Tuesday, December 26, 2023

இஸ்லாமிய சமுதாய பாதுகாவலர் எடப்பாடிக்கு வாழ்த்துகள் .. SDPI அரசியல் கட்சி அது தனக்கு வேண்டியவர்களோடு கூட்டணியமைக்க அதற்கு உரிமையுண்டு .. சமுதாயத்தை காப்பாற்றுகிற பணியில் தங்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என கருதி "பாதுகாவலன்"  பட்டத்தை எடப்பாடிக்கும் தரும் அந்த பெரிய மனதை பாராட்டாமல் போனாலும் வசைபாட கூடாது ..
..
SDPI பிழைப்புவாத இயக்கம் சமுதாய இளைஞர்களை வழக்கெடுக்கும் வேலைகளில் தன்னை முழுமூச்சாக ஈடுபடுத்திக் கொண்டு பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கும் வேலைகளில் எஜமானர்களின் சொல்லுக்கு ஆடும் விசுவாசமான எடுபடிகள்.. தலைமை எடுபடி எடப்பாடியை கொண்டாடாமல் போனால் தான் வியப்பு வரும்..  இஸ்லாமிய சமுதாயத்தைப் போல பரிதாபகரமான சமுதாயம் வேறெதும் இல்லை .. தடுக்கி விழுந்தால் தலைவன் அவன் வழியில் கொஞ்சமும் சிந்திக்காமல் ஒரு கூட்டம், ஏன் இப்படி என யாரும் கவலைக் கொள்வதில்லை ..
..
தங்களுக்கென ஒரு தலைவனை தேர்வு செய்ய முடியாமல் அதிகாரம்,பதவி தானென்ற மிதப்பில் "திரியும்" சிலரை தங்கள் சமுதாயத்தை காக்க வந்த "தெய்வமாய்" நினைத்து இளைஞர்கள் வழிகேட்டில் நிற்கிறார்கள்.. IUML ன் அலட்சியபோக்கு 
 குறிப்பாக தமிழகத்தில் இரு இலக்கங்களை தாண்டி "அமைப்புகள்" .. எல்லோருக்கும் சுயநலம் , தனக்கு கைதட்ட சிலர் இருந்தால் போதும் தலைவனாகிவிடலாம் .. பரிதாபம் தோன்றுகிறது ..
..
சிறைவாசிகளை விடுதலைச் செய்யவில்லை அதனால் அதிமுகவிற்கு ஆதரவு தருகிறோம் என சிலர் .. எதையும் திமுக சட்டரீதியாக வலுவான நிலையில் செய்யும் ஒரு உதாரணம் போதும் ஆந்திராவில் அவசரகதியில் கொண்டுவந்த இட ஒதுக்கீடடை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது அதை காரணம் காட்டி ஜெயலலிதா முதல் பார்ப்பன ஊடகங்கள் தமிழகத்திலும் இட ஒதுக்கீடு வராது வந்தாலும் ரத்தாகும் என புலம்பினர் .. கலைஞர் மிக தெளிவாக  சட்டவல்லுநர்களிடம் ஆலோசித்து பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் பரிந்துரைப் பெற்று 7.5%விழுக்காடுக்குமேல் போக கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இஸ்லாமிய கிருத்துவ சமுதாயத்திற்கு தலா 3.5% எனவும் ஜெயின் சமுதாய மக்களுக்கு 0.5%  விழுக்காடும் தந்தார் வழக்கம் போல் பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தை நாடினர் ஆனால் உச்சநீதிமன்றம் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஏற்று உள் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது எடுத்தேன் கவிழ்த்தேன் என இல்லாமல் சரியான பாதையில் திமுக செல்லும் என்பதற்கு இந்த உதாரணம் போதும்.. 
..
எனக்கென்னவோ தமிழக இஸ்லாமிய சமுதாயத்திற்கு அதிமுகதான் சரியெனபடுகிறது ..  CAA  சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் நிறைவேறியிருக்காது .. அதை செய்யாத அதிமுக சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருப்பது கொடுப்பினை.. தங்களுக்கென ஒரு தலைவனை கண்டறிய  முடியாத சமுகம், சட்டென்று உணர்சசிவயப்படும் சமுகம் நிலைகுலைந்து நிற்கும்.. 
சமுதாயத்தை பிடித்த பீடைகள் விலக காத்திருப்போம் ..
அது என்ன "மதசார்பின்மை"
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment