Thursday, December 14, 2023

நாடாளுமன்றம் ..  தோற்றுக்கொண்டிருக்கிறது 
பாதுகாப்பு காரணங்கள் மட்டுமல்ல சனநாயகத்தின் குரல்வளை நெறிக்கபடுவதும், ஊழல் பொய் எனும் சொற்களை கண்டு ஆள்பவர்கள் அச்சபடுவதும் விடுதலை இந்தியா மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதை காணமுடிகிறது .. 
..
நாடாளுமன்ற தாக்குதலில் யார் இவர்கள் என பரப்பரப்போடு செயல்பட்ட ஊடகங்கள் 'அவர்கள்" இல்லை இதன் பின்னணியில் என்றவுடன் நிசப்தமானது.. இவர்கள் மொழியில் "தேசவிரோதிகள்" இல்லையென்றவுடன் பிரதமர் உள்துறை அமைச்சர் தொடங்கி சுமந்த் மாமாக்கள் வரை அமைதி காக்கிறார்கள் 
வேறெதையோ எதிர்பார்த்து ஏமாந்து பாதுகாப்பு குறைபாடு என்ற சொற்சொடரோடு முடித்துக் கொணடார்கள் .. 
..
ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு வீசியவுடன் திமுக ஆட்சியை கலைக்க சொன்னவர்கள் இப்போது மௌனம் விரதம் இருக்கிறார்கள்..
நாடாளுமன்றத்தில் குண்டு வீசியவனுக்கு அனுமதி சீட்டு தந்த பாஜக எம்பி அவையில் இருக்கிறார்.. விரிவான விரைந்த விசாரணை தேவையென குரல் கொடுத்த கனிமொழி Kanimozhi Karunanidhi   உள்ளிட்ட 15 பேர் இடை நீக்கம் வாழ்க சனநாயகம் 
..
சனநாயக விழுமியங்கள் கொஞ்சம் கொஞசமாய் செத்துக் கொண்டிருக்கிறது.. இங்கே பாரப்பனர்கள் தவிர மற்றவர்கள் நீதி,சட்டம், அரசியல் கொண்டு மெல்ல மெல்ல கொல்லப்படுகிறார்கள்..  இந்த நாடு தன் ஜீவனை இழக்கிறது.. சட்டம் முன் நின்றாலும், நிறமும் உடையும் அடையாளமும் உற்று நோக்கியே தீரப்புகள் எழுதப்படுகின்றன.. மிச்சமிருக்கும் நம்பிக்கை செயலிழக்கிறது.. வாக்குகள்,விலைபேசியோ மிரட்டியோ அல்லது இயந்திரம் கொண்டோ தனகாக்கிக் கொள்ளும் தந்திரமே இன்றைய தேசபக்திமார்களின் சூட்சமம்
..
எங்கே போகிறது எனது இந்தியா அடிப்படைவாதிகள் மதவெறிகள் முட்டாள்கள்,பொய்யர்கள் கையில் கிடந்து சீரழிகிறது.. இன்னமும் நாம்  இந்திய சனநாயகத்தின் ஆணிவேரில் இன்னமும் கொஞ்சம் ஈரமிருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது..
இன்றைய இந்திய ஒன்றியம் திராவிடத்தின் திமிலில் ஏறி பயணிக்க வேண்டும் .. மக்களின் தன்னெழுச்சியும் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் சாதிமத வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையாய் ஒற்றை இலக்கோடு பாசிச மதவெறியாளரகளை வீழத்துவதே வரும் தலைமுறைக்கு 
செய்யும் நற்செயல் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment