Tuesday, July 18, 2023

NDA கூட்டம்.. 🤣
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 
I.N.D.I.A (Indian national Democratic Inclusive Alliance) 
அமைந்தவுடன் தன் கூட்டணி கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தி நம்மை
 நகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.. 
..
யாரெல்லாம் இவர்களோடு என்பதிலிருந்தே தெரிகிறது பாஜகவின் பதற்றம் .. சிவசேனாவிலிருந்த  பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே  தேசியவாத காங். லிருந்து பிரிந்து வந்த அஜித் பவார், நிதிஷ்குமாரின் பிரிந்த ஜித்தன்ராம், என பரிதாபகரமானவர்களை வைத்துக்கொண்டு NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டம் .. அதில் தமிழகத்திலிருந்து த.மா.க வாசன்,புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் பச்சைமுத்து போன்ற செல்வாக்குமிக்க🤣 தலைவர்கள் காண  I.N.D.I.A அணி திகைத்து நிற்கிறது..
..
பிரதமர்  ஊழல்வாதிகள் கூட்டணி அமைத்திருப்பதாக எடப்பாடியையும்  அஜித் பவாரையும் வைத்துக் கொண்டு  சிரிக்க வைக்கிறார் ..
பாஜகவின் பயமும் தோல்வியும் 
கண்முன்னே தெரிகிறது 
பாஜகவின் அராஜகம் கட்சிகளை உடைத்து  கொள்ளைப்புற வழியே ஆட்சி அமைப்பது  அரச இயந்திரத்தை மிரட்டவும் பயமுறுத்தவும் பயன்படுத்துவது தங்களை தவிர யாரும் யோக்கியர்கள் இல்லை என நினைப்பது,  நீதித்துறையையும்  தன்னாட்சி அமைப்பையும் அலங்கோலப்படுத்தி ஜனநாயக மாண்புகளை கொன்று சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொக்கரிப்பதும், நாடாளுமன்றத்தில் ஊழல்,பொய், என்று கூட பேசகூடாது என தடை விதித்து அவசரகாலத்தை விட  மோசமான 
உண்மையில் ஜனநாயகற்ற நிலை..
 நாடு மிக மோசமான காலகட்டத்தில் மீண்டும் ஒரு சுதந்திர போர் தேவை என்பதை உணர்ந்து எதிர்க்கட்சி கள் ஒருங்கிணைந்திருப்பது நம்பிக்கையை  தருகிறது
..
ராகுல் மிக தெளிவாக பாஜகவிறகும் எதிர்க்கட்சிக்குமான போராட்டம் அல்ல நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் கொள்கைக்கெதிரான  போராட்டம் என்கிறார்.. உண்மை அதுதான் பாஜகவின் செயல்பாடுகள் அதிகார தோரனைகள், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற திமிர் பேச்சுகள், ஊடகங்களை விலைக்கு வாங்கி தொடர் பொய் பரப்புரைகள்,நீதிபதிகளை மிரட்டபடுவதும் கருத்தியலாளர்கள் கொல்லபடுவதும், சிறுபான்மையினரும் பட்டியியலினத்தவர் மிரட்டி ஒடுக்கபடுவதும், பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்பதும் மத கலவரங்கள் மூலம் பதற்றத்தை கொண்டுவந்து மக்களை பீதியில் வைத்திருப்பதும் சாதி மோதலை உருவாக்கி மக்களின் உணர்வுகளை வெறியூட்டி குளிர்காய்வதும் தான் பாஜகவின் அரசியல் சித்தாந்ததம்..
..
மக்கள் நிம்மதியோடு ஒற்றுமையாய் பல்வேறு சமய கோட்பாடுகளும்,நம்பிக்கைகளும், மற்றவர் வாழ்வில் இடைஞ்சலாக இல்லாமல் வாழ்ந்து உலகிற்கு இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்று பறைச்சாற்றி வாழ்ந்த நாட்டில் மதம் பிடித்து நாசம் செய்துவிட்டது ..  தெருவில் போகும் ஒன்று வீட்டிற்கும் நுழைந்து அழுக்காக்கிவிட்டு போனால் துடைத்து சுத்தம் செய்துதானே ஆகவேண்டும்  அதை செய்ய தான் (I.N.D.I.A).. 
தேசத்தின் தேவையும் அதுதான் 
..
இழந்த ஜனநாயகத்தை மீட்க அனைவரும் ஒற்றுமையாய் வாழ பாசிச பயங்கரவாத கொடுங்கோல் ஆட்சியை விரட்டியடிக்க இன்றைய
 தேவை.. (I.N.D.I.A).. 

எங்களுக்கு பதவி தேவையில்லை இந்தியாவை மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியம் என காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது..  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே .. மிக தெளிவான திட்டமிடலோடு தொடங்கி பயணிக்கிறது .. பாஜக அதனால் தான் பதறுகிறது ..  
..
தொடர்ந்து ஒருகட்சி பத்தாண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருப்பது ஜனநாயகத்திற்கு கேடு .. பாசிசத்தின் கொடூர பற்களை பிடுங்குவோம்.. இந்தியாவை சுத்தப்படுத்துவோம்.. 
இந்திய ஒன்றியம் நமக்கானது எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை.. 
Really 
INDIA is BORN..
..
தமிழ்நாடு பிறந்த நாளில்
I.N.D.I.A பிறந்தது மகிழ்ச்சி ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment