Wednesday, May 24, 2023

செங்கோல்  ..
நீதி தவறாமை எனும் பொருள் இன்றைய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா.. 
நாடாளுமன்றத்தில் திருவாடனை மடம் தந்த செங்கோல் வைக்கப்படும்.. இதில் கூட சோழர்காலத்து செங்கோலென பொய்  ..
பிரதமர் புதிய நாடாளுமன்றத்தை ஏன் திறக்ககூடாதென சிலர் கேள்வி எழுப்புகின்றனர் .. நாடாளுமன்ற மரபுகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் இவர் எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தி காட்சி பொருளாய் திகழும் இவர், ஜனநாயக மாண்புகளை மதிக்காத இதுவரை ஊடகத்தை சந்திக்காத பயந்தாங்கொள்ளி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தை தினமொரு வேசம் கட்டும் "அரிதாரபுருசர்"திறப்பது முறையாக என்ன ..
..
நாட்டின் முதல் குடிமகன் குடியரசின் தலைவர் திறப்பதுதானே சரி.. எல்லா நிகழ்விலும் தன்னையே முன்னிறுத்தும் நாடக சக்கரவர்த்தி திறப்பதா சரி.. 
பிரதமர் நல்ல ஜனநாயகவாதி இல்லை ..  தன்னை சர்வ அதிகாரமும் மிக்கவராக எண்ணிக்கொண்டிருக்கும் இவர் அடிப்படை தகுதி கூட இல்லாதவர், படித்த படிப்பு பொய், சொல்லும் வார்த்தைகள் பொய்,நடத்தும் நாடகம் பொய்.. இந்தியா கண்ட மிக மோசமான ஆட்சியாளர் .. இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றத்தை, தன்னை மன்னராக நினைத்துக் கொள்ளும் "புலிகேசி வகையறா" திறப்பது பொருத்தமில்லை என்பதனால் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன
..
நாட்டின் முதல் குடிமகன் திறப்பதே மேன்மையான செயல் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment