வருங்கால திராவிடத் தலைவனை பகைவர்கள் இனங்கண்டுக் கொண்டார்கள்.. ஒவ்வொரு முறையும் காலம் நமக்கான தலைவனை அடையாளம் காட்டுகிறது.. எனக்கு பழைய காட்சிகள் நிழலாடுகிறது தஞ்சையில் கலைஞரிடம் ஒருமுறை அடுத்த தலைமுறைக்கான தலைவனை அடையாளம் காட்ட வேண்டாமா என துடுக்குத்தனமாய் கேட்டு வைக்க 'காலம் தீர்மானிக்கும்' என்றார் எத்தனை எளிதாய் புரிதலோடு பதில் தந்து புன்னகை புரிந்தார்..
ஆம் நம் பகைவர்கள் நம்மை விட தெளிவாக இருக்கிறார்கள்..
..
சனாதன எதிர்ப்பு மாநாடு இளைய திராவிடத் தலைவனை இந்திய ஒன்றியத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறது.. பாஜக தலைவர்கள் வரிசைகட்டுகிறார்கள்.. சனாதனத்தை ஒழிப்போம் என்றதை இந்துக்களை ஒழிப்போமென்கிறாரென வழக்கம் போல் பொய்யை சுமந்து வருகிறார்கள்.. சனாதனம் சமத்துவத்திறகு எதிரானது சமூகநீதிக்கு எதிரானது ஏற்றதாழ்வற்ற நிலைக்கு எதிரானது ..
வழக்கம் போல பார்ப்பனர்கள் இந்துத்துவ கைக்கலிகள் ஓலமிடுகிறார்கள்..
அதிலிருந்தே உதயநிதி சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்
..
உதயநிதி தலைக்கு ₹10 கோடியாம் இவன் தாத்தன் தலையை சீவினால் ₹1 கோடி பரிசுமழை என்றார்கள் என் தலையை நானே சீவுவதில்லை என நகைச்சுவையோடு கடந்து போனார் கலைஞர் .. தந்தை பெரியார் செத்து போக வேண்டி பிரம்ம ஹத்தி யாகம் செய்தார்கள்
யாகம் செய்த
40 சாமியார்களும் செத்து போன பிறகு தான் பெரியார் 94 வயசுல மறைந்தார்..
..
சனாதனம் என்பது பார்பனீய மதம் அதைதான் இந்து மதமாக்கினார்கள் இதோ எச் ராசா சனாதனவாதிகளுக்கு அவிட்டம் வாழ்த்துகள் சொல்வதிலிருந்து சனாதனம் பார்ப்பனியத்தை/ பார்ப்பனர்களை உயர்த்தி பிடிக்க இவர்கள் உருவாக்கியது என புரியும்.. சனாதனம் கருத்தியல் ரீதியாக பதிலளிக்க முடியாமல் கொலைவாளை உருவும்.. ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் தரையில் அமர்த்துவது தான் பார்ப்பனீயம் சொல்லிதந்த சனாதனம் ..
..
சனாதனத்தை எதிர்ப்பதென்பது கடவுள் மறுப்பு அல்ல கடவுளின் பெயரில் செய்யும் அநீதியை எதிர்ப்பது.. மூடநம்பிக்கை என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான செயல்களை எதிர்ப்பது, தீட்டான பெண்கள் வெளியே வந்தால் லோகம் கெட்டுவிடும் ,வேலைக்கு போனால் விபச்சாரம் பெருகும் என்ற ஜகத்குருவின் கருத்தியலைதான் சனாதனம் என்ற பெயரில் அடக்கிவைப்பதைதான் எதிர்க்கிறார்.. அனைவரும் அர்ச்சகர்களாகலாம் என்றதை எதிர்ப்பதற்கு பெயர் தான் சனாதனம் .. அதைதான் ஒழிக்கபடவேண்டும் என்றார் உதயநிதி
..
சனாதன எதிர்ப்பில் தான் சமநீதி அடங்கியிருக்கிறது.. அனைவரையும் சமமாக நடத்தப்படவேண்டும், தொட்டால் தீட்டு பார்த்தாலே பாவம் என்பதற்கு எதிராகத்தான் தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருகிறது ..
பெரியார் தொட்டு அதை தான் திராவிட இயக்கம் செய்கிறது
இனியும் தொடர்ந்து சம நீதி சமூகநீதி பேசும்..
வாழ்த்துகள் உதய்
Udhayanidhi Stalin
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
No comments:
Post a Comment