..
படிக்காதே என்று சொன்னால் எச்சரிக்கையாய் இரு.. அவன் உன் இடத்தை அபகரிக்க முற்படுகிறான்.. எங்கே நமக்கு சமமாக வந்து விட்டாானே என்ற கோவம் அவனை இப்படி பேச சொல்கிறது .. படித்து வேலை இல்லாமல் இருக்கிறான் என்பான் நம்பாதே தொடர்ந்து முயற்சி நிச்சயம் கிடைக்கும்.. படித்த வேலை கிடைக்காதென்பான் நம்பாதே கிடைத்த வேலையில் புதிய அறிவும் அனுபவமும் கிடைக்கும் ..
..
மாடு மேய்த்தால் வருமானம் அதிகம் என்பான் ஆனால் அவன் வீட்டு பிள்ளைகளை abroad
ல படிக்க வைப்பான்.. விவசாயம் பார் பொட்டிகடை வை என்பான் அவன் குழந்தைகள் அரசு வேலைக்கு முயற்சி செய்யும்..
கல்வி தான் உன் பேராயுதம்.. உன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் பாசிச / மடைமைவாதிகளுக்கும் உன் கல்வியறிவு மட்டுமே இடைஞ்சலாக இருக்கிறது அதனால் தான் கதற தொடங்கியிருக்கிறது .. அப்பன் தொழிலை பார் என "விஸ்வகர்மா "உன் குறையை தீர்க்குமென ஆசைகாட்டி காலகாலமாய் குலத்தொழிலில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் இவர்கள் ஆபத்தானவரகள் நம்பாதே ..
..
இது ஒருவகையான சூழ்ச்சி, ஒருவகை மூளைச்சலவை , படிக்காமலே பணக்காரனாகலாம் எனச் சொல்லி உன் சந்ததியை மடையர்களாக்கும் மந்திரம்.. மயக்கம் தரும் இச் சலவையின் முடிவு கிழிந்த நிலையை தந்துவிடும்.. எவன் தடுத்தாலும் படி.. என்ன வழியில் சொன்னாலும் உன் கல்வி மட்டுமே உன்னையும் உன் சந்ததியினரம் கரை சேர்க்கும்
..
கல்வியே பேராயுதம் ..
கல்வியே ஒளி தரும் விளக்கு..
கல்வியே விடியலுக்கு முதல் கூவல்
..
ஆலஞசியார்
No comments:
Post a Comment