Friday, June 30, 2023

நல்ல தொடக்கம்..
சனாதன சாம்ராஜ்யத்தை வீழ்த்த பெரும்படை ஒன்று தயாராகிறது.. அவ்வளவு எளிதல்ல அதிகாரம் பலம்  பணம், அரச இயநதிரம் அதற்கெல்லாம் மேலாய் மதம் .. மக்களின் அறியாமையை, புராதன கட்டுக்களை மண்டையில் ஏற்றி அவனைக் கொண்டே பல்லாக்கை தூக்க செய்து பலகாலமாய் பவனி வரும் தேரின் அச்சாணியை பிடுங்குவது சுலபமல்ல.. பெருமலையை உளிக்கொண்டு சிதைக்கும் செயல் தொடர்ந்து அடித்தடித்து உடைத்தோறிவோம்..
..
மக்களை மனவோட்டம் இந்த அழிச்சாட்டியகாரர்களின் அழிமதியாளர்களின் பொய்யே பிரதானமாக கொண்டு கோட்டை எழுப்பி கொக்கரிக்கும் ஈனர்களை  குறிப்பிட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஓட்டுமொத்த மக்களை வதைக்கும் செயலை கண்டு சினர்ந்தெழுந்து நிற்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாய் நிற்போரை ஒருங்கிணைத்து பொது உடன்பாட்டில் இந்த பாசிச பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே செயல்திட்டத்தில் இணைந்து நிற்கிறார்கள் ..தங்களுக்கும் இருக்கும் வேற்றுமையை மறந்து பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டுமென ஒரே நோக்கம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவுமில்லை 
..
சனாதன எதிர்ப்பின் அடித்தளம் மிக பலமாக உள்ள தமிழ்நாட்டை எப்படியும் உடைக்க வேண்டுமென பெரும் காத்திருப்பில் பாஜக தொடர்ந்து பொய்யை புரளியை வேகமாக பரப்புவதும் அதை ஊடகங்களை கொண்டு ஊதி பெரிதாக்குவதும் சற்றென்று பொட்டிதெரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.. எதையு‌ம் ஆய்ந்தறிந்து ஏற்கும் தமிழரின் குணம் பண்டே பழக்கபட்டதால் பாவம் பாசிசம் முழி பிதுங்குகிறது..வட மாநிலங்களில்
மதத்தை முன்னுறுத்தி பயம் காட்டி தொடர்ந்து மூளைச்சலவை செய்து அறியாமையில் உலளச்செய்து வந்தது.. சமூகநீதியை முன்னிறுத்தும் பீகாரிலிருந்து சிறிய பொறி பெரும் சுவாலையாக
 (கனலொழுங்கு) மாறி பாசிசம் எனும் தீமையை சுட்டெரிக்கும்..
..
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் வலுவான கட்சிகள் தலைமையில் குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு தொகுதி பங்கீடு வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் பேசியிருக்கிறார்.. வரவேற்கத்தக்கது .. ஏதோவொரு கட்சிக்கு எதிரானது அல்ல இந்தியாவின் ஐனநாயகதன்மையை மதசார்பின்மையை, பன்முகதன்மையை காப்பதற்காக ஒருங்கணைய வேண்டிய அவசியத்தை உணர்த்தி உரையாற்றியிருக்கிறார்.. நோக்கம் ஒன்றுதான் இந்தியாவின் முகத்தை காப்பது உலகின் மிகப்பெரிய மதசார்பற்ற ஜனநாயக நாட்டின் இறையாண்மை காப்பது ..
வெல்வோம் ..
முடியாதென்று ஏதுமில்லை..
..
ஆலஞ்சியார் 

No comments:

Post a Comment