநரைக் கொண்டு முடக்க நினைக்கும் போதெல்லாம் வெளிச்சம் போட்டுகாட்டி முகத்திரையை கிழிக்கிறார்.. 2024 ல் வீழ்த்தபடுவோம் என்றறிந்து எதையாவது பிரச்சனையை பெரிதாக்கி காய் நகர்த்த முடியுமா என பார்க்கும் போது நடுமுதுகை உடைத்தைவிடுகிறார் நம் தலைவர்
..
கலைஞரோடு தீர்ந்தது என்றிருந்தவர்கள் ஸ்டாலின் திமிர்க் கொண்டு எழுந்த போது கலங்கி நின்றார்கள்.. இதோ உதயமாய் புதிய ஒளி சனாதனத்தை சுட்டரிக்க
வருவது கண்டு புறவழி சாதனையாளர்கள் புரண்டு அழுகிறார்கள்.. புரிந்துக் கொள்ளுங்கள் எங்கள் இனப் பகைவர்களே..
திராவிடம்
தன்னைதானே உயிர்ப்பிக்க கொள்ளும் .. புதிய தலைமுறையின் பாதுகாவலனை தயார் செய்யும்..
தன் இனத்திற்கான தலைவனை உருவாக்கி செம்மைபடுத்தி பகை முன் நிறுத்தும் ..
எதிரிகளே உங்கள் குலைநடுங்க எம் குலம் காக்க வரிசையாய் தலைவர்களை தயார் செய்துக் கொண்டே இருக்கும் ..
..
இது இயக்கம்..
இயங்கிக் கொண்டேதானிருக்கும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment