Sunday, August 20, 2023

அதிமுக மாநாட்டை கண்டு களித்தீர்களா  என்றார் நண்பர் ..
களைப்பை போக்க பொழுதுபோக்க கேளிக்கைகளில் ஈடுபடுவோரை அரசியல் சாணக்கியன் என்றெல்லாம் விளித்து 'புரட்சி' பட்டம் தரும் கட்சியில் வேறென்ன எதிர்பார்த்தீர்கள் என்றேன்..
..
அரிதாரம் பூசி,எம்ஜிஆர் போல் வேடமணிந்து இசைத்தட்டு நடனம் (ரிக்கார்ட் டான்ஸ்) கண்டு மகிழும் தொண்டனைக் கொண்ட கட்சியில் கொள்கை முழக்கத்தையா கேட்க முடியும்.. எடப்பாடியோடு எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடும் போதே முன்னவர்களின் 'மகிமை' புரியும்..  வேசம்கட்டி நிழல் தந்த மயக்கத்தில் நிஜமறியா லோகத்தில் சஞ்சரிக்கும் தொண்டர்கள்.. வரும் இழப்பையோ, கேடையோ அதனால் வரும் தலைமுறை படும் கஷ்டங்களையோ பற்றி கவலையில்லாமல் கூத்தாடும் இவர்கள் தமிழ்நாட்டின் கேடுகள்..
..
கொள்ளையடித்ததை காக்கவும்,தங்களை விசாரணையிலிருந்து காத்துக்கொள்ளவும்,  தமிழ்நாட்டின் நலன்களை, பலிகொடுக்கும் இவர்கள் அரசியல் கேடுகள்.. நீட் தேர்வு ,சி ஏ ஏ சட்டம்,மாநில அதிகாரங்களை பறிக்கும் மசோதா என தொடர்ந்து பாஜக இடும்  கட்டளைகளை கண்மூடி ஆதரித்து ,மண்ணிற்கு ,மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவர்கள் நாட்டின் சாபகேடுகள்..
..
திமுக மாநாடல்ல இது.. கொள்கைப் பேசவும், சமூகநீதி,சமயசார்பற்ற கொள்கை பிரகடனம் நடத்தவும், மொழிக் கொள்கை, இயக்கத்தின் வரலாறு திராவிடத் தீரர்களின் இனப்பற்று இவற்றையெல்லாம் பேச நினைவுபடுத்த இதுவொன்றும் கொள்கைமறவர்கள் இயக்கமல்ல.. அரிதாரத்தில் மயங்கி மாலைநேர மகிழ்விற்காக தொடங்கபட்ட கட்சி.. அதில் கொள்ளைக்கூட்டம் கையகப்படுத்த அதை வைத்து மிரட்டி பாசிசம் வளர வழிவகுக்கிறது .. 
..
அதிமுக அரசியல் என்பது பணம்,சாதி,சினிமா ,கேளிக்கை கொண்டது.. அவர்களிடத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment