Monday, June 12, 2023

தான் யாரென்று 
முதலில் உணருங்கள்..
இதுவரை யாரால் 
இந்த இடத்தில் எத்தினோம் 
என அசைபோடுங்கள்..
நீங்கள் நடக்கும் பாதையை
யாரோ 
சீர்படுத்தியிருக்காவிடில் 
உங்கள் பயணம் எளிதில் 
சாத்தியப்பட்டிருக்குமா என்ன..?
..
தலைகனம்,
அகந்தை 
தன்னால்தான் எல்லாம் 
என்றவனெல்லாம் 
இடம் தெரியாமல் போன 
வரலாறு அறிவீரா 
பகிர்ந்தளிப்பவனும் 
பகட்டு காட்டாதவனும் 
சேர்ந்திழுப்பவனும், 
உயர எழ..
படிகளில் காலம் ஏற்றிவிடும்
..
முகம் சுளிக்காமல் 
மனம் இளகி நின்று பாருங்கள்
முகம் தெரியாதவன் கூட
நேசக்கரம் நீட்டுவான்.. 
எந்தவொரு விடயத்திலும் 
கூட இருப்பவர்களை 
அன்பால் 
அனுசரணையாக நடத்துங்கள்
நீங்கள் விழும் போது 
தாங்கி நிற்பான் ..
..
எல்லோரிடம் உழைப்பும் 
உண்மையும் 
உறுதியும்  இருக்கிறது 
வாய்ப்பு கிட்டினால் 
நம்மை விட சிறப்பாக செயல்படும் திறனும் உண்டு ..
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர் 
காலம் கனிந்தால் 
சிறகு முளைக்கும் 
வானில் பறப்பதொன்றும் 
பெரிய வித்தையில்லை 
..
உண்மையில் 
நீங்கள் பலவீனமானவர் 
அடுத்தவன் உழைப்பில் 
உயரத்தில் நிற்கிறீர்..
உம்மை தாங்கி பிடிப்பவன் 
சிறிது சலனபட்டால் 
கீழே விழ வேண்டிவரும் 
அடி பலமாய் படும் 
தகர்ந்துவிட்டால்  
திருப்பி எழுப்ப உம்மால் இயலாது
..
அதிகாரத்தாலோ,
அகம்பாவத்தாலோ, 
தனக்கு கிட்டியது 
தன்னால்தான் என்ற 
இறுமாப்பாலோ 
நினைத்திருந்தால் 
திருத்திக் கொள்ளும் 
உமது எதிரிகள் வேறெங்குமில்லை..
நீயே தான் வீழ்ச்சியின் காரணியாவாய் 
எதிர்க்கிறளவிற்கெல்லாம் 
தகுதி உம்மிடம் இல்லை..
..
நீ யாரென்பதை 
முதலில் நீ உணரு..
உனது பாதையை 
நீயே சீர்செய்  
அன்பெனும் ஆயுதம் கொண்டு வா
நேசிக்க நிரம்பிவழியும் 
பெருங்கூட்டம் ..
உனது சொல்லும் செயலும் 
நேர்பட இருந்தால் 
வழி நெடுக பூக்கள் மலரும் 
உண்மையாய் இரு..
உலகம் உன்னை நேசிக்கும் 
எளிமை,
இனிமை,
இளகும்தன்மை, 
கருணை இருந்தால் 
நீ பெரும் படையோட்டம் 
நடத்தலாம்..
..
நீ யாரென்று 
நீதான்
தீர்மானிக்க வேண்டும்..
..
ஆலஞ்சியார்



 

No comments:

Post a Comment