Monday, June 19, 2023

தலைவா..
உன் கண்ணசைவில் 
காத்திருந்து காரியமாற்ற 
கழகத்தவர் நெடிய வரிசையில் 
நீயோ.. அமைதியாய் 
காய் நகர்த்தி அதிரவைக்கிறாய்..
..
வல்லவனோடு மோதலாம் 
இவர்கள் 
சரிநிகரில்லாதவர்கள் 
சூழ்ச்சியும்  வஞ்சமும் 
நஞ்சும் கலந்த நரகல்கள்..
இவர்களிடத்தில் 
அறம் செல்லாது தலைவா..
நாகரீகம் 
ஒற்றை வழி பாதையல்ல 
கர்ப்பிணி வயிற்றில் கத்திவைப்பவனிடம் 
பூக்களையா தர முடியு‌ம்..
..
அறநெறி அரசியல் 
அற்றுப்போன காலத்தில் 
போதனை வகுப்புகள்
பலனளிக்காது தலைவா..
நாம் 
அரசியல் பல்கலைக்கழகத்தில்
பாடமெடுப்பவர்கள்..
அரிச்சுவடி கூட தெரியாதவனிடம்
எதைச் சொன்னாலும் புரியாது 
அவன் வழியில் சென்று
அறைந்தால் தான் புரியும் 
..
பொறுப்பானவர்கள்,
புரிந்தவர்கள்,
கருத்துவேறுபாட்டை கூட ரசிப்பவர்கள் 
ஜனநாயகத்தை நேசித்தவர்கள் 
பண்பான பெருமக்களோடு 
அரசியல் செய்தோம் 
அதுவொரு காலம் 
இன்றோ  
பொய்மையும்,புரட்டும் 
எதிர்கருத்தை நசுக்க நினைக்கும் 
அரசியல் கோமாளிகள்
நம்மை
அடக்கநினைக்கிறார்கள் 
நமக்கு எல்லா அரசியலும் தெரியும்
மிசாவை காட்டினால் விசா வாங்க வேண்டிவரும் என்றவர்கள் 
உறவுக்கு கை கொடுப்போம்
உரிமை குரல் கொடுப்போம் என்றோம் 
எங்கே
எங்கனம் 
எப்படி ஆடுவதென 
கற்பிப்பவர்கள் 
உன் கண் அசைவு போதும் தலைவா..
..

நாம் 
வாய்க்கரிசி போட்டுக்கொண்டுதான் 
வலம் வருகிறோம்..
விவரகேடுகளும் 
விளங்காதவர்கள் 
பதவிக்காக எதையும் செய்யும் 
பாதகர்களுக்கு 
புரிகிற மொழியில் தான் 
பேச வேண்டும் 
புறவழியில் வந்தவர்களுக்கு
நம் பெருமைகள் தெரியாது 
..
சில நேரம் 
ரௌத்திரம் வேண்டும் 
கொடுவாளை தூக்குபவனிடம் 
அஹிம்சை பேசி பலனில்லை 
அவன் வழியில் வீசினால் தான் 
மண்டையில் ஏறும்..
அடித்தாடவேண்டிய  நேரமிது ..
ஆடு தலைவா..
ஆரிய தாண்டவத்தை அடியோடு 
பெயர்த்தெறிய வேண்டிய நேரமிது
ஆடு..
எதிரிகள் காலை நடுங்க..
..
பயமில்லை நம் இனத்திற்கு
அஞ்சாமை நம் உடைமை
..
ஆலஞ்சியார்





No comments:

Post a Comment