Monday, December 25, 2023

பொன்முடி ..
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து வருமானவரித்துறை மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மூன்றாண்டு தண்டனையும் 50லட்சம் அபராதம் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது ..
..
உயர்நீதி மன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது  .. ஆனால் தீர்ப்பில்  உள்ள முரண்கள் கேள்வி எழுப்புகிறது .. வருமானவரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டிருப்பது  அபராதம் 10% விழுக்காட்டிற்கு மேல் இருப்பதும் இங்கே கேள்வி எழுகிறது இரண்டு பேரும் தலா 50 லட்சம் என்பது 1.75 கோடியில் ஏறக்குறைய 60% விழுக்காடு வருகிறது .. 
..
பொன்முடி துணைவியார் விசாலாட்சி அவர்களின் பெயரில் இயங்கும் விஷால் மோட்டார்ஸ் வருடம் ₹5 கோடி வியாபாரம் ஆவதாக வங்கி அதிகாரி சாட்சியம் அளித்திருக்கிறார் .. ஆனால் ₹1.75 அதிக வருவாய் என வருமான வரித்துறை  வழக்கு .. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்காது என வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள் .. எது எப்படியோ பாஜக தன்னை எதிர்ப்பவர்கள வழக்குகளில் தனிக்கவனம் செலுத்துவதும் வேண்டியவர்களை வைத்து சந்திப்பதும் தொடர்கதையாகிறது..
..
உயர்நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறது .. மேல்முறையீட்டிற்கான அவகாசம் தந்திருக்கிறது .. அலட்சியமாக இல்லாமல் நல்ல வழக்கறிஞர்களை கொண்டு வாதிட்டு இன்னும் திறமையான ஆடிட்டர் ஆலோசனையில் வழக்கை எதிர்க்கொள்ள வேண்டும் ..  இது ஊழல் வழக்காக நீதிமன்றம் கருதாமல் வருமானத்தை மீறிய (சொத்து/பணம்) என தீர்ப்பு   வழங்கியிருப்பதை கருத்தில் கொள்ளவேண்டும் .. இப்படி நிறைய முரண்கள் தீர்ப்பில் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.. ஆனாலும் திமுக மீது விழுந்த கரை .. அதை துடைத்து வெளிவரவேண்டியது 
அவசியம்..
..
காத்திருப்போம்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment