வயல்வெளிகளிலும் முள்காடுகளிலும் அடுப்படிகளிலும் பெண்களை வேலைவாங்கி, உனக்கு வராது தேவையில்லை ஏன் படிப்பு, ஆணுக்கு நிகராக முடியுமா என காலங்காலமாய் அடைத்துவைக்கபட்ட பெண்களுக்காக ஒரு குரல் ஓங்கி உழைத்தது.. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு பெண்கள் படித்துவிட்டு வேலைக்கு போனால் லோகம் கெட்டுவிடும் வேலைக்கு போகும் பெண்களை விபசசாரிகளென என பெரியவா/ ஜகத்குருக்களெல்லாம் முழங்கிய காலத்தில், நீ வா படி விமானம் ஓட்ட வேண்டாமா சந்திரமணடலத்துக்கு போகவேணடாமா என்றது ஒரு குரல்.. அந்த கிழவனின் குரல் சமுகத்திற்கு அதிர்வை ஏற்படுத்தியது ..
..
பெண்கள் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த கிழவன் உங்கள் வீடடில் ஆண்குழந்தையை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் உள்ளூரில் அதற்கான வசதியில்லென்றால் வெளியூர் சென்று கூலிவேலைப் பார்த்தாவது பெண்களை படிக்க வையுங்கள் என்றது அந்த குரல்
ஆம் அந்த பெரியாரின் குரல் .. பெண்கள் முன்னேற படிப்பு அவசியம் என்றவர் பேராசான் பெரியார்
..
பள்ளிபடிப்போடு பெண்களை நிறுத்தியது கண்டு ஒரு தலைவன் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தந்தான் .. மாவட்டம் தோறும் கல்லூரிகளை தந்து அதை விரிவுபடுத்தி தாலுக்கா தோறும் கல்லூரி, மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் என தந்தான்.. பெண்களுக்கு கட்டணமில்லா கல்வி என்றான் படிக்க வா எல்லா கதவுகளும் திறக்கும்.. பெண்களுக்கு முன்னுரிமை தந்து
உந்துவிசையானான் .. அந்த பேரருளாளனுக்கு மற்றொரு பெயருண்டு கலைஞர் கருணாநிதி
..
அன்று கிழவன் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா என்ற கேள்விக்கு விடை இதோ.. எங்கள் தமிழ் நாட்டுப்பெண்கள் விண்வெளியில் கோலோச்சுகிறாரகள்.. முடுக்கிவிட நினைத்தது ஆரியம் ..
முயன்று முன்னேறு என்றது திராவிடம்.. சக்தி என சாமியாக்கியது ஆரியம்
உன் சக்தியை காட்டி வெற்றிக்கொடி நாட்டு என்றது திராவிடம்..
மதம் சாதி எனச் சொல்லி சக மனிதனைக் கொல்ல கத்தியை தீட்டென்றது ஆரியம் உன்னை உலகமே திரும்பிபார்க்க உன் புத்தியை தீட்டென்றது திராவிடம்.. மடமையில் உன்னை அழுத்தி பள்ளத்தில் தள்ளியது ஆரியம்.. கைக்கொடுத்து உயரத்தில் ஏற்றி அழகுப்பார்ப்பது திராவிடம்
..
திராவிடம்
அறிவை மரியாதையை
மானமுள்ள வாழ்வை தரும்..
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment