கோமாளிக்கு
ராசா
வேசம் கட்ட
செங்கோலை சுமந்து
"அறம்" பேசா
ஆசை துறந்த பண்டாரங்கள்
ஆகாய வழியில்
அவசரமாய் வந்தார்கள் ..
பண்டாரங்களுக்கு
அறுசுவையில் உணவு தந்து
படுத்துறங்க பகட்டான கொகுசு மெத்தையும்,
குளுகுளு வெண்சாமர விசிறியும்
கூடவே நொறுக்குதீனியும் தந்து
இளைப்பாற சொன்னார்கள்
..
செங்கோலை சுமந்து வர
கூலிதான் தர முடியும்
சிம்மானத்தில் அமர வைக்க
பண்டாரங்களுக்கு தகுதியென்ன
ஒரு படி கீழே கைகட்டி நின்று
அந்தணர் அழுக்கை நீக்கி
செங்கோலை தருவார்கள்
பண்டாரம் கைபட்ட "தீட்டு" நீக்க
பரிகார பூஜை ..
தமிழனின் செங்கோலுக்கு நீசபாஷையிலா செய்ய முடியும்..
தெய்வபாஷையில் தானே ..?
..
பாவம்
பண்டாரங்கள்..
அரண்மனையில்
தூரமாய் நின்று
சுமக்கூலிக்காக
நிற்கிறார்கள்..
அய்யா சாமி..
..
சைவம்..
அந்தோ "அ" சைவமானது
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment