கர்நாடக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமியர் சபாநாயகராக பதவியேற்கிறார்..
தொடர்ந்து ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் பணியாற்றியவர் சித்தராமையா அமைச்சரவையில் இடம் பெற்றவர் அமைச்சராக வருவாரென எதிர்பார்க்கபட்டவர் சபை தலைவராகிறார் .. தனக்கு வியப்பாக இருப்பதாகவும் நம்பிக்கையுடனும் அன்புடனும் சபையை நடத்துவேன் என்கிறார்..
..
கர்நாடகவில் காங்கிரஸ் 15 பேருக்கு வாய்ப்பை வழங்கியது 9 பேர் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.. இதில் ஒரு படிப்பினை இருக்கிறது .. கர்நாடகாவில் 12.5% விழுக்காடு முஸ்லிம்கள்.. வாக்குகளை சிதறவிடாமல் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்காமல் பதவி பேராசைக்கு சமுதாயத்தை "பலி" கொடுக்காமல் பெரியகட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்தவேண்டும் அது கர்நாடகாவில் காங்கிரஸால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்பி வாக்களித்திருக்கிறார்கள்..
அது பலன் தந்திருக்கிறது..
சமுதாயப் பேரைச் சொல்லி சில சைத்தான்கள் வாக்கை பிரித்து பாஜகவிற்கு உதவுவது தொடர்ந்து பல மாநிலங்களில் நடக்கிறது.. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆய்ந்தால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெல்வதும் அதற்கு சமுதாயத்தின் காவல்காரன் என பேசிதிரியும் சிலரே காரணம் என்கிற உண்மை தெரிகிறது ..
..
இந்த முறை உவைசிக்கோ Sdpi க்கோ வாக்களித்து வீணாக்காமல் காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்களித்து வென்றிருக்கிறார்கள்..நல்ல தொடக்கம்.. இது மற்ற மாநிலங்களிலும் வலுவாக உள்ள கட்சிகளோடு இணைந்து ஒற்றைகட்டாய் நின்று தங்களுடைய வாக்குவங்கிகேற்ப இடங்களை பெறலாம்.. 58 பிரிவாக நின்று பதவி பண ஆசையில் சமுதாயத்தை காட்டிகொடுக்கும் கயமைக்கு முற்றுபுள்ளி வைத்தால் சமுதாயம் பலன் பெறும் பலம் பெறும் ..
..
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ..
U T காதர் பாய்க்கு வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment