Friday, August 11, 2023

கலைஞர் கருணாநிதி
பெயரை கேட்டாலே பதறுவதும் 
அவரை நினைத்தாலே எதிரிகள் குலைநடுங்குவதுமாக மறைந்து ஐந்தாண்டாகியும் பகைவர்களை கதறவைக்கிறார் எம் தலைவர் ..
..
தலைமைக்கு இலக்கணமாய், அரசியல்வாதிக்கு பொது பாடமாய், எதிரியை வீழ்த்த எங்கனம் எப்படி எதைக்கொண்டு வீழ்த்த வேண்டுமென வழிகாட்டிய ஆசானாய், எளியவரை கண்டு இரக்கம் கொள்,அவருக்காக ஆளும் காலமெல்லாம் வழி செய் என அரச இலக்கியம் சொன்ன மன்னனாய், வீழும் போதெல்லாம் வீறுக்கொண்டு எழு.. நீ கலங்குவதை கூட பகைவர் கொண்டாடுவர் ஆதலால் தோல்வியின் போதும் "புன்னகை" என வாழ்ந்துகாட்டி புதியபாதை சொன்ன பெருந்தலைவன் ..
..
கலைஞர் ..
தமிழக அரசியலில் தன்னைச் சுற்றியே சுழலவைத்த பேரதிசியம்.. இத்தனை திறமையாளன் இதுவரை கண்டதில்லையென
இந்திய ஒன்றியம் வியப்போடு பார்த்தது .. 
..
உண்மையில் ஒரு நல்ல ஜனநாயகவாதியாய் .. இடர்வரும் போதெல்லாம் வீறுகொண்டெழுந்து ஜனநாயகத்தை காத்த பெருந்தலைவன் .. பேருக்கு அரசியல் செய்யாமல் பேரெடுப்பதற்கும் செய்யாமல் 
பலபேர் பயனடைய வேண்டும், பட்டினிகிடப்போர் வயிறு நிறையவேண்டும் ..ஏழ்மையால் அறிவு தடைபடகூடாது .. காலங்காலமாய் அழுத்தபட்ட சமூகமக்கள் ஏறிவர வேண்டும் என பொதுவுடைமை பேசிய தோழனவன் ..
..
சமூகநீதி சமநீதியாக வேண்டுமென பாடுபட்டு .. அதற்கெதிராய் மநுநீதி இருப்பதையும் பூணூல் தடுப்பதையும் உணர்ந்து மிக சிரத்தையோடு காய் நகர்த்தி கதறவிட்டவன் .. எப்பாடுபட்டாகினும் படி .. அதற்கு அரசு துணைநிற்கும் .. தடைபோடுவர், தடுப்பமைத்து தகராறு செய்வர்.. அஞ்சாதே .. எவன் ஸ்வாமி என அழைக்க சொன்னானோ அவனையே கையெடுத்து கும்பிட வைக்க உனக்கு கல்வி அவசியமென சொல்லி அதற்கான  கட்டமைப்பை செய்து இன்று இன்ஜினியர் இல்லாத தெரு இல்லை மருத்துவர் இல்லாத ஊரில்லை என தமிழனை உயரத்தில் நிறுத்தி அழகுபார்த்தவன் ..
..
இதோ, ஒழிந்தது திராவிடம்.. இல்லாதாக்கிவிட்டோம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம், முடிந்தது பார் திமுக வரலாறு என்றவனெல்லாம் காணாமல் போய்விட்டான் .. ஆனால் கருத்தாளன் கருணாநிதி அரணாய் நின்று .. விழுந்தபோதெல்லாம் வீறுக்கொண்டு எழுந்து எப்போதுமில்லாத திமிரோடு ஓடி எதிரிகளை கலங்கடித்தார்..
கருணாநிதியோடு முடிந்தது திமுக என்றவன் கதறுவதை கேட்கதான் கலைஞரில்லை .. நான்காம் தலைமுறையை மிக அருமையாக செதுக்கி பண்படுத்தி செல்லும்பாதை எது எப்படி எங்கனம் கையாளவேண்டும் .. எதை சொன்னால் பகைவன் அலறுவான் .. எங்கே அடித்தால் வலிக்கும் என கற்றுதந்து சரியானவரை அடையாளபடுத்திவிட்டுதான் சென்றிருக்கிறார்.. அவரும்(தளபதியார்) "திராவிடமாடல்" கையிலெடுத்து இதுதான் முன்னேற்றத்திற்கானதென வகுப்பெடுப்பதை பார்க்க என் ஆசான் இல்லை .. பெரியாரின் வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்
வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்.. என் தமிழ் சமூகமே தலைவர் தளபதி கரத்தை வலுவாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ..
வாழ்க்கை தரம் உயரும், சரியான கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரமென இந்திய ஒன்றியத்தில் தமிழகம் தனித்து மிளிரும்
..
நான் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்த தலைவன் .. அறத்தோடும் அன்போடும் அறியணையேறிய போதெல்லாம் தமிழ் நிலத்தை வளமாக்கிய பெரும்மழையாய் ..
பகைவரை அறிந்து அவர்தம் சூழ்ச்சியை உன் விவேகத்தால் வீழ்த்தி கடைசிவரை கதறவிட்ட போராளி ..
உன் ஒவ்வொரு சொல்லும் எதிரியை சுட்டது 
எதிர்க்க நிற்க அஞ்சி தலைமறைவானவர்கள் .. 
இப்போது கண்விழிக்க தொடங்கியதும் .. நீ வார்த்து வைத்த "திராவிட மாடல் " சூரியன் சுட்டெரிக்கிறது தலைவா!..
காலமெல்லாம் தமிழர் நெஞ்சில் நீ வாழ்வாய் ..
இனம் மொழி பண்பாடு காத்த 
பெருவீரனே!..
ஆரியத்தை அலறவிட்டு 
பேரரசனே!!..
நீ..
பெருஞ்சுவர் 
உனை மீறி எதுவும் அண்டாது 
காலமானதாக சொல்கிறார்கள் 
ஆம் 
"காலமாய்" காத்துநின்ற எம்மான்!
என்றும் உன் புகழ் நிலைத்திருக்கும் 
..
கலைஞர் என்பதாண்டுகாலம் செப்பனிட்டபாதை தான் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது .. தமிழ் சமூகத்திற்கு தன் எழுத்தால்,பேச்சால்,செயலால் 
"பெருஞ்சுவராய் " காத்துநின்ற எல்லைசாமி.. எதிர்ப்போரும் எதோவொருவகையில் இவரால் பலனடைந்திருப்பர்.. இன்றைய வளர்ச்சியில், தமிழர் வாழ்வில் இவரின் பங்கு இல்லாமல் இல்லை .. 
காலம் கொண்டு சென்றிருக்கலாம் .. ஆனால் "காலமாய் " நம்மோடு நம் நினைவோடு என்றும் நிலைத்திருப்பார் ..
..
வாழ்க! கலைஞர் பெருமகன் புகழ்!!
..
ஆலஞ்சியார்  ..
(ஆலஞ்சி மு மன்சூர் )

ஆலஞ்சி.ம.தமீம் 
Thameemul Ansari M

No comments:

Post a Comment