ஜெயலலிதாவை ஊழல் முதல்வரென எப்படி சொல்லலாம் என அதிமுக ஜெயகுமார் பதறுகிறார் .. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிறார் பன்னீர், அதிமுகவிற்கே கற்பூர வாசனை தெரியாதே!
..
தமிழ்நாட்டை ஊழல் மாநிலமாக பார்ப்பதாக அவரின் பேச்சு இருந்ததையும் கூட்டணியில் இருந்துக்கொண்டே சொல்வது நியாயமா என சத்தம் குறைந்த தோனியில் புலம்புகிறார்.. அண்ணாமலை உண்மையைதான் பேசுவாரென குஷ்பு பக்கவாத்தியம் இசைக்கிறார், தமிழன் பிரதமரென்றால் கம்பராமாயண புகழ் அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகம் படித்த கடைசியாக படித்த புத்தகத்தை மறந்து போன
பழனிதான் தகுதியானவரென பொன்னயன் சிரிக்க வைக்கிறார்
..
ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு தீராத களங்கம் எனச் சொன்னதற்கு
என்ன செய்திருக்க வேண்டும் அண்ணாமலைக்கெதிராக போராட்டம், குறைந்தபட்சம் அவர் தலைவராக தொடர்ந்தால் கூட்டணியிலிருந்து விலகுவோமென இந்நேரம் அறிக்கை வந்திருக்க வேண்டாமா..
அவர் சரியாக சொல்லியிருந்தாலும் மிகப்பெரிய கட்சியை விமர்சிக்கிறார்,கூடயிருந்தே வலைப் பின்னுகிறார் என்பதை மறந்து அதிமுக செயல்படுவது அதன் அந்திமம் நெருங்குவதை காட்டுகிறது
..
பாஜகவின் திட்டம் அதிமுகவை வலுவிழக்க செய்து அந்த இடத்தை கபளீகரம் செய்வது .. ஆரம்பத்திலிருந்தே பாஜகவிற்கு வளைந்து பழக்கபட்டதால் இன்று 25 என பேச தொடங்குகிறார்கள்.. தனியாக நின்றால் கட்டிவச்ச காசும் போகும் என்பதை அறியாதவர்கள் அல்ல ஆனால் அதிமுகவின் பிடி இறுக்கமாகியிருப்பது பல பிரிவுகளாய் பிரிந்து தங்களுக்குள் அடித்துக்கொண்டபோதும் பாஜகவை தாங்கி நிற்பதில் பலத்த போட்டி போட்டு வளைந்த
நின்றதெல்லாம் இன்றைய இழிநிலைக்கு காரணம் ..
..
அதிமுகவெனும் பொம்மலாட்டத்தின் கயிறு பாஜக கையில் கிடைத்து வெகுநாட்களாகிவிட்டது.. இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆடும் நிலை தமிழ் நாட்டின் வரலாற்றில் கேலிக்கூத்து.. மிகப்பெரிய அரசியல் அறிவெல்லாம் இல்லையென்றாலும் காங்கிரஸின் கைப்பாவையாக இருந்த நிறுவனர் எம்ஜிஆர் கூட இந்தளவு பயந்தததில்லை..இரும்பு பெண்மணி என வெளிவேசம் கட்டினாலும் தன் வழக்கில் தண்டனை பெற்றபோது கூட இந்தளவு தாழ்ந்ததில்லை,ஆனால் இவர்கள் பயத்தில் நிற்பதும் எது சொன்னாலும் தலையாட்டுவதும் தமிழ்நாட்டிற்கு பேரிழிவை தேடி தருகிறது என்றறியாமல் இவர்கள் அழுக்கை சுமந்து நிற்கிறார்கள்
..
என்ன தான் பேசினாலும் பாஜக சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளைகள்.. 25 என்ன இன்னும் வேண்டுமானாலும் தர தயார் என கும்பிடு போடும் பழனியும் பன்னீரும் போட்டி போட்டு கூனிகுனிந்து நிற்பார்கள்..
பாஜகவிலிருந்து வெளியேறி வரும் தைரியம் இவர்களுக்கில்லை.. தலைக்குனிவை தன்மானத்திற்கு இழுக்கென்று அறியாதவரை, கால் கிடைத்தால் விழுந்து கிடப்பதை பெருமையாக நினைக்கும் இந்த கேடுக்கெடுடவர்கள் அரசியலின் பிழைகள் ..
..
பொம்மலாட்டம் ஆனால் ரசிக்க முடியவில்லை
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment