Monday, July 3, 2023

மாமன்னன் ..
சமூக அவலங்களை இன்னும் இங்கே ஏன் தேவை பெரியாரிய கருத்துகள் என்பதையும் இந்த கட்டமைப்பே "கௌரவம்" எனும் போதையில் வீழ்ந்து கிடைப்பதை என்னதான் அதிகாரத்தில் அமர்த்தினாலும் எங்கள் முன் பொம்மலாட்ட பொம்மைதான் என்பதையும் அதன் வலியையும் மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறது ..
..
வடிவேலு எனும் "மகாகலைஞன்" வாழ்ந்துகாட்டியிருக்கிறார் .. ஃபஹத் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகரில் ஒருவர் அவரின் கண்கள் அவரை உடல்மொழியை,குணத்தை அவரின் பாத்திரத்தை பேசுகிறது.. நூறுபக்க வசனத்தை அவரின் கண் மொழி நொடியில் உணர்த்திவிடுகிறது .. உதய் சிறந்த கதை தேர்வை அரசியல் சமசரம் செய்து கொள்ளாமல் நடித்திருப்பது கவனத்தை ஈர்க்கும் 
.. 
சமூகநீதி என பேசிக்கொண்டிருந்தாலும் இன்னமும் சம நீதியை நம்மால்  வழங்க முடியவில்லை என்ற உண்மை நம்மை அறைகிறது..  சில காட்சிகள் நுண்ணரசியலை எது நமக்கு சாத்தியம் பாதுகாப்பு என்பதை சொல்கிறது .. வடிவேலு வீட்டில் புத்தரும் அம்பேத்கரும் ஆனால் பிரச்சனையை தீர்க்க முதல்வரை சந்தித்த விட்டு போகும் போது பாத்துப்போ என்கிற போது நான் பழைய மாமன்னனல்ல என வடிவேலு சொல்வார் அப்போது பெரியாரை காட்டுகிறார்கள் மெல்லிய புரிதல் வருகிறது தமிழ்நாட்டில் பெரியாரெனும் "பெருஞ்சுவரே" காக்கும் வழிநடத்தும் ஒருங்கிணைக்கும் என்பதை உணர்த்துகிறது  நமது அடையாளம் பெரியார் தான்
..
எத்தனையோ பேர் சொல்லியும் உட்காரமாட்டார்ண்ணு சொல்லுறீயே நீ உட்கார சொன்னீயா ..?
, உங்க அப்பாவை நிக்கவைச்சது என் அடையாளம் உன்னை உட்கார சொன்னது என்னோட அரசியல் 
என கூர்மையான வசனங்கள்
மிரட்டல் நடிப்பு, காட்சிபடுத்திய விதம் அழகுதருகிறது 
தமிழ் சினிமாவில் இன்னமும் நாம் பேச வேண்டிய விவாதிக்க வேண்டிய புரிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் வரவேண்டும், தலித் அரசியலாக பார்க்காமல் தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் மனநோயை சீர்படுத்த வேண்டியதை தொடர்ந்து தமிழ் சினிமா செய்யும் இங்கு பேசாமல் வேறெங்கு பேச முடியும் .. 
சாதி மசுருல்லாம் இல்ல அப்பன் எனக்கு கொடுத்துவிட்டு போனது நான் என் மகனுக்கு நான் கொடுக்கணும் என்ற வசனம் உறைய வைக்கிறது 
..
பொழுதுபோக்கிற்கான படமல்ல சமூகத்தின் பழுதை நீக்க சொல்லும் படம் .. சமூகநீதி,சமநீதி வேண்டுமென்பதை சொல்லும் திரைப்படம்
 ..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment