Friday, July 7, 2023

நாடு..
இந்தியா மிக மோசமான சூழலில்,  கடமை உணர்வற்ற ஊடகங்கள், நெறிதவறும்,நீதிமன்றங்கள், பாவிகள் தங்களோடு இணைந்தால் அடுத்த நொடி புனிதர் ஆகலாம்.. கோடிகளில் ஊழல் செய்ததாய் அமலாக்கத்துறை ரெய்டு  நடத்தி பாஜகவில் இணைத்து புனிதவேசம் கட்டுகிற கொடுமை.. சனாதனம் தான் நாட்டை ஆள்கிறது, ரஷிகளும் மகான்களும் தான் வழிநடத்துவதாக ஒரே கூச்சல்.. நாட்டின் சட்டங்கள் வளைந்து நிற்கிறது.. தலைமை அமைச்சர் ஊழலை ஒழிப்பதே என் தலையாய பணி என்று PMCARE திட்டத்தில் எவ்வளவு வந்தது எப்படி வந்தது எங்கு சென்றதென சொல்லமறுத்து நியாயஸ்தன் ஆகிறார்.. 
..
பக்கத்து வீட்டுகதவில் சிறுநீர் கழித்தவனை நாம் கண்டுக்கொள்ளாததால் மனபிறழ் மனிதனை மூஞ்சியில் சிறுநீர் கழிக்கிறான் மனநோயாளி.. பிஞ்சு குழந்தையை கற்பழித்தவன் மாலைபோட்ட வரவேற்கிற நிலை  திருடனும் கொலைகாரனும் பாரத் மாதாக்கீ ஜெ போடுகிறான் கிரிமினலை கட்சி சேர்த்து கட்சியை வளர்க்கிற பாஜக தேசத்தின் சாபம்
..
நீதிமன்றங்கள் நீதியை இழந்து நிற்கிறது   வேண்டியவர்கள் தண்டிக்கபட கூடாதென காலதாமதம் செய்து ஊழல் குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் அதிசயம் உலகில் எங்கும் பார்க்க முடியாது .. ராணுவத்தில் பிடியில் இருந்த அண்டை நாட்டில் கூட உச்சநீதிமன்றம் நடுநிலையாக நின்றது இங்கே சொல்வதற்கே படு கேவலம்..
..
தீர்ப்பு வல்லவனுக்கே சாதகமாய் நிற்பதும் சாமானியன் சொல்லன்னா துயரை சந்திப்பதும் 
நெறி தவறும் நீதியாளர்களுக்கு பணி முடிந்து உயர் பதவி தருவதும்  நேர்மையோடு சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு சொல்வேன் என்போருக்கு கொலை மிரட்டல் விடுப்பதும் அரசே அதற்கு துணை நிற்பதும் இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை கொன்று தின்கிறது 
..
உலகின் சிறந்த ஜனநாயக கட்சி, நாங்கள் தான் ஊழலுக்கு எதிரானவர்கள் உத்தமர்கள் என்பவரின் பொய்களையும் வேசகட்டலையும் கணக்கிட்டால் அழுகிய வாடை வருகிறது ..  தேர்தல் நேரத்தில் பொய்யான தகவலை தந்ததற்காக பதவியை பறிக்கலாமென்றால் முதலில் பட்டம் பெற்றதாக தாக்கல் செய்த மூலவரை தான் முதலில் நீக்கவேண்டும்.. அப்பாவு வழக்கில் இன்னமும் தீர்ப்பு வரவில்லை.. 
..
இந்தியாவின் முகம் உலக அரங்கில் வேர்த்து நிற்கிறது.. மதமும்,சாதியும், புராணபுரட்டும், பொய்யும், கலவரமும் மானுடப் பற்றற்ற செயலும் இந்தியா எனும் பிரமாண்டத்தை சிதலடைய செய்கிறது.. நாக்கில் ராமரும்,கக்கத்தில் கொடுவாளும் வைத்திருக்கிறார்கள் என்றார் அம்பேத்கர்.. இந்த மண்ணை சிறு சுயநலக்கூட்டம் தங்களின் வளரச்சிக்காக,  பெரும் சமூகத்தை மடைமையில் ஆழ்த்தி சுகமாக வாழ்வு  வாழ்கிறது.. இந்திய நற்குணமே பன்முகததன்மையில் பெருமைக்கொள்வதும், இணைந்து நிற்பதும் தான்.. பாஜக ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒரு கூட்டம் மட்டம் உயர்வடைகிறது .. விடுதலை பங்கு கொள்ளாத கூட்டம் அது.. திறக்கப்படாத கதவுகளுக்குள் காரியம் சாதிக்கும் கூட்டம் அது..
இந்திய ஒன்றியத்தின் நெடும் துயரம் அது ..
..
இந்துத்துவா என்பது அனைத்து இந்து சமூகத்திற்கானதல்ல .. எல்லோரையும் சமமாக நடத்தபடுவதுமல்ல .. ஒருசாராரின் எண்ணங்களும், மேன்மையும்,காத்துநிற்க பயன்படுமே தவிர ஒரு பயனுமில்லை.. மனநோய் பாதித்த இளைஞரின் மீது மூத்திரம் கழிக்கும் செயல்தான் அவர்களின் யதார்த்தம் ..இதோ மூத்திரம் கழித்த சுக்லா குடும்பத்திற்கு ₹50,000 பிராமணர் சங்கம் அறிவித்திருக்கிறது ..இதுதான் அவர்களின் உண்மையான முகம் 
 ..
2024 அனைவரையும் அரவணைத்து, வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கி சமநீதியை வழங்கி பதற்றமற்ற சூழலை தரும் நிலை வரவேண்டுமானால் பாஜக விரட்டப் வேண்டும்  பொய்யர்களின் கூடாரம் தகர்க்கபடவேண்டும் மதவெறியும் கலவரமும் ஆயுதமாக கொண்டு திரியும் மகாபாவிகள் கையிலிருந்து இந்தியா மீட்கபடவேண்டும்  சுய பெருமை
களைந்து நாட்டை மீட்க ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து நின்றால் வெல்லலாம்.. எதிரி ஒன்றும் அத்தனை பலசாலி இல்லை ஆனால் பிரிக்கும் சூழ்ச்சி அறிந்தவன் .. 2024 நமக்கானது வெல்வோம் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment