உன்னை நினைக்கும் போதெல்லாம் கண்ணில்
நீர் கோர்க்கிறது..
உன்னை நினைத்தாலே
நெஞ்சில் ஈரம் சுரக்கிறது
உன்னைப் பற்றி பேச தொடங்கினால்
மனம் குதூகலிக்கிறது
..
உன்னை ஏன் எப்போதும்
கொண்டாட வேண்டும் என எண்ணுவதுண்டு..
வாழ்ந்த காலமெல்லாம்
இனத்திற்காக உழைத்த
உன்னை..
எப்படி கொண்டாடி தீர்ப்பதென்றே தெரியவில்லை..
மனிதனுக்கு தூக்கமும் ஒய்வும் கட்டாய தேவை ஆனால்
நீயோ ஓய்வின்றி உழைத்தாய்
..
வாழும் காலமெல்லாம்
உன்னை கண்டு கதறியவர்கள்
நீ..
இல்லாத போதும்
கதறுவதை நிறுத்தவில்லை..
உன் சாவில் கூட
பகை கொண்டிருந்த கூட்டம்
இன்றும் பதறுகிறது
உன் பேனா கண்டு
..
நீ
இந்திய அரசியலையே புரட்டிப்போட்டவன்
இன்னமும்
கைரிக்சா இழுத்துக்கொண்டுதானிருக்கிறது
ஆனால் நீ..
முப்பதாண்டு முன்பு
பாடம் நடத்தினாய்..
உன் சிந்தனை
தொலைநோக்காய் இருந்தது
நீ ..
செயல்படுத்தியது தான்
இந்திய அரசியலின்
பாட புத்தகம் ..
அரசியலின் இலக்கணம் நீ..
உன்னை படிக்காமல்
எவரும் பொதுவாழ்வில் ஜொலிக்கமுடியாது..
..
உன் அரசியல் பாமரனுக்கானது
பள்ளத்தில் கிடப்போரை
படிகளில் ஏற்றிட
நீ வகுத்த சூத்திரம் சிலருக்கு
எரிச்சலை தந்தது ..
உன் அரிச்சுவடி தான்
அரசியல் பயில்வோர்க்கு பாலபாடம்..
நீ செதுக்கிய தமிழ்நாடு
தமிழனின் புகழ் பாடுகிறது ..
..
பசித்தவனுக்கு மீன் சோறு போடாமல்
மீன் பிடிக்க கற்றுதந்து
மானம் காத்த மகேசனே!..
சுயமரியாதை உணர்வூட்டி
சுயமாய் தன்மானத்தோடு
தன் நம்பிக்கையோடும்
வாழ..
கல்வியே முக்கியமென
முதல் பட்டதாரிக்கு
கல்வி கட்டணமில்லாமல்
புதிய தொடக்கம் கண்டவனே
பெண்களுக்கு கல்வி முக்கியமென்ற பேராசான் பெரியாரின் கொள்கை வழி
திட்டங்கள் வகுத்தாய்
பெண்கள் உரிமை பெற்று
சமூகம் சிறக்க முன்னேறுகண்டு
பேரானந்தம்..
பெண்கல்வி சமூகத்தை புரட்டிபோடும்..
சொத்தில் சம உரிமை
அம்பேத்கர் தோற்ற இடத்தில்
வென்று காட்டி அவர் வாழ்வில்
நம்பிக்கை எனும் ஒளியேற்றிய தகப்பன் நீ..
..
சமூகநீதி காவலனே! எல்லோருக்கும் எல்லாமென்ற
கோட்பாட்டை வடிவமைத்த
ஆண்டவனே!
புறமுதுகில் குத்தியோரையும்
மன்னித்த மாமன்னனே!..
வறியவர் நிலைகண்டு
அவர்தம் வாழ்வு முன்னேற
திட்டங்கள் தீட்டிய அமைச்சனே!
எல்லோருக்கும் இனியவனே!..
வாழ்க! நின்புகழ்!!..
..
உன் அரசியல்
எம் இனத்திற்கான அரசியல்
உன் அரசியல்
எம் மொழிகாகானது
உன் அரசியல்
எம் மக்களுக்கானது
உன் அரசியல்
இனப் பகைவர் உணர்ந்ததைப்போல்
எம் மக்கள் உணரவில்லை என்ற வருத்தம் உண்டு..
ஆனால் அதைப் பற்றி
கவலைப் பட்டவனில்லை ..
உன் சிந்தனையும் செயலும்
எமக்காகதான் இருந்ததென்பதை
நீ
இல்லாத போது உணர்கிறார்கள்
..
ஆசானே..
அருந்தமிழே..
எங்கள் வேந்தனே!!..
வழிகாட்டியே..
வாழ்வியல்
சித்தாந்தமே..
மாசற்ற மாமணியே !!..
மதுரமே..
மங்காத ஒளிவிளக்கே..
எங்கள் களனியே..
எங்கள் செருக்கே..
பெருவுடையாரே..
பெருஞ்சுவரே..
ஞானத் தந்தையே!!
வாழ்க! நின்புகழ்!!..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment