மாபெரும் தலைவனுக்கு ,தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்த அறிஞருக்கு, தமிழர் பண்பாட்டை காத்துநின்ற பெருவுடையானுக்கு ,
பிறந்த மண்ணில் பெயர் சொல்ல ஒரு கோட்டம்..
..
14 வயதில் திருவாரூர் வீதிகளில் படையோட்டம் நடத்திய பெருவீரன்..
நிலகிழார்களின் கைகளில் இருந்த தஞ்சையை மீட்ட எங்கள் ராசராசன்
ஆரூர் தந்த சங்கத்தமிழ், கீழ்தஞ்சையின் கனியமுது, தமிழை ஆண்ட தமிழ்நாட்டை ஆண்ட பேரறிவாளன், எல்லோர்க்கும் இனிய பேரன்பாளன் ,எதிரிக்கும், பகைவர்க்கும்,துரோகிகளுக்கும் அருள்பாலும் பேரருளாளன்..
..
தமிழ்நாட்டின் பெருஞ்செல்வம், தமிழர்களின் பெரும் தவம்,
எளியவரின் அமுதசுரபி, கடைநிலையோருக்கு கிட்டிய கருணை.. பொதுவாழ்வின் பேரொளி, துன்பத்தை நீக்கும் யாழிசை, எதற்கும் அஞ்சா திராவிடத் திமிர், பகைவரும் மயங்கி நிற்கும் தமிழிசை, அரசியல் கற்றோரக்கும் கற்போர்க்கும் தெளிவான பாடத்திட்டம்(Syllabus)..
..
என்பதாண்டு பொதுவாழ்வு அறுபதாண்டு கலைவாழ்வு..
எளியவரை, இயலாதோரை ஏற்றிட படிகளாய் நின்று , பகுத்தறிவு துணைக் கொண்டு திட்டம் வகுத்து,
பள்ளத்தில் கிடந்தோரை படிகளில் ஏற்றி அனைவருக்கும் அவர்தம் உரிமையை பெற ஓயாது உழைத்த பெருந்தலைவன் .. தமிழ் நாட்டின் ஒளிவிளக்காய், தமிழர்களின் அகல்விளக்காய், மங்காத புகழ்விளக்காய், மானுடத்தின் மணிவிளக்காய், திகழ்ந்திட்ட
செம்மொழி நாயகனுக்கு ஆரூரில் கோட்டம் ..
தமிழர் நெஞ்சமெல்லாம் கொண்டாட்டம்..
வாழ்க! கலைஞர்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment