கலைஞர் மகளிர் உரிமைத் தொகை..
தமிழ்நாடே திருவிழாக் கொண்டாட்டம் போல் மகிழ்வில்.. பெண்களுக்கான இந்த உரிமைத் தொகை சுயசார்பு தொடக்கத்தை தரும் ..
சின்ன சின்ன தேவைகளுக்கு யாரையும் சார்ந்திராது கம்பீரமாய் நிற்கலாம், சிலர் வழக்கம் போல் எரிச்சலடைவதும் கிடைக்காத அதிருப்தில் அதிமுககாரனுக்குதான் கிடைக்கிறதென புழுக்கம் அடைவதும், எப்படியும் தர போவதில்லை என்றவர்கள் சாத்தியமானது கண்டு கலக்கம் அடைந்திருப்பதும் திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது..
..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்திய ஒன்றியத்தின் வழிகாட்டும் தலைவராக ,அரசியலில் ஒரு தலைவன் எப்படி அதிகாரத்தை கையாள்கிறார், மக்களுக்கு தேவைகளை எப்படி சரிசெய்து வழங்குகிறார் என்பதை உற்று கவனிக்கிறது.. கொஞ்சமும் சஞ்சலமில்லாமல் என்னால் கூற முடியும் எம் தலைவரை கலைஞரை விட ஸ்டாலினை வியந்து
பாரக்கிறது இந்திய ஒன்றியம்.. எதிரிகள் கைபிசைந்து நிற்கிறார்கள்.. காலை உணவுத் திட்டம் பீதியை தந்தது, இன்றோ உறைந்து நிற்கிறார்கள்.. கிடைக்காதவர்கள் வாக்கு திமுகவிற்கு கிடைக்காதென தப்புதப்பாய் பேசி ஆறுதலடைகிறார்கள்.. தகுதியுள்ளோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் கிடைக்கும்
எதிலாவது குறை கூற முடியாதா என எண்ணுவோர் வேறுபாதையில் செல்லலாம்..
..
இனி மாதாமாதம் பணம் வரும் பெண்கள் சேமிப்பில் சேருவார்கள் தங்களுக்கான,தன் குடும்பத்திற்கான பொருட்களை வாங்கலாம் அவசர தேவைகளுக்கு கைமாத்திற்கு அலைய வேண்டியதில்லை.. அவசர தேவைகளுக்கு ஆண்களின் கைகளை எதிர்ப்பார்க்க தேவையில்லை.. தன் மருந்து செலவிற்கும் பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் உதவும்
சுயசார்பு மட்டுமல்ல சுயமரியாதையையும் கலைஞர் மகளிர் உரிமை தொகை தரும்..
..
கட்டணமில்லா பயணம்,காலை உணவுத்திடடம், கலைஞர் மகளிர் உரிமை தொகை என வரலாறு படைக்கிறார்..
பிற மாநிலங்கள் இதுபோன்ற திட்டங்களைப் பற்றி சிந்திக்கவே பல ஆண்டுகள் ஆகும் ..
..
இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மக்களின் நிலையை உணர்ந்து குறிப்பாக பெண்களின் பொருளாதார ,மற்றும் கல்வி நிலை உயர்வே மாநிலத்தின் வளர்ச்சியை காட்டும் என்ற யதார்த்தத்தை புரிந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
..
தமிழ்நாட்டின் தாய்மார்களின் பிள்ளையாய், சகோதரனாய்,அப்பனாய் நம் தலைவர் ஸ்டாலின் நிற்கிறார்..
Thank You Stalin Sir...
நன்றி C M Sir...
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment